பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


அவர்களில் ஒருவர், “நீதிபதி அவர்களே! இதுவே எங்களுடைய முதல் குற்றம். அடுத்த தடவை இதை விடக் கொஞ்சம் மேலாகவே நடந்து கொள்ளுகிறோம். நிச்சயமாகச் சொல்லுகிறோம், இன்னொரு முறை குற்றம் புரியும்போது பிடிபடாமல் தப்பி விடுவோம்” என்று கூறினான்.

அவனுடைய பேச்சில் காணப்பட்ட திமிரானது நீதிபதியைச் சினம் கொள்ளச் செய்தது. ஆத்திரம் அடைந்த நீதிபதி அந்த ஒன்பது இளுைஞர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தார்.

தீர்ப்பைக் கண்டு உலகம் முழுதும் கண்டனம் எழுந்தது. கொடுரமான தண்டனை என்ற கூக்குரல் எங்கும் கிளம்பியது.

அப்பொழுது, ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினார்.

அந்த ஒன்பது பேர்களையும் காட்டுமிராண்டிகள் நிறைந்த ஒரு தீவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு, விக்டோரியா ராணி ஆட்சிக்காலத்திலேயே, அந்த ஒன்பது பேர்களின் தலைவரான சார்லஸ் டபி தேர்தலில் வெற்றி பெற்று, அதே அயர்லாந்து நாட்டிற்கு முதல் அமைச்சர் ஆகிவிட்டார்.

அதை அறிந்து ஆச்சரியம் அடைந்த விக்டோரியா ராணி, “மற்றவர்கள் என்ன ஆனார்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு முதல் அமைச்சரான சார்லஸ் டபி அளித்த பதில்.