74
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
முன்னர், அறிவித்தது போல இன்னும் ஒரு மடங்கு சேர்த்து இரண்டாயிரம் பொன்னைக் கொடுத்துக் கவிஞரை அழைத்துவருமாறு பணித்தான்.
ஆனால், மன்னனின் இரண்டு மடங்கு பரிசைப் பெறக் கவிஞர் உயிரோடில்லை. .
என்றாலும், கவிஞரின் சகோதரி, மன்னன் அளித்த பொன்னைப் பெற்றுக் கவிஞர் திட்டமிட்டிருந்த அணையைக் கட்டி முடித்தார். கவிஞரின் விருப்பம் நிறைவேறியது.
'கவிஞர் கட்டிய அணை' என்று பாரசீகம் அதைக் கொண்டாடியது.
(80)
அவர் ஒருவரே
"நீங்கள் இதுவரை நடத்திய குத்துச் சண்டைகளில், உங்களை அதிகச் சிரமப்படுத்தியவர் யார்?" என்று ஒரு நிருபர் ஜோலூயியிடம் கேட்டார்.
"வருமான வரி அதிகாரி!” என்று உடனே பதில் அளித்தார் ஜோலுயி.
(81)
வறுமையிலும் கைகொடுத்தது
உலகின் தலைசிறந்த தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ். அவருடைய பொருளாதார நூலைப் படித்தே தம்முடைய