பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80 / அயோத்திதாசர் சிந்தனைகள்


உபகாரங்களும் யோசிக்கப் போகிறபடியால் ஒவ்வோர் ஜில்லாக்களிலும் இருந்து பிரதிநிதிகள் வந்து அவரவர்களுக்குள்ளக் குறைகளை வெளியிட்டு சீர்திருத்தஞ் செய்துக் கொள்ளலாம் என்னும் விண்ணப்பம் அச்சிட்டு பலஜில்லாக்களுக்கும் அநுப்பியதுபோல் நீலகிரிக்கு எமக்குமோர் பத்திரிகை வந்துசேர்ந்தது. அவற்றை நாம் வாசித்து சாதிபேதமற்ற திராவிட கனவான்களுக்கு அறிக்கை செய்து ஓர் பெருங்கூட்டம் இயற்றி காங்கிரஸ் கமிட்டியாரவர்களுக்கு, நாம் அனுப்பியுள்ள பொதுநல விண்ணப்பத்தை அவர்கள் கவனியாது மஹாஜனசபையில் இவ்வேழைக்குடிகளைப் பற்றி ஏதோ ஆலோசிக்கப்போகின்றார்களாம். அதற்காக இவ்வேழைக் குடிகளில் யாதாமொருவர் இக்குலத்தோருக்கு என்று பிரதிநிதியாகச் சென்று காரியாதிகளை ஆலோசித்துவருவது நலமென்று கூறினோம். அதனை வினவிய அன்பர்கள் யாவரும் ஏகோபித்து தாங்களே அதற்குப் பிரதிநிதியாகச் சென்று காரியாதிகளை ஆலோசிக்க வேண்டும் என்று வழிசிலவு முதலியவைகளுக்கு வேணவுதவி புரிந்து எம்மை சென்னைக்கு அநுப்பிவைத்தார்கள்.

யான் இவ்விடம் வந்துசேர்ந்து விக்டோரியா டவுன் ஹாலில் கூடியுள்ள மஹாஜனசபை பிரதிநிதிகளுடன் யாமும் ஓர் பிரதிநிதியாய் உழ்க்கார்ந்திருந்தோம்.

அக்காலத்தில் அச்சபையில் அக்கிராசனாதிபதியாக வீற்றிருந்த ஆனரேபில் பி. அரங்கைய நாயுடுகாரவர்கள் எழுந்து நின்று சிலஜில்லாக்களின் குறைகளைச் சொல்லிக்கொண்டே வந்து (பறையர் பிராபலம்) என்னும் வாக்கியத்தை பென்சலாலடித்து இவர்களைப் பற்றி வேண்டி வரையில் சில துரைகள் எழுதியிருக்கின்றார்கள் ஆதலின் இவாள் குறைகளை நாம் ஆலோசிப்பதில் யாது பயனும் இல்லை என்று பேசிவருங்கால் சபையின் காரியதரிசி ம-அ-அ-ஸ்ரீ எம். வீரராகவாச்சாரியார் அவர்கள் அக்கிராசனாதிபதியை நோக்கி நீலகிரியிலிருந்து அக்குலத்தோருக்கு ஓர் பிரதிநிதி வந்திருக்கின்றாரென்று கூறினார்.

உடனே நாமெழுந்து சபையோருக்கு வந்தனங்கூறி ஐயா, இக் குலத்தோரைப் பற்றி சிலதுரைமக்கள் உபகாரம் செய்கின்றார்களென்று கூறி தாங்களெல்லோரும் மவுனஞ் சாதிப்பது அழகன்று, உங்களாலேயே இக்குலத்தோர் தாழ்த்தப்பட்டு சீர்குலைந்து இருக்கின்றபடியால் நீங்களே இவர்களை சீர்திருத்தி சுகம்பெறச் செய்ய வேண்டும் என்றேன்.

அதற்கு சபாநாயகர் இது உள்சீர்திருத்த சங்கமாதலின் இவர்களால் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

யான் சபாநாயகரை நோக்கி ஐயா, உலகத்திலுள்ள சகலசாதியோருக்கும் தெய்வம் பொதுவென்றும், கோவில் பொதுவென்றும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அங்ஙனமிருக்க இக்குலத்தோரிலுள்ள வைணவ மதத்தோர்களை விஷ்ணுவின் கோவில்களுக்குள்ளும், சைவ மதத்தோரை சிவன் கோவில்களுக்குள்ளும் ஏன் சேர்க்கப்படாது. அப்படி சேர்ப்பதினால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்க்கை சுகமடையமாட்டார்களா மதங்களும் பிரபலமடையாதா என்றோம்.

எல்லோரும் ஏகமயமாய் நின்று அப்படியே கோவிலுக்குள் சேர்க்கப்படாதென்று கூச்சலிடுங்கால் தஞ்சாவூர் பிரதிநிதி ம-அ-அ-ஸ்ரீ சிவராமசாஸ்திரியாரவர்கள் எழுந்து உங்கள் குலத்தோருக்கு மதுரை வீரசாமி, காட்டேரிசாமி, கருப்பண்ணசாமி கொடுத்திருக்கின்றோம். சிவன் சாமியும், விஷ்ணுசாமியும் உங்கள் குலத்தோருக்கு உரியதல்ல என்று ஆட்சேபித்தார்.

யாம் அவரை நோக்கி ஐயா, அங்ஙனமிருக்குமாயின் உங்கள் சுவாமிகள் எமக்கு வேண்டாம். இக்குலத்து சிறுவர்களுக்கு கிராமங்கள் தோறும் கல்விசாலைகள் வைத்து நான்காவது வகுப்புவரையில் இலவசமான கல்வி கற்பிப்பதற்கும் இக்குலத்து கிராம வாசிகளுக்கு அங்கங்கு வெறுமனேயுள்ள