பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


டோவருக்குப் புறப்பட்ட படகு ரயிலில் அவருடைய விலையுயர்ந்த நகைகள் அடங்கிய பெட்டியை அவர்களுடைய வேலைக்காரன் திருடிக் கொண்டு போய் விட்டான்.

பயணத்தை முடித்துக் கொண்டு சீமாட்டி பாரிஸ் நகரத்துக்குத் திரும்பி வந்தார். போலீஸாரிடம் புகார் செய்தார். அதைக் காதில் வாங்கிக் கொண்ட போலீஸ் கமிஷனர், "அப்படியா, சரிதான். இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த நகைகள் உங்களுக்குத் திரும்பக் கிடைக்க வழி இருக்கிறது. பிளாக் பாங்க் மூலமாக அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். நீங்கள் போய் அவர்களைக் கேளுங்கள்” என்றார்.

"பிளாக் பாங்கா?” என்று கேட்டார் சீமாட்டி

ஆமாம் உங்களைப்போலவே ஒருவர் அண்மையில் சுமார் 40,000 பவுன்கள் பெறுமதியுடைய பங்குப் பத்திரங்களை இழந்து விட்டார். 8,000 பிராங்குகள் அந்த பிளாக் பாங்கியில் அவர் கட்டிய பிறகு அந்தப் பத்திரங்கள் அவருக்குத் திரும்பக் கிடைத்துவிட்டன. நீங்களும் அவர்களை அணுகிக் கேட்டுப் பாருங்கள்” என்றார்.

“என்ன இப்படி ஒரு பாங்கா? இம்மாதிரி திருட்டு நடவடிக்கை நிகழ்வதற்கு நீங்கள் அனுமதித்து இருக்கிறீர்களா?” என்று போலிஸ் கமிஷனரைக் கேட்டார் சீமாட்டி.

“சீமாட்டியாரே, அந்த பாங்க் நடப்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களுடைய அனுமதியோடுதான் அது