பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


அடுத்தவரிடம் கொடுத்தார். "அப்படியே ஒருவர் பின் ஒருவராக மாறி கடைசியில் மன்னரிடம் போய்ச் சேரட்டும்” என்றார்.

அந்தப் பனிக்கட்டி, மன்னரிடம் போய்ச் சேர்ந்த போது அது ஒரு பட்டாணிக் கடலை அளவாகச் சிறிதாகியது.

வருமானம் ஏன் குறைந்து கொண்டு போகிறது என்ற காரணத்தை மன்னர் உணர்ந்தார்.



(65) புதிய தவியின் லுவல்



எலியட்பால் என்பவர் பிரபல ஆசிரியர், அவருடைய புகழ் காரணமாக அரசாங்கத்தில் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. “போர் முனையிலிருந்து திரும்பிய வீரர்களைக் கவனிக்கும் இயக்குநர்" என்று அந்தப் பதவிக்குப் பெயர்.

சுருக்கெழுத்தும் தட்டச்சும் தெரிந்த ஒரு பெண்ணைச் செயலாளராக நியமித்துக் கொண்டார் இயக்குனர். ஆனால், அந்தச் செயலாளருக்கு வேலை எதுவும் இல்லை.

போர் முனையிலிருந்து திரும்பிய 2,50,000 வீரர்களின் பட்டியல் ஒன்று புழுதி அடைந்து ஆவணக் காப்பகத்தில் கிடந்தது. அதை எடுத்து அந்தச் செயலாளரிடம் கொடுத்து, அதற்கு நான்கு பிரதிகள் டைப்செய்து கொண்டு வரும்படி கூறினார் இயக்குநர்.

அதன்பின் அவரும் மூன்றுமாதங்கள் உல்லாசப் பயணம் சென்று விட்டார்.