பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132 / அயோத்திதாசர் சிந்தனைகள்


முன்கலை திவாகரம்

வள்ளுவர் சாக்கியரெனும்பெயர் மன்னர்க் / குள்படு கருமத்தலைவர்க் கொக்கும்.

இத்தகைய கன்மகுருக்கள் தொழில்கள் யாவையும் வேஷபிராமணர்கள் தங்கள் மித்திரதேத்தால் அபகரித்துக் கொண்டபடியால், சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர் என்னும் மேன்மக்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் வேஷபிராமணர்களைக் கண்டவிண்டங்களில் எல்லாம் அடித்துத் துரத்த ஆரம்பித்துக் கொண்டார்கள். வள்ளுவர்களின் குருபட்டங்களை தாங்கள் அபகரித்துக் கொண்டு சீவிக்க ஏற்பட்டுவிட்டபடியாலும் வள்ளுவர்களாலேயே வேஷபிராமணர்கள் பெரும்பாலும் தேசத்தைவிட்டு துரத்தப்பட்டதினாலும் வஞ்சினமிகுதியால் வள்ளுவர்களை முதற்பறையர்கள் என்று வகுத்து விட்டார்கள்.

அடியிற்குறித்துள்ள பாடலால் வள்ளுவர்கள் புத்தமார்க்க அரசர்களுக்குக் கன்மகுருக்களாயிருந்தது தெளிவாக விளங்கும்.

சீவகசிந்தாமணி

பூத்தகோங்குபோல் பொன்சுமந்துளா / ராச்சியார்நலக் காசேறுணானான்
கோத்தநித்திலக் கோதைமார்பினான் / வாய்த்தவன்னிரை வள்ளுவன் சொன்னான்.

திராவிட பௌத்தர்களுக்கு சத்துருக்களாகிய பராயசாதியோர்கள் தங்களுக்குள்ள விரோதச் சிந்தையாலும், பொறாமேயாலும் ரெவரன்ட் ராட்ளர் டிக்ஷ்நெரியில் கொடுத்துள்ள பதின்மூன்று பறையன் என்னும் பெயர்கள் தமிழ் பாஷை விருத்தி கலை நூற்களாகும் திவாகரம், நிகண்டு முதலிய இலக்கிய நூற்களிலும், இலக்கண நூற்களிலும், பூர்வகாவியங்களிலும் ஒன்றிலும் கிடையாது. வேபிராமணர்களின் கட்டுக்கதை நூற்களிலுங் கிடையாது.

திராவிட பௌத்தர்களாகும் மேன் மக்களைத் தாழ்த்திப் பாழ்படுத்த வேண்டுமென்னும் கெட்ட எண்ணத்தினால் பதின்மூன்றுவகைப் பறையர்களுண்டென்று பொய்யாக வகுத்து மணிகளையும், குப்பைகளையும் ஒன்றுசேர்த்துவைத்திருக்கின்றார்கள்.

இவ்வகையாக திராவிட பௌத்தர்களாம் மேன்மக்களை பறையர்கள் என்றும், தாழ்ந்த சாதியோர் என்றும் கூறிவந்த பெயர்கள் மகமதியர்கள் ஆளுகை வரையில் கேழ்வியில்லாமல் இருந்தது, கருணையும், விவேகமும் மிகுத்த பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றியபோது இவர்களைத் தாழ்த்தி வரும் விஷயங்கள் சிலது விசாரிணைக்கு வந்ததுடன் எலீஸ்துரை அவர்களால் கணிதசாஸ்திரிகளாகும் வள்ளுவர்கள் நூற்களையும், வித்துவ சாஸ்திரிகளாகும் பாணர்கள் நூற்களையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்து விட்டார்.

இவற்றுள் நாயனார் இயற்றியுள்ளத் திரிக்குறளுக்கு நிகரான நீதிபோதங்கள் வேஷ பிராமணர்கள் வேதத்தினும் கிடையாது, ஸ்மிருதியிலும் கிடையாது. ஆதலின் திரிக்குறளியற்றியுள்ள நீதிசாஸ்திர நிபுணர்களைப் பறையரென்றும், தாழ்ந்தசாதிகளென்றும் கூறுவது காரணம் என்னை என்று கேட்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அக்கேழ்விக்கு ஆதாரமற்ற உத்திரவு கொடுக்கும் ஓர் கட்டுக்கதையை ஏற்படுத்திவிட்டார்கள்.

அதாவது, பகவன் என்னும் பிராமணனுக்கும், ஆதி என்னும் பறைச்சிக்கும், ஏழு பிள்ளைகள் பிறந்ததென்றும், அவைகள் பிறந்தபோதே ஒவ்வோர் வெண்பாக்களைப் பாடி விட்டதென்றும், பொருந்தா பொய்க்கதையை எழுதிவைத்துக் கொண்டு பிராமண வித்துக்கு நாயனார் பிறந்தபடியால் குறள்பாடக்கூடிய விவேகம் உண்டாயதென்று கூறுவதுடன் 1892 வருடம் நடந்தேறிய மகாஜனசபையில் சிவராம் சாஸ்திரியும் தனது நாவினால் இவ்வகையாகக் கூறினார்.

- 2:33; சனவரி 27, 1909 -

அதாவது, பிராமண வித்திற்கு வள்ளுவர் பிறந்தபடியால் சிறந்த திருக்குறளைப்