(57) கவிஞரின் போக்கு
இத்தாலியின் பிரபல கவிஞர் தாந்தே ஒரு நாள் தெருவில் உட்கார்ந்தபடியே மூன்று மணி நேரம் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அன்றைய தினம் திருவிழா நடந்து கொண்டிருந்தது. விழா முடிந்ததைச் சில நண்பர்கள் கவிஞர்களிடம் கூறினார்கள். ஆனால், விழா முடிந்ததாக அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை.
(58)
பதிப்பாளரின் குழப்பம்
பிரசித்தி பெற்ற புத்தகப் பதிப்பாளர் ஒருவர், தினமும் தாம் சந்தித்து, உரையாடல்களில் கேட்ட சிறப்பான கருத்துக்கள் ஆலோசனைகள், பதிப்பின் தந்திரங்கள் எல்லாவற்றையும் அவ்வப்போது துண்டு துண்டாக எழுதி தம்முடைய சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டே இருப்பார். இரவில் தனியே உட்கார்ந்து, நினைவுக் குறிப்புக்கள் அனைத்தையும் கவனமாக ஆராய்ந்து, விளக்கமாக எழுதி, ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டே தூங்கச் செல்வார்.
ஒரு நாள், பிரபல கதாசிரியர் ஒருவர், சிறு காகிதத் துண்டில் 'டிங்கிள்ஸ் பீல்' என்ற ஒரே வார்த்தையை எழுதி, அந்தப் பதிப்பாளரின் சட்டைப் பைக்குள், அவருக்குத் தெரியாமல் போட்டு விட்டார்.