பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120 / அயோத்திதாசர் சிந்தனைகள்


திரிக்குறள்

ஐந்தவித்தானாற்றலகல் விசும்புளார்க்கோமான் / இந்திரனேசாலுங்கரி.

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் றொடர்பாட்டோ டாரம்ப முந்தி துறந்தான் முநி.

இந்திராநகரென்று பெயர்வழங்கிவந்த விவரம்

சீவகசிந்தாமணி

சங்குவிம்முநித்திலஞ் / சாந்தோடேந்து பூண்முலை
கொங்குவிம்மு தோதைதாழ் / கூந்தலேந்து சாயலா
ரிங்கிதர் களிப்பினா / லெய்தியாடும் பூம்பொழில்
செங்கணிந்திர நகர்ச் / செல்வமென்ன தன்னதே.

காசிக்கலம்பகம்

பரவுபூண்டிந்திரர் திருவொடும் பொலிந்து / முடிவினு முடியா முழுநலங்கொடுக்குஞ்

புத்தபிரானை இந்திரரென்று கொண்டாடி இந்தியர்களெனப் பெயர் பெற்றவர்களுள் ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதியென ஒவ்வோர் பாஷையை சாதிக்குங் கூட்டத்தோருள் இந்திரர் தன்மத்தை எங்கும் பரவச் செய்து பெரும்பாலும் இந்திரவிழா கொண்டாடிவந்தவர்கள் திராவிடர்களேயாகும்.

இத்தகைய திராவிடர்கள் புத்தசங்கம் என்னும் இந்திர வியாரத்துட் சேர்ந்து சத்திய தன்மத்தைப் பின்பற்றி சமணநிலையினின்று தன்னைப் பார்ப்போர்களை பார்ப்பார்களென்றும், இஸ்திரீகள் சங்கத்துள் சேர்ந்தோர்களைப் பார்ப்பினிகள் என்றும் வழங்கிவந்ததுமன்றி பசுக்களையும், துறவிகளையும், பாலர்களையும், பெண்களையும், பார்ப்பார்களையும் இடுக்கஞ்செய்யாது காக்கும் அரசர்களாகவும் இருந்தார்கள்.

சீவகசிந்தாமணி

தன்பான் மனையா ளயலான் / றலைக்கண்டு பின்னு
மின்பா லடிசிற் கவர்கின்ற / கைப்பேடிபோல
நன்பால் பசுவேதுறந்தார் / பெண்டீர் பாலர் பார்ப்பா
ரென்பாரை யோம்பே ணெனின் / யானவனாவனென்றான்.

- 2:24: நவம்பர் 25, 1908 -

சாதிபேதமற்ற திராவிடர்களின் புத்ததன்ம தொழிற்பெயர்கள்

புத்தசங்கஞ் சேர்ந்து உண்மெய் உணர்ந்து தண்மெயுற்ற இரு பிறப்பாளருக்கு வடமொழியில் பிராமணரென்றும், தென்மொழியில் அந்தணர் என்றும்,

புஜபலபராக்கிரம க்ஷாத்திரியமிகுத்த சம்மாரகர்த்தர்களுக்கு வடமொழியில் க்ஷத்திரியரென்றும், தென்மொழியில் அரயரென்றும்,

ஒரு சரக்கைக்கொடுத்து மற்றொரு சரக்கை வாங்கி வியாபாரஞ் செய்வோர்களுக்கு வடமொழியில் வைசியரென்றும், தென்மொழியில் வாணிபர், செட்டியர், நாயகர், ரெட்டியரென்றும்,

கையையுங் காலையும் ஓர் இயந்திரமாகக் கொண்டு பலவகை சூஸ்திரங்களைச் செய்து பூமியைத் திருத்தி தானியவிருத்திச் செய்து சருவ சீவர்களுக்கும் உபகாரியானோர்களை வடமொழியில் சூஸ்திரர் சூத்திரரென்றும், தென்மொழியில் வேளாளர், மேழிச்செல்வர், பூபாக்கியரென்றும்,

இப்பூபாலர்களுக்கு தானியமுதலும் தனமுதலும் ஈய்ந்துக் காப்போர்களுக்கு முதலீவோர் முதலுடையோர் முதலியார்களென்றும்,

இவற்றுள் பயிரிடுந் தானியங்களை விற்கவும் வாங்கவும் உடையவர்களுக்கு பூவைசியரென்றும் மாடு முதலியவைகளைக் கொண்டு நெய், தயிறு, பால் விற்று தானியங்களை வாங்கிக் கொள்வோர்களுக்கு கோவைசியரென்றும், பொருள் கொடுத்து தானியம், நெய், பால் வாங்கி வியாபாரஞ் செய்வோருக்கு தனவைசியர் என்றும்,

மூன்றுபாகமாகப் பிரித்ததுமன்றி பூமியைத் திருத்தி விருத்தி செய்வோருக்கு உழவர், பள்ளர், உழவாளர், மேழியர், வேளாளரென்றும்,