பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


“தெரியுமே”என்றார் அக்பர்.

‘தெரியும் என்றால், நீயே படகை ஒட்டித் தொலை; பாவிப் படகுக்காரனைக் காணவில்லையே” என்றாள் கிழவி.

அக்பர் படகைச் செலுத்த, கிழவி அதிலே உட்கார்ந்திருந்தாள். -

படகு ஆற்றில் போய்க் கொண்டிருந்தபோது, "இந்த நாட்டை ஆட்சி புரிகின்ற மன்னனுக்குப் புத்தியே இல்லை. இருந்தால், ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டச் சொல்லி இருக்க மாட்டாரா?” என்று கடுகடுத்தாள் கிழவி.

உடனே, மாறுவேடத்தைக் களைந்துவிட்டு, "அம்மையே நான்தான் இந்த நாட்டின் அரசன்! இப்பொழுதே பாலம் கட்டுவதற்கு உத்தரவிடுகிறேன்” என்றார்.

அந்த வினாடி முதல் கிழவியின் சிடுமூஞ்சித்தனம் போன இடம் தெரியவில்லை.


(33) ந்த டாக்டர் ல்லையே!



இத்தாலியின் பிரபல நூலாசிரியர் பிராண்டல்லோ, ஸிஸிலி என்னும் கிராமத்தில் ஒரு சமயம் நோயுற்றிருந்தார்.

உள்ளூர் டாக்டர் ஒருவர், ஆசிரியருக்கு மருந்து கொடுத்து, ஆறுதல் கூற முற்பட்டார்.