பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136 / அயோத்திதாசர் சிந்தனைகள்


புத்தர் தியானம்

"தமோதஸ்ஸ பகவதோ ஹறஅத்தோ சம்மா சம்புத்தஸ்ஸ"

ஞானவெட்டி

வீம்புகள் பேசுகிறீர் வினைவழி / வேடிக்கையாயின்பம் விளம்புகிறீர்
மேம்புங் கரும்பாமோ மகத்துக்களின் / விற்பனத்தைக் கண்டறியா வீணர்களே
சம்பவ மூர்த்தியர்க்கே பட்ட மது / ஸ்தாபித்த சாம்பார்கள் யாங்காணும்
தீம்புகளுறபேசி தெளிந்தவர்தன் / சீர்பாதங் கண்டவர்போல் தீட்டுகிறீர், (தந்தன )

அவ்வகைய சாம்பான்குலத்தாரென்று சாதித்துவந்தபோதிலும் வேஷப் பிராமணர்களின் பொய்மதக் கட்டுக்குள் அடங்காதவர்களாகும் பௌத்தர்கள் யாவரையும் பறையர்கள் என்றும், தாழ்ந்தசாதிகள் என்றும் கூறி பலவகை இடுக்கங்களைச் செய்து பதிகுலைய வைப்பது அவர்கள் பழக்கமாதலின் சாம்பான் குலத்தாரென்று தங்களை அவர்கள் கூறிவந்த போதினும் தாழ்ந்தசாதியோர்கள் என்றே தலையெடுக்கவிடாமல் செய்து வந்ததுமன்றி நாளதுவரையிலும் செய்துவருகின்றார்கள்.

பௌத்தர்களாயிருப்பினும் அல்லது வேஷப்பிராமணர்கள் பொய்மதங்களை விட்டுநீங்கி அன்னியர் மதத்தில் பிரவேசித்தவர் களாயிருப்பினும் அவர்கள் யாவரையும் பறையர்கள் என்று தாழ்த்திவரும் விவரம்.

பூர்வத்தில் இலங்காதேசமென்றும், தற்காலம் கொளம்பு, கண்டி என்றும் வழங்கும்படியான தேசத்தில் வாழும் குடிகள் யாவரும் பெரும்பாலும் பௌத்தர்கள் என்பது சகலருக்கும் தெரிந்தவிஷயமாகும். சமஸ்கிருதத்தில் வரைந்துள்ள சந்திரகாண்டத்தில் அநுமார் இலங்கை சேர்ந்து அவ்விடமுள்ள மாளிகையில் உட்கார்ந்து அதனை புத்தர் வியாரமென்றும் கூறியதாக விளங்குகின்றது.

அவ்வகை பெளத்தநாடென்று தெரிந்தே தற்காலம் இராமநாடகம் பாடிய அருணாசலக் கவிராயரென்பவர் தானியற்றியுள்ள சுந்தரகாண்டத்தில் இலங்காதீவத்தை பறையர் ஊரென்று இழிவுபடுத்தியே பாடிவைத்திருக்கின்றார்.

இராம நாடகம் - சுந்தரகாண்டம்

"நிறைதவசுக்குக் ரூறைவளென்று நினைத்துகைவிடுவாரோ
பறையர் வூரிலே சிறையிருந்த வென்னை பரிந்துகைதொடுவாரோ.

ஈதன்றி வேஷபிராமண மதக்கடை வியாபாரஞ் செய்வோர்களாயிருந்த விஷ்ணுமதம் சிவமதம் இவைகளை விட்டுநீங்கி கிறீஸ்துமதத்தைச் சார்ந்த ஒருவர் முதலியாராயிருப்பினும், செட்டியாராயிருப்பினும் பறையனாகி விட்டான் அவனை வீட்டிற்குள் சேர்க்கப்படாது அவன் வீட்டிற்கு சாதியோர்கள் போகப்படாதென்று கட்டுப்பாடுசெய்து இழிவுகூறிவருவது தற்கால அனுபவத்திலும் காணலாம்.

- 2:36; பிப்ரவரி 17, 1909 -

நூதன மதங்களைக்கொண்டு தாங்கள் சுகமாக சீவிப்பதற்கும் நூதன சாதி வேஷத்தால் தங்களை உயர்த்திக் கொண்டு மற்றவர்களை அடக்கி ஆளும் வழியேயாம்,

அதாவது தங்கள் நூதன மதங்களுக்கும், நூதனசாதிகளுக்கும் எதிரிகளாயிருந்த பௌத்தர்களைப் பறையர்கள் என்றும், தாழ்ந்த சாதிகள் என்றும் கூறிவந்தவற்றிற்குப் பகரமாய்த் தற்காலமுள்ள முதலி, நாயுடு, செட்டியென்பவருக்குள் ஒருவர் வேஷபிராமண மதத்தைவிட்டுவிலகி கிறீஸ்துமதத்தில் சேர்ந்தவுடன் பறையனாகிவிட்டான் என்று சாதிக்கட்டு ஏற்படுவதினால் சீவனமதத்தையும், அதிகாரசாதியையும், நிலைப்படுத்துவதற்கே மற்ற மதத்தோரை இழிவுகூறி தாழ்ந்த சாதிகளென வகுத்துவருவது வெள்ளென விளங்கும்.

அதனினும் வேஷபிராமண மதத்தைச் சார்ந்த ஒருவன் பஞ்சபாதகங்களாகும் பொய்யாலேனும், களவாலேனும், குடியாலேனும், விபச்சாரத்தாலேனும், கொலையாலேனும் குற்றவாளியாகி சிறைச்சாலை சேர்ந்து சாதிக்கும், மதத்திற்கும் பலவகை மாறுதலடைந்திருப்பினும் சிறைநீங்கி வீட்டிற்கு`