பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 77


இவர்கள் கல்வி, நல்லொழுக்கத்திற்குத் தக்கவாறு எத்தகைய உத்தியோகங்களும் தடையின்றி கொடுத்துவரவேண்டியது என்னும் ஐந்தாவது கோரிக்கையும்,

முநிசிபில் சங்கங்களிலும், கிராம சங்கங்களிலும் இக்குலத்தோரின் கஷ்டநிஷ்டூரங்களை அறிந்து பேசுதற்குச் சகல டிஸ்டிரிக்ட்டுகளிலும் ஜில்லாக்களிலும், ஒருவர் பெருந்தொகையான வரி செலுத்தக் கூடாதவராயினும் கல்வி, நல்லொழுக்கம் கண்டு இக்குலத்தோர் யாரை நியமிக்கின்றார்களோ அவர்களை ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டு காரியாதிகளை நடத்த வேண்டும் என்னும் ஆறாம் கோரிக்கையும்,

அக்காலத்துள்ள ஜெயில் கோர்ட் 464-வது சட்டத்தில் பறையர்களைச் சகலத் தாழ்ந்த வேலைகளையுஞ் செய்விக்கலாம் என்று ஏற்படுத்தியிருப்பதை மாற்றவேண்டும் என்னும் ஏழாவது கோரிக்கையும்,

இத்தேசத்திலுள்ள பொதுவான குளங்களிலும், கிணறுகளிலும் இக்குலத்தோர் யாதாமொரு தடையுமின்றி ஜலம் மொண்டு சுகிக்கவேண்டிய தென்னும் எட்டாவது கோரிக்கையும்,

ஆங்கிலேய துரைகளிராது இந்துக்கள் உத்தியோகஞ்செய்யும் ஆபீசுகளிலும், கச்சேரிகளிலும் இக்குலத்தோர் உள்ளுக்கு வரப்போகாது, உட்காரப்போகாது என்னும் தடைகளை அகற்றி இக்குலத்தோரை உள்ளுக்கு வரச்செய்து பிரயாதை உடனுக்குடன் விசாரித்து நீதி அளித்து அனுப்ப வேண்டும் என்னும் ஒன்பதாவது கோரிக்கையும்,

இக்குலத்தோருள் பெருந்தொகையோர் வாசஞ்செய்யும் கிராமங்களில் மணியக்காரன் முநிசிப்பு அலுவல்களில் இவர்களில் பொறுப்பானவர்கள் ஒவ்வொருவரை நியமிப்பதுடன் கலைக்டர் துரையவர்கள் கிராமங்களுக்குள் வருங்கால் நேரில் இவர்களை விசாரித்து நீதி அளிக்கவேண்டும் என்னும் பத்தாவது கோரிக்கையும், குறிப்பித்திருந்தோம்.

இக்கோரிக்கைகள் யாவும் அக்காலத்தில் காங்கிரஸ் கமிட்டிக்குக் காரியதரிசியாய் இருந்த ம-அ-அ-ஸ்ரீ எம். வீரராகவாச்சாரியாரவர்கள் கண்ணுற்று இப்பொதுநல விண்ணப்பம் வந்து சேர்ந்தது அவற்றை சங்கத்தோர் முன்பு வைத்து விவரந் தெரிவிப்போம் என்று பதில் எழுதி இருந்தார்.

இக்குலத்தோரைப்பற்றிய விண்ணப்பம் இவர்களுக்கு அனுப்பியும் இவர்கள் நமக்கு பதில் அளித்தும் ஏறக்குறைய பதினேழு வருடம் ஆகிறது. இதுவரையிலும் அவ்விண்ணப்பத்தைப் பற்றியேனும், இக்குலத்தோரின் கஷ்டநிஷ்டூரங்களைப் பற்றியேனும் இவர்கள் யாதொரு சீர்திருத்தமும் செய்ததில்லை.

நாஷனல் காங்கிரஸ் கமிட்டியார் என்று வெளிவந்து அறுபதுலட்சத் தொகைக்கு மேற்பட்டும், ஆறுபெயருக்கு ஒருவராகக் காணும் பெருந் தொகையோராயுள்ள இவ்வேழைக்குடிகளின் கஷ்டங்களைக் கவனித்து கவர்ன்மென்றாருக்குத் தெரிவிக்காமல் தங்கள் கஷ்டங்களையும், குறைகளையும் மட்டும் கவர்ன்மென்றாருக்குத் தெரிவித்துக் கொள்ளும் கூட்டத்தாருக்கு இந்து நாஷனல் காங்கிரஸ் என்னும் பெயர் வைக்கக்கூடுமோ.

இத்தகைய சுயப்பிரயோசனத்தை நாடுவோருக்கு வங்காள சாதியோர் காங்கிரஸென்றேனும் அல்லது பிராமண சாதியோர் காங்கிரஸென்றேனும் வைத்துக் கொள்ளவேண்டியது.

அங்ஙனமின்றி தங்களுக்கான சுயப்பிரயோசனங்களை மட்டிலும் இராஜாங்கத்தோருக்குத் தெரிவித்துக் கொண்டு வருகின்றார்கள். சாதிபேதமற்ற மகமதியருக்குள்ளக் குறைகளையேனும், சாதிபேதமற்ற திராவிடர்கள் எழுப்பியுள்ள பொதுநல விண்ணப்பக் குறைகளையேனும் கவனித்தவர்களில்லை.

இவ்வகையாய்த் தங்கள் சுயநலம் கருதும் கூட்டத்தார் இவ்விந்து தேசத்தில் இருப்பதால் யாதொரு பயனுமில்லை. இல்லாமல் போவதினால் யாதொரு கெடுதியும் இல்லை.