பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

39


‘எங்கள் நாட்டுக் கொடி விஷயமும் இதே கதை தான்! ஆனால், அதை நோக்கி, அண்ணாந்து நட்சத்திரங்களைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறோம்” என்றார் அமெரிக்கர். .

உலகில் எங்கே பார்த்தாலும் அரசு விதிக்கும் பல வகை வரிகளால் பொதுமக்கள் பெரிதும் சலிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது தெரியவருகிறது.



(42) கொள்கைப்படி டந்தார்



கிரீஸ் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன், பெரிய தத்துவ அறிஞர் ஒருவர் இருந்தார்.

“ஒரு காரியத்தை விட, இன்னொரு காரியம் சிறந்தது என உறுதியாகக் கூறுவதற்கு ஏற்றபடி அறிவை யாரும் அடைந்து விட முடியாது' என்ற 'ஐயக் கொள்கை”, அவருடைய கொள்கையாகும்.

இந்தக் கொள்கையைக் கற்றுக் கொடுத்த இவருடைய ஆசிரியர் ஒரு நாள் வழியில் போய்க் கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் ஒரு குழியில் விழுந்து விட்டார். அவரால் வெளியே வர இயலவில்லை. -

அந்தச் சமயத்தில் அவ்வழியாக வந்த சீடர் தத்துவ அறிஞரின் நிலைமையைப் பார்த்தார். “இந்தக் கிழவரை வெளியே தூக்கி விடுவதால் ஏதேனும் நன்மை உண்டாகும் என்று எண்ணுவதற்குப் போதுமான காரணம் இல்லை” என