பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

83


அவ்வளவு பாடுபட்டு அவன் எழுதியும் பல ஆண்டுகள் எந்தப் பத்திரிகையும் அவனைச் சீந்தவில்லை.

அதற்காக அவன் தளர்ந்தானா? எழுதிக் குவித்துக் கொண்டிருந்தான். தபாலில் அனுப்பிக் கொண்டே இருந்தான். திரும்பி வந்து கொண்டே இருந்தது.

எப்படியோ, ஒரு பத்திரிகை ஆசிரியர் கருணை கூர்ந்து அவனுடைய படைப்பு ஒன்றைப் பிரசுரித்து விட்டார்.

அதன் பின்னர், அவனுடைய எழுத்தை உணர்ந்த பத்திரிகாசிரியர்கள் விரும்பிப் பிரசுரிக்கத் தொடங்கிவிட்டனர்.

அடித்தது யோகம்! அவனுடைய கதைகளுக்கு ஏகக் கிராக்கி. பிரசுரிக்காத பத்திரிகைகளே இல்லை.

பின்னர், வார்த்தைக்கு மூன்று பவுன் கொடுத்து, அவனுடைய கதைகளைப் பிரசுரிக்கும் உரிமை பெற்றனர் பலர்.

அந்த எழுத்தாளர் யார்?

ஆங்கில இலக்கிய வானிலே ஒளியாகத் திகழ்ந்தவர் சார்லஸ் டிக்கன்ஸ்!



(90) முயற்சியே திருவினை


ஹென்றி எவ்பர்க் என்பவன் வாலிப ஓவியக் கலைஞன்.

அவனுக்குத் திடீரென நரம்பு வியாதியால் கைகளும் கால்களும் முடங்கிச் செயலற்று விட்டன.