பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

85


'கிறிஸ்தியன் ஸயின்ஸ் மானிட்டர்' என்ற பத்திரிகைக்கும் சந்தாதாரர் ஒருவரிடமிருந்து கடிதம் வந்தது.

"அன்புள்ள ஐயா,

ஒரு வருடத்துக்கு முன், தங்கள் பத்திரிகைக்கு நான் சந்தா செலுத்தினேன், ஒரு வருட முடிவில் எனக்குத் திருப்தி ஏற்படாவிட்டால், என்னுடைய சந்தாத் தொகையைத் திருப்பி விடுவதாக அப்போது நீங்கள் வாக்களித்தீர்கள், இப்பொழுது, அப்படியே அதைத் திரும்பப் பெற விரும்புகிறேன்.

"ஆனால், சற்று யோசித்துப் பார்த்த போது, உங்களுக்கு வீண் சிரமம் கொடுப்பானேன் என்று தோன்றியது. ஆகவே, அந்தத் தொகையை அடுத்த ஆண்டுச் சந்தாவுக்கு ஈடு செய்துகொள்வீர்களாக" என்று எனக்கு குறிப்பிட்டிருந்தார், அந்தக் கடிதத்தில்.



(92) விலை திப்பற்ற ம்சம்



பாக்தாத் நகரில் ஞானி ஒருவர் இருந்தார். பலர் அவரிடம் போய் ஆலோசனை கேட்பார்கள். -

எவருக்கும் மறுக்காமல், அவரவர்களுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்குவார்.ஞானி. ஆனால் யாரிடமும் வெகுமதி எதையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.

இளைஞன் ஒருவன். ஏராளமாகச் செலவழித்தவன். அதனால் ஒரு பயனும் அடையாதவன்.