பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மாணாக்கருக்கு பெயர் கற்போரென்றும். ஆசாரியர்க்குப் பெயர் ஆசான், தேசிகர், உபாத்தியாயர், பணிக்கரென்றும்,

அரசர் முதல் வணிகர், வேளாளர் வரை முக்குலத்தோர்க்கும் கருமக்கிரியைகளை நடத்துவோர்க்கு பெயர் சாக்கையர், வள்ளுவர், கருமத்தலைவர், நிமித்தகரென்றும்,

அறிவுள்ளோர்க்குப் பெயர் அறிஞர், சான்றோர், மிக்கோர், மேலோர், தகுதியோர், ஆய்ந்தோர். ஆன்றவர், உலக மேதாவியர், மேன்மக்களென்றும்,

அறிவில்லார்க்குப் பெயர் பொறியிலார், கவர், நீசர், புள்ளுவர், புல்லர், தீயோர், சிறியசிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேறார், முறையிலார், முகண்டர், மூர்க்கர், முசுடர், கீழோர், புல்லவர், கீழ்மக்களென்றும்,

- 2:25: டிசம்பர் 2, 1908 -

இத்தியாதி தொழிற்பெயருள் வேளாளரென்பதும், வாணியரென்பதும் சாதிப்பெயர்களாயிருக்க அவைகளையுந் தொழிற்பெயரிற் சேர்க்கலாமோ என்பாருமுண்டு.

முன்கலை திவாகரம், பின்கலை நிகண்டு முதலியவைகளில் அவற்றை தொழிற் பெயருள் சேர்த்துள்ளவற்றிற்குப் பகரமாய்

நறுந்தொகை - வாணிபம்

முதலுள பண்டங் கொண்டு வாணிபஞ்செய்
ததன்பய னுண்ணா வணிகரும் பதுரே

ஏறெழுபது - வேளாண்மெய்

ளெங்கோபக்கலிக்கடந்த / வேளாளர் வினைவயலு
பைங்கோல் முடிதிருத்த / பார்வேந்தர் முடிதிருத்தும்
பொங்கோதக் கனியானை / போர்வேந்தர் நடத்துகின்ற
செங்கோலைத் தாங்ருங்கோல் ஏறடிக்குஞ் சிறுகோலே.

திராவிட பெளத்தர்கள் அதனதன் செயலுக்கும், குணத்திற்கும், இடத்திற்கும் தக்கப்பெயர்களைக் கொடுத்து சாதிபேதமென்னும் களங்கின்றி சுகசீவிகளாக வாழ்ந்ததுமன்றி கிறீஸ்து பிறப்பதற்கு முன்பு 7-வது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து தென்மேற்குக் கரையோரமாக பாபிலோனியாவுக்கு இதே திராவிட பௌத்தர்கள் சென்று வியாபாரங் கொண்டுங் கொடுத்தும் இருக்கின்றார்கள். இதனை, புட்டிஸ்ட் இண்டியா 116-வது பக்கம் காணலாம்.

புத்தபிரானால் பாணினியாருக்கு வடமொழியையும், அகஸ்தியருக்குத் தென்மொழியையும் ஈய்ந்து இந்துதேசம் எங்கும் பரவச் செய்தகாலத்திலும் அவ்வட்சரங்களை பட்டைகளிலும், ஓலைகளிலும், கற்பாறைகளிலும், செப்பேடுகளிலும், பொன்னேடுகளிலும் பதிந்து ஆதியிற் பாதுகாத்து வந்தவர்களும் திராவிட பெளத்தர்களேயாவர். மேற்கண்டபடி இண்டியா 119-ம் பக்கம் காணலாம்.

வீரசோழிய விளக்கம்

திடமுடைய மும்மொழியாத் / திரிபிடக நிறைவிற்காய்
வடமொழியை பாணினுக்கு / வருத்தருவி யதற்கிணையாய்
தொடர்புடைய தென்மொழியை / யுலகெலாத் தொழுதேத்த
குடமுனிக்கு வற்புறுத்தார் / கொல்லாற்று பாகர்.

இந்துதேசத்தில் புத்ததன்மம் பரவியிருந்த காலம் அசோகச் சக்கிரவர்த்தியின் காலமுதல் கானிஷ்க்காவலரயில் எங்கும் சிறப்புற்று சாதிபேதமென்னும் ஒற்றுமெய்க்கேடு இல்லாமல் ஒருவருக்கொருவர் ஐக்கியமுற்று வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் விளங்கி இந்திரவியாரங்கள்தோரும் வானசாஸ்திரிகளாகவும், ஞானசாஸ்திரிகளாகவும், வித்தியா சாஸ்திரிகளாகவும், வைத்தியசாஸ்திரிகளாகவும் விளங்கி சகல சுகமும் அனுபவித்து வந்தார்கள்.

கிறீஸ்து பிறந்த ஐந்தாவது நூற்றாண்டுகளுக்குப் பின்னும் மணிவண்ணன், சீவகன் என்னும் அரசர்களுடைய காலத்தில் வட இந்தியா குமானுடரென்னும்