பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 73


திராவிடர்களின் திருத்தத்தை ஆலோசிப்போமாக.

- 2:20; அக்டோபர் 28, 1908 -


16. பஞ்சமர்மீதும் பரிதாபம்போலும்

கீலக வருஷம் வைகாசிமீ 24உ வெளிவந்த ‘இந்தியா’ என்னும் பத்திரிகையில் ஆர்.என். சுவாமி என்பவர் தங்களுக்காக கல்விசாலைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதில் பஞ்சமர்களுக்கென்று வேறு பிரத்தியேகப் பள்ளிக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் எழுதியிருக்கின்றார்.

இவரது பரிதாபம் யாதோ விளங்கவில்லை. தற்காலம் பஞ்சமர்களுக்கென்று ஏற்படுத்தியிருக்கும் பள்ளிக்கூடங்களில் பாப்பார்கள் உபாத்தியாயராகவிருந்து பாடங்கள் கற்பிப்பதை பரிதாபம், அறியார்போலும். அங்ஙனம் அறிந்திருந்தபோதிலும் பாப்பான் படிக்கப்போகும் இடங்களிலும் பணஞ்சம்பாதிக்கும் இடங்களிலும் சாதியாசாரம் கிடையாது. பஞ்சமன் என்போன் படிக்கப்போகும் இடங்களிலும் பணஞ்சம்பாதிக்கப் போகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரம் உண்டு என்பது இவரது பரிதாபக்கடிதத்தால் பறக்க விளங்குகின்றது.

பள்ளிக்கூடங் கற்பிப்பதில் பஞ்சமருக்கென்று பிரத்தியேகப் பள்ளிக்கூடம் ஏற்படுத்த இதம் கூறியவர் சுயராட்சியம் பெற்றுக் கொண்டால் பிரத்தியேகப்பள்ளிக்கூட எண்ணத்தையும் ஒழித்துவிட்டு நெருங்கவிடாமல் துரத்துவார் என்பது திண்ணம்.

ஆதலின் ஏழைகள் மீது இவர் எதார்த்த இதக்கமுற்றவராயின், ஆ, எமது சுதேசிகளே, மலமெடுக்குந் தோட்டிகளுக்கும் சாதிவுண்டு குறவருக்குஞ் சாதி உண்டு வில்லியருக்கும் சாதி உண்டு பார்ப்பாருக்கும் சாதி உண்டு என்று எல்லோரும் ஒன்றாய் சேர்ந்துக்கொண்டு இத்தேசப் பூர்வ சுதேசிகளைப் பஞ்சமர்கள் என்றுத் தாழ்த்திப் பிரித்துவைப்பது அழகன்று என்றும் சகலரும் ஒத்துவாழ்வதே புகழ் என்றும் கூறி அவைகளுக்கொப்ப சீர்திருத்தங்களையும் ஒற்றுமெயும் ஒழுக்கங்களையும் போதிப்பர். அங்ஙனமின்றிப் பஞ்சமர்களுக்கு என்று பிரத்தியேகப் பள்ளிக்கூடம் போட வேண்டும் என்பது பாப்பார்கள் கூடி பணந் தானம் செய்வதுபோலாம்.

- 2:1; சூன் 17, 1908 -


17. பரோடா இராஜா அவர்களின் பெருநீதி

தன்தேசத்துள்ள மத சாதிநாற்ற / சருவ வனாச் சாரமதை யகற்றிமேலோன்
கன்மமதில் நற்கருமங் கடைபிடித்து / கற்றவர்க ளெவராயி னவரே நாட்டின்
மன்னுதொழில் சீரமைச்சு யாவும்பெற்று / வாழ்கவென வரமளித்த மன்னவர்க்கு
பின்னமற வாளுகலை யோதுவித்த / பிரிட்டீஷார் கலைநிதியம் வாழிமாதோ.

கனந்தங்கிய பரோடா இராஜா அவர்கள் கற்றக் கல்வியின் அழகே அழகு, அவர் கற்றக் கல்விக்குத் தக்கவாறு தானடாத்தும் இராஜாங்கங்களின் அமைப்பே அமைப்பு. அத்தகைய அமைப்பில் சாதிநாற்றமின்றி அன்பு பாராட்டி ஐக்கியமடையச் செய்த வாழ்க்கையே வாழ்க்கை. இத்தகைய சுகவாழ்க்கையைத் தன் குடிகளுக்கு அளித்தாளுந் தயாநிதியாம் மன்னன் மனமகிழ மகவுதித்த மாட்சியே மாட்சி. இம்மாட்சிபெற்ற மகவும் மன்னுமரணியும் நீடூழி வாழ்க. அவ்வாழ்க்கைக்கு ஆதாரமாம் பிரிட்டிஷ் ஆதிபத்தியம் அனவரதம் வாழ்க வாழ்கவேயாம்.

- 2:4; குலை 8, 1908 -


18. மநுக்கள்மீதில்லா சீவகாருண்யம் மாடுகளின் மீதுங் குதிரைகளின் மீதும் உண்டாமோ

இல்லை காரணம் - அன்பில்லாமெய், ஒற்றுமெயற்றமெய், பொறாமெயுற்ற மெய், தன்னவரை ஏற்குமெய், அன்னியரைத் தூற்றுமெய் வாய்ந்த தேகிகள் பத்து பெயர் ஒன்றுகூடி மற்றொருவனைப் பார்த்து இவன் புலையன், நீச்சன், தாழ்ந்த சாதியனென சொல்லிக்கொண்டே வருவார்களாயின் அவன் வித்தையும் புத்தியும் சன்மார்க்கமும் கெட்டு நாணடைந்து சீர்கெட்டுப்போகின்றான்.