பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 115


அங்ஙனமின்றி வீணேகூட்டங்களியற்றி (ஆறு வரிகள் தெளிவில்லை).

- 2:50: மே 28, 1909 -


55. திருவாங்கூர் திவான் ம-அ-அ-ஸ்ரீ இராஜகோபாலச்சாரியார் சி.ஐ.இ. அவர்கள் சீர்திருத்தம்

பூர்வத்தில் சோழதேசமென்றும், மலையாளு வாசமென்றும், கொடுந்தமிழ் நாடென்றும் வழங்கப்பெற்ற திருவாங்கூர் தேசத்தில் பௌத்த மடங்கள் நிறைந்து சகல ஏழைகளுக்கும் புசிப்பளித்து பாதுகாக்கும் அன்னசத்திரங்கள் நிறைந்தும் விளங்கிவந்ததாக பெளத்த சரித்திரங்களால் தெரிகின்றது. அத்தகைய அன்னசத்திரங்களில் தற்காலம் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியானவர்கள் சேர்ந்துக் கொண்டு தங்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் புசித்துக் கொண்டு வேறொரு தொழிலுமின்றி சோம்பேரிகளாய்த் திரிவதைக் கண்ணாறக் கண்டதிவானவர்கள் சத்திரங்களில் வட்டிக்கும் அன்னத்தை தூரதேச வழிப்பிரயாணிகளுக்கு அளிக்க வேண்டுமேயன்றி உள்ளூரில் உக்கார்ந்து தின்னும் பிராமணர்களுக்கு சத்திரத்தின் அன்னம் அளிக்கப்படாதென திருவாங்கூர் கெஜட்டில் பிரசுரித்திருப்பதாக 28-5-09 சுதேசமித்திரனில் எம்.எஸ்.ஏ அவர்கள் விடுத்துள்ள கடிதத்தால் தெரிகின்றது. சகலரும் சத்திர சாதத்தைத் தின்று சோம்பேரிகளாகத் திரியாது சுருசுருப்பினின்று உழைத்து பாடுபட்டு முன்னேறுவதற்காய் திவானவர்கள் செய்துள்ள சீர்திருத்தமே மிக்க மேலானதாகும். ஆயினும் சிலர் முறுமுறுப்பார்கள் அதன் சுகம் பின்னால் விளங்கும்.

- 2:51; சூன் 2, 1909 -


56. சுதேச சீர்திருத்தத்துள் சாதிபேதமற்ற திராவிடர்களாம் சுதேசிகளின் திருத்தம்

சாதிபேதமற்ற திராவிடர்களே இத்தேசத்தின் பூர்வக்குடிகளாகும். இவர்கள் பெரும்பாலும் தமிழ் பாஷா விருத்தியைக் கோரிநின்றவர்களாதலின் தென்னாட்டுள் தமிழரென்றும், வடநாட்டார் திராவிடரென்றும், திராவிட பெளத்தாளென்றும் வழங்கிவந்ததுமன்றி இலங்காதீவத்திலுள்ளோர் சாஸ்திரங்களிலும், சரித்திரங்களிலும் இப்பூர்வக்குடிகளை திராவிட பௌத்தர்கள் என்று வரைந்திருப்பதுமன்றி வழங்கிக்கொண்டும் வருகின்றார்கள்.

சாக்கைய முநிவரால் அருளிச்செய்த சத்திய தன்மமானது இவ் விந்துதேச முழுவதும் பரவி இருந்தகாலத்தில் இவர்களும் எங்கும் பரவி கணிதசாஸ்திர வல்லபத்தால் வள்ளுவர், சாக்கையர், நிமித்தகர்கள் என்றும், தமிழ்பாஷை இலக்கிய இலக்கணம் வாசித்துக் கவிபாடும் திறத்தால் கவிவாணர், பாணரென்றும், அக்கவிகளை யாழுடன் கலந்து பாடுவோரை யாழ்ப்பாணரென்றும், பூமிகளைப் பண்படுத்திப் பயிரிட்டு சருவ சீவர்களுக்கும் உபகாரிகளாகவும், ஈகையுள்ளோராகவும் இருப்போர்களை வேளாளர்கள் என்றும், ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை செட்டாக மாறி வியாபாரஞ் செய்வோர்களை வாணிபரென்றும், குடிகளைக் கார்த்து இராட்சிய பாரந் தாங்குவோர்களை மன்னவர்கள் என்றும், புத்தசங்கஞ்சேர்ந்து ஞானவிசாரிணை உள்ளவர்களை சிரமணர், சமணர்கள் என்றும், சமண நிலை முதிர்ந்து உபநயனம் பெற்று சருவ வுயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்கும் தண் மெயாம் சாந்த நிலைபெற்று இரு பிறப்பாய் மாற்றிப் பிறக்கும் வல்ல மெய் உற்றோர்களை அறஹத்துக்கள், அந்தணர்கள் என்றும் வழங்கிவந்தார்கள்.

இப்பெயர்கள் யாவும் அவரவர்கள் தொழிலுக்கும், செயலுக்குத் தக்கவாறு விவேகிகளால் வகுத்தப் பெயர்களாகும்.

எவ்வகையிலென்னில் நமது விவேகடமிகுத்த பிரிட்டிஷ் துரைத்தனத்தார் தங்கள் ஆங்கிலோ பாஷையில் போதகர்களுக்குப் (பிரீஸ்டென்றும்)