பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 61


கூடுகிறதும் இன்னும் மற்றவர்களுக்கும் உச்சாகம் உண்டாக்கத்தக்க விரோதங்களை எழுப்புகிறதும் அன்னியசரக்குகளைத் தடுக்கவேண்டும் என்னும் ஆரவாரஞ் செய்வதுவுமாகிய வீண் விரோதங்களை விளைவிப்பார்களோ ஒருக்காலும் விளைவிக்கமாட்டார்கள்.

இத்தியாதி விஷயங்களையும் ஆராயாது செய்வது அவதிக்கிடமேயாம். தற்காலமுள்ள பிரிட்டிஷ் ராஜாங்கத்துள் இத்தேசத்தில் வாழும் சுதேசிகளே பெரும்பாலும் இராஜாங்கத்தொழில்களை நடாத்திவருகின்றார்கள். ஆங்கிலேயர்களோ அந்தந்த டிஸ்டிரிகட்டுகளில் ஒருவரோ இருவரோ இருந்து இராட்சியபாரத்தை தாங்கிவருகின்றார்கள்.

இத்தகைய இராஜ்ஜியத்தில் நமது சுதேசிகள் கருத்து எவ்வகையாகக் காணப்படுவதென்னில் ஒவ்வோர் டிஸ்டிரிக்ட்டுகளிலும் ஆங்கிலேயருள் ஒருவர் இருவர் இருந்து நடத்தி வருந் தொழில்களையும் தடுத்து அவர்களை சீமைக்கனுப்பி விட்டு தங்கள் சகலகாரியங்களையும் நடத்திக் கொள்ள வேண்டும் என்னும் பேரவாபோலும்.

இவ்வகைப் பேரவாவுக்கு ஓர் யானைகதை உண்டு. அதை எழுதுவதில் பயனில்லை. ஆயினும் தற்காலமுள்ள ஓர் டிஸ்டிரிக்ட்டில் டிஸ்டிரிக்ட் ஜர்ஜூம், டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட்டும், ஜாயின்டு மாஜிஸ்டிரேட்டும் சுதேசிகளாக இருந்து குடிகளை அதிக உபத்திரவஞ் செய்வதால் அவ்விடமுள்ளக் குடிகள் யாவருஞ்சேர்ந்து பிரிட்டிஷ் ராஜாங்கத்தோருக்கு விண்ணப்பம் அனுப்பி இவ்விடமுள்ள பெருத்த உத்தியோகஸ்தர்கள் யாவரும் ஆங்கிலேயர்களாகவே இருக்கவேண்டும் என்று கேட்கப்போவதாய் தெரியவருகின்றது.

இவ்வகையாய் சுதேசிகளுக்குள்ள குறைகளை சுதேசிகளே தெரிந்துக்கொள்ள சக்த்தியற்றவர்களும் அக்குடிகளை நிவர்த்திக்க அதிகாரம் அற்றவர்களும் ஒருவரை ஒருவர் நம்ப நம்பிக்கையற்றவர்களும் ஒருவருக்கொருவரைத் தாழ்த்தி பொறாமெய் மிகுந்த ஒற்றுமெயற்றவர்களுமானோர்க்கு சுயராட்சியம் வேண்டும் என்பது வீண்கலகம் என்றே விளங்குகின்றது.

இம்மேறை உண்டாம் வீண்கலகங்களை அடக்கத்தக்க கூட்டங்கள் ஏற்பட்டு அவர்களுக்கு வேண்டிய விவகாரங்களை விளக்குவதுடன் குடிகளுக்கும் இராஜாங்கத்தாருக்கும் அன்பு பொருந்தி வாழவேண்டிய வாழ்க்கை ஒழுக்கங்களை விவரித்துவர வேண்டியது.

அன்னியதேச சரக்குகளை வாங்கவிடாமல் தடுக்கும் கூட்டத்தார் கூச்சலை அமர்த்தி அந்தந்த சரக்குகள் தங்களுடைய தேசத்தில் உண்டு செய்யத்தக்க முயற்சிகளைத் தேட வேண்டியது.

இராஜநிந்தனைக் கூட்டத்தார் கூட்டங்களில் சேராமலும் அவர்கட் பிரசங்கங்களுக்குச் செவிகொடாமலும் இடங்கொடாமலுந் தடுத்து ஒரு மனிதன் செய்யும் இராஜநிந்தனா செய்கைகளுக்கு ஆயிரங்குடிகள் அறிவின்றி படுங்கஷ்டங்களை விளக்கிக் காண்பிக்கவேண்டியது.

ஆதலின் நம்தேய கனதனவான்களும் கூட்டின் பெருத்த வியாபாரிகளும் கலை நூல் வல்லவர்களும் ஒன்றுசேர்ந்து சுயராட்சியம் வேண்டும் என்னும் கூட்டத்தாருக்கு அமைதிகூறி அவர்களுள் யாரார் சுயராட்சியம் வேண்டும் என்கிறார்களோ அவர்கள் யாவரையும் வரவழைத்து எவ்வகை ஆதரவால் எவ்வழியாய் சுயராட்சியம் நடத்தப்போகின்றீர்கள் என்று கேழ்க்க வேண்டியது.

அத்தகையக் கூட்டங்களுக்கு அவர்கள் வராமலும் தக்க மறுமொழி அளிக்காமலும் நின்று விடுவார்களாயின் இக்கூட்டத்தோரே அச்சுயராட்சியக் கூட்டத்தாருக்கு மறுப்பும், கூட்டத்தாராய் விளக்கி குடிகளை ஆதரிக்கவேண்டியது.

- 2:10: ஆகஸ்டு 19, 1908 -

அங்கங்குள்ள கனவான்கள் ஒன்று கூடி இராஜவிசுவாசக் கூட்டத்தாரென்று கூறி குடிகள் யாவரையுந் தருவித்து முற்காலத்திருந்த தேசச்