பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 65


இவைகளை விடுத்து நமது தேயத்தில் பொய்வேஷ வித்தியாவிருத்திகளும், பொய் வார்த்தை விருத்திகளும் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை தற்கால வங்காள விருத்தாந்தத்தில் அறியலாம்.

அதாவது வங்காளம் மைமன்சிங் ஜில்லா பாஜித்பூரிலுள்ள சில சுதேசிகள் போலீஸ் கான்ஸ்டேபில்களைப் போல் வேஷந்தரித்துக் கொண்டு பொய்வாரண்டொன்று தயார் செய்து ஓர் சுதேசகனவான் வீட்டில் சென்று சோதிக்க நுழைந்து அவனுக்குள்ள சாமானங்களையும் நோட்டுகளையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்களாம். இத்தகைய வித்தையில் மிகுந்த சுதேசிகள் இன்னும் எத்தகைய வித்தையில் சுயராட்சியம் செய்வார்கள் என்பதை சுருக்கத்தில் ஆலோசிக்குங்கால் மீனை மீன் பிடித்துண்பது போல் சுதேசிகளே சுதேசிகளை வதைத்து சுகக்கேட்டை உண்டு செய்வார்கள் போலும்.

- 2:13; செப்டம்பர் 9, 1908 -

அதாவது நமது தேயத்தோர் நூதனமாக சாதிகளை ஏற்படுத்திக் கொண்டு உப்பு அதிகரித்தால் நீரும், நீரதிகரித்தால் உப்புமிட்டுக் கொள்ளுவதுபோல் தங்களுக்கு லாபமும் சுகமும் கிடைக்கக்கூடிய இடங்களில் சாதியில்லை என்பது போல் நடித்து அன்னியர் தங்களுக்கு லாபமும் சுகமும் கோறும் இடங்களுக்கு சாதி உண்டு என்று நடிப்பது வழக்கமாதலின் சாதிபேதம் இல்லா திராவிடர்கள் யாவரும் அஞ்ச வேண்டியவர்களேயாம்.

காரணம் யாதென்பீரேல், புத்ததன்மங்களையும், பௌத்தர்களையும் பாழாக்கிய வேஷபிராமணர்கள் தங்கள் சீவனத்திற்காய் நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட சாதிகளையும், மதங்களையும் பரவச்செய்தற்கு தங்களுக்கு எதிரிகளாக நின்ற சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்கள் சாதிக்கும், மதத்திற்கும் அன்னியப்பட்டவர்களாதலின் அவர்களை பராயர் பரயமர் என்று கூறி அவ்வாக்கியத்தையே பறையர் பறையர் என்றுந் தாழ்ந்தசாதிகள் என்றும் வகுத்து பலவகையாலும் துன்பஞ் செய்து நசித்து வருங்காலத்தில் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் வந்து தோன்றி வாடி மடிந்துபோகத்தக்க பயிர்கள் நீரைக் கண்டவுடன் நிமிர்ந்து சீவித்தது போல் சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்களுக்கு நேரிட்டுவந்த சில துன்பங்கள் தவிர்ந்து சுகமுற்றார்கள்.

அக்காலத்தில் பிரிட்டிஷ் இராஜாங்கத்தோர் இத்தேசத்துப் படைவீரரை நியமிக்குங்கால் சாதிகளையே சதமென்று நம்பியிருந்தவர்கள் யாவரும் பட்டாளங்களிலும், சாப்பிரிஸ்மைனரிலும் போய்ச்சேர்ந்தால் தங்கள் சாதி கெட்டுப்போமென்று விலகிவிட்டார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களோ அவ்வகையில் விலகாமல் பிரிட்டிஷ் ராஜரீக ராணுவங்களில் சேர்ந்து காடுமலைவனாந்திரங்களை சீர்திருத்தி தேசத்திற்கு தேசவழிகளை உண்டு செய்து யுத்த களங்களில் உயிர்கொடுத்து உதிரஞ்சிந்த பாடுபட்டார்கள்.

உயித்தியங்கள் யாவும் அடங்கி தேசங்கள் சீர்பெற்று சாதிபேதமற்ற திராவிடர் சுகித்திருப்பதை சகியாமல் பட்டாளங்களில் சேர்ந்தால் சாதி கெட்டுப்போமென்று விலகிநின்றவர்கள் யாவரும் பட்டாளங்களில் வந்து சேர்ந்து சாதி பேதமற்ற திராவிடர்களுக்கு இடம் கிடைக்காமல் செய்துவிட்டார்கள், செய்தும் வருகின்றார்கள்.

பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் வந்து தோன்றி இராணுவ உத்தியோகஸ்தர்களுக்கும், குடிகளுக்கும் வைத்தியசாலைகளை நியமித்தபோது அப்பாத்தகிரிகளிலும், டிரசர்களிலும், கம்பவுண்டர்களிலும் சேர்ந்தால் பிணங்களை அறுக்க வேண்டும், பலசாதிகளைத் தொடவேண்டும் என்று பிராமண மதஸ்தர்கள் யாவரும் சேராமல் விலகிவிட்டார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களோ யாதொரு களங்கமுமின்றி அவ்வுத்தியோகங்களில் பிரவேசித்து யுத்தகளங்களிலும் சென்று யுத்தவீரர்