பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126 / அயோத்திதாசர் சிந்தனைகள்


வசிக்கும் புத்தசங்கத்தோர் வடநாடெங்கும் பாலிபாஷையையும், தென்னாடு எங்கும் சமஸ்கிருதமும் தமிழ் பாஷையையும் வழங்கிவந்தார்கள்.

அவற்றுள் மிலேச்சர்களோ எனில் தமிழ் பாஷையை சரிவரப் பேசுதற்கில்லாமல் கற்று கொண்டபோதிலும் சமஸ்கிருத பாஷையையும் அதனதன் சுலோகங்களையும் நாளுக்குநாள் கற்று புத்தசங்கத்து புருஷர் மடங்களில் புருஷர்களும், இஸ்திரீகள் மடங்களில் இஸ்திரீகளுஞ் சேர்ந்து விசாரிணைகளில் இருந்தபோதிலும் ஆரியக் கூத்தாடினாலுங் காரியத்தின் பேரில் கண்ணென்னும் முதுமொழிக்கு இணங்கத் தங்கள் நாணமற்ற மிலேச்சகுணம் மாறாது இஸ்திரீகள் விபச்சாரத் தொழிலிலும், புருஷர்கள் பணவாசைப் பெருக்கிலும் மாறாமலிருந்தார்கள்.

- 2:28; டிசம்பர் 23, 1908 -

வேஷபார்ப்பான் வேஷ பார்ப்பினி விவரம்

மணிமேகலை

பார்ப்பினிசாலி காப்புக்கடைகழித்து / கொண்டோர் பிழைத்த கண்டமஞ்சித்
தென்றிசை குமரி யாடிய வருவோன் / சூன்முதிருய்க்க துஞ்சியருள்யாமத்
தீன்றகுழவிக் கீன்றாளாகி / தோன்றாதொடைவயி னிட்டனநீங்க
புரிநூன் மார்பீர் பொய்யுரையாமோ / சாலிக்குண்டோ நவரெனவுரைத்து
நான்மறை மாக்களை நகுவணநிற்ப / வோதவந்தணர்க் கொவ்வாவென்றே
தாதைபூதியந் தன்மனைகடிதர / வாங்கவர் கள்வனென் றந்தணருறைதருங் கிராமமெங்கணுங் கடிஞையிற் கல்லிட / மிக்கசெல்வத்து விளங்கியோம் வாழுந்
தக்கணமதுரைதான் சென்றெய்தி.

இச்செய்யுள் பேதபாடம், பாகுபலி நாயனார் ஏட்டுப்பிரிதியிலும், மார்க்கலிங்கப் பண்டாரம் ஏட்டுப்பிரிதியிலும், பார்ப்பினி சீலி என்றும் சீலிக்குண்டோ தவரென்றும் வரைந்து வைத்திருக்கின்றார்கள்.

அஃது எவ்வகைப் பாடபேதமாகினுமாகுக. பாலிபாஷையில் புருஷமடங்களில் உள்ளோரை பிக்குகள் என்றும், இஸ்திரீமடங்களில் உள்ளோர்களை பிக்குணிகள் என்றும் திராவிட பாஷையில் புருடமடங்களில் உள்ளோர்களை பார்ப்பார்கள், சீலர்கள் என்றும், இஸ்திரீமடங்களில் உள்ளோர்களை பார்ப்பினிகள், சீலிகள் என்றும் வழங்கி வந்தவற்றுள் மிலைச்சப் புருஷர்களும் மிலைச்சஸ்திரீகளும் மடங்களுட் சேர்ந்தவர்களில் ஓர் பார்ப்பினி தங்கள் நாணமற்றச் செய்கையால் கள்ள புருஷனைச் சேர்ந்து கர்ப்பமுண்டாகி அதை மறைப்பதற்குத் தீர்த்தயாத்திரைப் போவதாகச் சொல்லி வெளியேறி சிலதினத்துள் யீன்ற குழவியை இதக்கமின்றி காட்டில் போட்டுவிட்டு ஒன்றுமறியாதவள் போல் வந்துசேர்ந்தும் அப்பிள்ளை மற்றொருவன் எடுத்து வளர்த்து வருங்கால் பார்ப்பினி தவருள்ளவளென்றும், அப்பிள்ளையும் களவுபிள்ளையாம் புலைச்சி மகனென்றும், மிலைச்சி மகனென்றும் அறிந்த பௌத்தர்கள் அவர்கள் மீது கல்லெறிந்து கிராமத்தைவிட்டு நீக்கதென்மதுரைப்போய் சேர்ந்துவிட்டார்கள்.

அதுபோல் புருஷர் மடங்களில் சேர்ந்திருந்த பார்ப்பார்களும் பொருளாசைவிடாது களவாடுவதை உணர்ந்து அவர்களையுந் துறத்தி சிறையில் இட்டுக்கொண்டு வந்தார்கள்.

சிலப்பதிகாரம்

வார்த்திகன்றன்னைக் காத்தனரோம்பி / கோத்தொழி லிளையவர் கோமுறையின்றிப் படுபொருள் வவ்வும் பார்ப்பா னிவனென / விடுசிறைக்கோட்டத் திட்டனராக.

இத்தகையாய் மிலைச்சர்களின் நாணாச்செயல்களை நாளுக்குநாள் அறிந்துவந்த திராவிடபௌத்தாள் இவர்களைச் சங்கங்களில் சேர்க்காமல் துறத்திவிட்டதின்பேரில் மிலைச்சக் கூட்டத்தோர் யாவரும் ஒன்றுகூடிக் கொண்டு வடமொழி சுலோகங்களில் சிலவற்றையும் கணிதங்களில் சிலவற்றையும் கற்று வடநாட்டில் உள்ளக் கல்வியற்றக் குடிகளுக்குத் தங்களை பிராமணர்கள் என்றும், தென்னாட்டில் உள்ளக் கல்வியற்றக் குடிகளுக்குத் தங்களை அந்தணர்கள் என்றுஞ் சொல்லி வஞ்சித்தும் பொருள் பறித்து தின்று