பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

71


நீங்கள் கூறுவதை என்னுடைய அரசு அப்படியே ஏற்றுக் கொள்கிறது” என்றார் லிங்கன்.

“இதைக் கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது”என்று கூறிவிட்டு பெருமிதத்தோடு திரும்பினார் பாதிரியார்.

“பாதிரியார் அவர்களே'! கொஞ்சம் பொறுங்கள்; ஒரு விஷயம். ஞாயிற்றுக் கிழமை போரிடும் இந்த அக்கிரமத்தை ஒழிப்பதற்கு உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, இன்னும் ஒரு காரியத்தை நீங்கள் செய்யவேண்டும்” என்றார் லிங்கன்.

“ஜனாதிபதி அவர்களே! அது என்ன?” என்று கேட்டார் பாதிரியார். -

"அது ஒன்றும் பிரமாதம் இல்லை. புரட்சித் தளபதிகள் இந்த ஞாயிற்றுக் கிழமைகளில், நம்முடைய போர் வீரர்களைச் சும்மா இருக்கும்படி விட்டு விடச் செய்யுங்கள். அவ்வளவுதான்” எனறார் லிங்கன்.



(78) ழைப்பாளிக்குப் தவி யர்வு



அமெரிக்காவில், மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான திரை அரங்கைப் பார்வையிடச் சென்றார் உரிமையாளர்.