பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 79


சகலரும் முயன்று வேண்டிய பொருட்களை சேகரித்தீயலாமென்று முடிவுசெய்து,

மேற்சொன்னபடி சங்கத்தோருக்கு எழுதிய பதில் கடிதம்.

நாஷனல் பண்ட் அன்டு இன்டஸ்டிரியல் அசோசேஷன் கூட்டத்தாரவர்களுக்கு.

ஐயா,

தங்களுடைய கூட்டத்தார் விஷயமாக அந்தரங்கத்தில் பெருந்தொகையார் ஆட்சேபனையும், பகிரங்கத்தில் சிறுந்தொகையார் ஆட்சேபனையும் இருக்கின்றது.

1. ஆட்சேபனை.

இக்கூட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் பெருந்தொகை பிராமணர்களாய் இருப்பதினாலேயாம்.

இக்கூட்டம் எப்போது நாஷனலாக ஏற்பட்டதோ அதின் அங்கங்களும் அப்படியாகவே இருத்தல் வேண்டும்.

அதாவது - பிரசிடென்டுகளில் ஒரு பிராமணர், ஒரு யூரேஷியர், ஒரு மகமதியர் இருந்து காரியாதிகளை சமயம்போல் நடத்திவரவேண்டியது.

செக்ரிடேரிகளிலும், டிரஷரர்களிலும் ஒரு பிராமணர், ஒரு நன்பிராமணர், ஒரு மகமதியர் ஆக மூன்று பெயர் பொக்கிஷம் வைக்கவும், வாங்கவும் இருத்தல் வேண்டியது.

டைரக்ட்டர்களில் 4-பிராமணர்கள், 4-யூரேஷியர்கள், 4-நன்பிராமணர்கள், 4-மகமதியர்கள், 4-நன்காஸ்ட்டிரவீடியன்ஸ்கள் இருத்தல் வேண்டும்.

இப்படியிருப்பதில் அந்தந்த வகுப்பாருள் நான்கு பிள்ளைகளை அவரவர்கள் கற்கக்கூடிய வித்தைகளை கற்பிக்கப் பணவுதவி செய்ய வேண்டியது.

கற்றுக்கொள்ளும் பிள்ளைகளில் யாதொரு பேதமில்லாமல் தொழில் அளித்து வேலைகள் கொடுத்து சீவிக்கச்செய்ய வேண்டியது.

தீபாவளிக்கு முன்பே இத்தகையக் கூட்டத்தாரை பயிரங்கத்தில் நியமித்து நோட்டீசுகள் அச்சிட்டு வெளியிடுவீர்களானால் எங்களால் கூடிய முயற்சியை நாங்கள் எடுத்துக் கொள்ளக்கூடும்.

அப்படிக்கின்றி பணம் வசூல் செய்யும்போது சாதிபேதம் கிடையாது.

அப்பணத்தை சிலவிடும்போதும், வேலைகற்பிக்கும்போதும், சாலைகளில் வேலைக்காரர்களை நியமனஞ் செய்யும்போதும் சாதிபேதம் உண்டாகும் போல் காணுகின்றது. ஆதலின் இத்தகைய பேதங்களில்லாமல் சகலகாரியங்களும் நடத்துவோம் என்னும் மேற்குறித்துள்ளபடி அங்கங்களும் பேதமில்லாமல் சேருமாயின் பணம் சேகரிக்கக்கூடிய முயற்சி எடுத்துக் கொள்ளுவோம்.

மேற்குறித்தவண்ணம் அங்கங்கள் சேராதவிஷயத்தில் நாங்கள் அதில் பிரவேசித்து காரியங்களை நடத்த முடியாதென்றும் இத்தகையப் பொதுவானக் கூட்டம் நிகழாதது விசனமென்றும் கடிதம் எழுதி ஒருவாரத்திற்கு மேற்பட்டும் யாதொரு பதிலும் கிடைக்கவில்லை.

இதுவும் நாஷனல்பண்டு அண்டு இன்டஸ்டிரியல் அசோசேஷனா அன்றேல் வேறாயென்பது பின்னுக்கு விளங்கும்.

- 2:19; அக்டோபர் 21, 1908 -

22. சாதிபேதமற்ற திராவிடர்களாகும் ஏழைக்குடிகளுக்கு நாஷனல் காங்கிரஸ் கமிட்டியார் யாதோருபகாரஞ் செய்யாவிட்டாலும் சென்னை மஹாஜன சபையோர் சிற்சில உபகாரங்கள் செய்யவில்லையோ என்பாரும் உண்டு

சென்னை மஹா ஜனசபையோர் உபகாரத்தை இவ்விடம் விளக்குகின்றோம். 1892 வருஷம் ஏப்ரல் மாதம் மஹாசபைக் கூடுவதாகவும், அக்கூட்டத்தில் ஏரிமராமத்துக்கள், கிணறுகளின் விருத்திகள், ரோட்டுகளின் மராமத்துக்கள், வெளிஜில்லாக்களின் சீர்திருத்தங்களைப் பேசுவதுடன் பறையர்களுக்கான