பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

37


விருந்து முடிந்து எழுந்தபோது, நடிகரிடம் உபசாரமாக, “நண்பரே, தாங்கள் மறுபடியும் கூடிய சீக்கிரம் என் வீட்டிற்கு விருந்து உண்ண வரவேண்டும்” என்று கூறினார் நண்பர்.

“ஆகா, அதற்கு என்ன? தடையின்றி உண்ண வருகிறேன். ஏன்? இப்பொழுதே அதைத் தொடங்கி விடுகிறேனே" என்றார் நடிகர்.

பல விருந்துகளிலே, வயிறு நிறைவதே இல்லை!



(40) மிழில் பேசி வெற்றி பெற்றார்


அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கு இந்தியப் பிரதிநிதியாகச் சென்ற 'ஹிதவாதா' பத்திரிகை ஆசிரியர் ஏ.டி.மணி, அந்த மாகாணத்திலுள்ள அட்லாண்டா நகருக்குப் போயிருந்தார். அங்கே தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி எழுதுகிறார்:

வெள்ளையர் ஹோட்டல்களில் கருப்பர்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று முன்னரே எனக்குச் சிலர் எச்சரித்திருந்தார்கள்.

“நான் அட்லாண்டா நகருக்கு மாலைவேளையில் போய்ச் சேர்ந்தேன். எந்த ஹோட்டலுக்குப் போனாலும் வெள்ளையருக்கு மட்டும் என்ற பலகை வெளியே தொங்க விடப்பட்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அன்று இரவு நான் பட்டினி கிடக்கும்படி நேரிட்டது.