பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 129


இத்தேசக் குடிகளாகும் ஆந்திர கன்னட மராஷ்டக திராவிடர்களும் பிராமணவேஷம் ஆரம்பித்துக்கொண்ட விவரம்

இவ்வகையாக இன்னுஞ் சிலகாலம் மிலைச்சர்களை திராவிட பௌத்தர்கள் துறத்திக் கொண்டே வந்திருப்பார்களாயின் கல்வியற்ற சிற்றரசர்களும் பெருங்குடிகளும், மிலைச்சர்களின் வேஷபிராமணச் செயல்களை அறிந்துக் கொள்ளுவதுடன் விவேகமற்றவர்களுக்கு யதார்த்த பிராமணர்களின் செயல்களும் விளங்கிக்கொண்டே வரும்.

இதன் மத்தியில் இத்தேசக்குடிகளாகும் ஆந்திர, கன்னட, மராஷ்டக, திராவிடர்களுக்குட் சிலர் மிலைச்சர்கள் வேஷபிராமணச் செயல்களால் பெண்சாதிப் பிள்ளைகளுடன் சுகமாக வாழ்ந்து வருவதையும், சிற்றரசர்களும், பெருங்குடிகளும் அவர்களுக்கு வேண்டிய உபகாரங்களைச் செய்துவருதலையும் நாளுக்குநாள் பார்த்துவந்தவர்கள் இதுவே தந்திரமான சுகசீவனமென்று இவர்களும் பிராமண வேஷம் எடுத்துக் கொண்டார்கள்.

இவ்வகையாக மிலைச்சராம் ஆரியருடன் இத்தேச பலபாஷைக் குடிகளும் பிராமண வேஷமெடுத்துக் கொண்டபடியால் ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் வேஷங்களை வெளிவிடாமல் உள்ளுக்குள் விரோதத்தை வைத்துக்கொண்டு பிராமணரென்னும் பொதுப்பெயரை வைத்துக் கொண்டாலும் ஒருவர் பெண்ணை ஒருவர் விவாகஞ் செய்துக்கொள்ளாமலும், ஒருவர் வீட்டில் ஒருவர் புசிப்பெடுக்காமலும், நீங்கள் எப்படி பிராமணரானீர்கள் என்றால் தாங்களெப்படி பிராமணரானீர்கள் என்னும் கேழ்விபிறக்குமென்று உள்ளுக்குள் விரோதசிந்தை இருந்தபோதிலும் வெளிக்குக்காட்டிக் கொள்ளாது எல்லோரும் கூடிக்கொண்டு சிற்றரசர்களையும், பெருங் குடிகளையும் தங்களுக்கடங்கியும் தங்களை தொழுதும் வரும் ஏதுக்களை செய்துவிட்டு விவேகமிகுதியால் சகல வேஷபிராமணர்களின் விவரங்களையும் வெளிக்குப் பறைந்துவந்த சமணமுனிவர்களையும், கணிதவல்லவர்களாகும் சாக்கையர் வள்ளுவர்களையும், வித்தியா வல்லவர்களாகும் பாணர்களையும், தீயரென்றும், பறையரென்றுந் தாழ்ந்த சாதிகள் என்றுகூறி மிலைச்ச வேஷபிராமணர்களும், இத்தேச வேஷபிராமணர்களும் ஒன்றுகூடிக்கொண்டு தங்களைச்சார்ந்த கல்வியற்ற சிற்றரசர்களாலும், பெருங்குடிகளாலும் அவமதிக்கச்செய்து வந்தார்கள்.

விவேகிகளை விரோதச்சிந்தையால் தீயரென்று கூறிவந்தபோது சமணமுநிவர்கள் மேலோரின்னாரென்றும் கீழோரின்னாரென்றும் விளக்கிய விவரம்.

பின்கலை நிகண்டு - மேன்மக்கள் பெயர்

சான்றவர் மிக்கோர் நல்லோர் / தகுதியோர் மேலோராய்ந்தோர்
ஆன்றவ ருலகமேதா / வியரறிஞர்கள் பேராசான்.

கீழ்மக்கள் பெயர்

பொறியிலார் கயவர் நீசர் / புள்ளுவர் புல்லர் தீயோர்
சிறியசிந்தையர் கனிட்டர் / தீக்குணர் தீம்பர் தேரார்
முறையிலார் முசுடர் மூர்க்கர் / மூகை பல்லவரே யாவர்
மறையிலாக் கலர்மூவாறு / வின்னவா ரியருங் கீழோர்.

மிலைச்சர்கள் மித்திரபேதமாங் கொடுஞ் செயல்களை அறிந்து தீயோரை அணுகா திருக்கவேண்டுமென்று கூறியச்செய்யுள்.

மூதுரை

தீயோரைக் காண்பதுவும் தீதேதிருவற்ற / தீயாச்சொற் கேட்பதுவும் தீது - தீயோர்
குணங்களுரைப்பதுவுந் தீது அவரோ / டிணங்கியிருப்பதுவும் தீது.

மேன்மக்களாகும் திராவிடபௌத்தர்களைத் தீயரென்றும், பறையரென்றும்