பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இவர்களது குணநிலை, பஞ்சகாவியங்களின் சரித்திர வாதரவினாலும் இவர்களுக்குள் அழைத்துக்கொள்ளும் பெயர்களினாலும், சிந்தித்துவரும் தெய்வத்தாலும் நெடுங்காலமாகவும், பரம்பரையாகவும் தங்கள் கையிருப்பில் வைத்திருந்து தற்காலம் அச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்திருக்கும் வைத்திய நூல், நீதிநூல், ஞானநூல், கணித நூல் முதலிய சாஸ்திரங்களாலும், இவர்களை சாக்கைய பௌத்தர்கள் என்றேனும், திராவிடபெளத்தர்கள் என்றேனும் திட்டமாகக் கூறத்தகும்.

இத்தகைய ஆதாரமுள்ளவர்கள் தங்கள் குணச்செயல்களிலேனும் புத்ததருமத்தைத் தழுவி நிற்கின்றார்களா என்று ஆராயுங்கால் தங்களை பலவகை இம்சைகள் செய்தும், ஜீவனவிருத்திகளைக் கெடுத்தும், சுத்தஜலங்களை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும் பல்வலி, இடுக்கங்களால் பதங்குலைத்துவரும் பராயசாதியோர்களில் ஒருவன் வியாதியால் பீடிக்கப்பட்டு வீதியில் விழுந்தபோதிலும், தவறி ஓர் கிணற்றில் விழுந்தபோதிலும், வண்டி குதிரைகளால் ஓர் விபத்து நேரிட்டபோதிலும் அதைக் கண்டுவிடுவார்களானால் தங்கள் சத்துருக்களாச்சுதே, தங்களை சீருக்கு வரவிடாமல் தடுப்பவர்களாச்சுதே என்று அவர்கள் செய்துவரும் தீங்குகள் யாவையும் எண்ணாமல் அவர்களுக்கு நேரிட்டுள்ள ஆபத்துகளினின்று நீக்கியெடுத்து சுகம்பெறச் செய்து வருகின்றார்கள்.

ஈதன்றி பராயசாதியோர்களின் பலவகை இடுக்கங்களால் சுகசீவனம் கிடைக்காவிடில் ஓர் வண்டியை இழுத்தேனும், விறகு சுமந்தேனும், புல் விற்றேனும் தன்னுடையக் குடும்பத்தை போஷிப்பார்களேயன்றி சூதினாலும், மோசத்தாலும், பொய்யாலும், வஞ்சினத்தாலும் சீவிக்கமாட்டார்கள்.

இவ்வகை குணச்செயல்களாலும் இவர்கள் புத்ததன்மத்தைத் தழுவிய ஜீவகாருண்யமும், முயற்சியும் உள்ளவர்கள் என்று கூறத்தகும்.

இவர்கள் நெடுங்காலமாக நல்ல அந்தஸ்திலும் விவேக விருத்தியிலும் இருந்த நிலை.

சாதிபேதமற்ற திராவிடர்கள் பராயசாதியோர்களால், பலவகை இடுக்கங்களைப் பெற்று சீரழிந்திருந்தபோதிலும்,

கிறிஸ்துவ மிஷநெரியார்களின் கருணையால் பி.ஏ., எம்.ஏ. முதலிய கவுரதாபட்டங்களைப் பெற்றுள்ளதுமன்றி அஜுர் செரஸ்ததார், ஆனரெரி சர்ஜன், ஸ்கூல் இன்ஸ்பெக்ட்டர், ரிஜிஸ்டிரார், ஆனரெரி மாஜிஸ்டிரேட் என்னும் கெளரதா உத்தியோகங்களிலும் இருந்து இராயபாதூரென்னும் சிறந்த பட்டங்களும் பெற்று இராஜவிசுவாசத்தினின்று காரியாதிகளை நடத்தி வந்ததுமன்றி நாளதுவரையில் நடாத்தியும் வருகின்றார்கள்.

இத்தகைய கல்வி கற்கக்கூடிய விவேகவிருத்தியும் உத்தியோகங்களைக் காப்பாற்றக் கூடிய ஜாக்கிரதையும், இராஜவிசுவாசத்தில் நிலைத்தலுமாகியச் செயல்களும் இவர்கள் ஆர்வத்திலிருந்த நல்ல அந்தஸ்தினாலும், விவேக விருத்தியாலும், புத்ததன்ம ஒழுக்கத்தினாலும் எங்கெங்கு தங்களை ஆதரித்தக் கூடிய இடங்கள் கிடைத்ததோ அங்கங்கு விவேக விருத்தியிலும், உத்தியோக, விருத்தியிலும், இராஜவிசுவாச விருத்தியிலும் நிலைத்திருக்கின்றார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களைப்போல் பராய சாதியோர்களால் நசுங்கி குன்றாமல் அவர்கள் சார்பாய் நிற்கும் படுகர், தொதுவர், கோத்தர், குறும்பர், வில்லியர், குறவர் இவர்கள் மீது மிஷநெரிமார்கள் வேண கருணைவைத்து கல்விபயிற்சி செய்துவந்தபோதினும் கல்வி விருத்தியும் உத்தியோக விருத்தியும் இல்லாமலே மயங்கி நிற்கின்றார்கள். காரணம் - இவர்கள் பூர்வம் நல்ல அந்தஸ்தில் இல்லாமல் தற்காலம் இருக்கும் நிலையிலேயே இருந்தவர்களாதலின் கருணை தங்கிய. மிஷநெரியார்கள் யாதுவிருத்தி செய்யினும் முழு விருத்தியடையாமல் இயங்குகின்றார்கள்.