பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 145


பெயர்களையும் கொண்டே இக்குலத்தோர் பூர்வ புத்தமார்க்கத்தோரென்னும் ஆறாவது ஆதாரமாகும்.

- 2:43; ஏப்ரல் 7, 1909 -

ஜப்பான், சைனா, தீபேத், மங்கோலியா, சையாம், பர்ம்மா , இலங்காதீவக முதலிய தேசங்களிலுள்ள பௌத்தர்கள் யாவரும் உலகத்திலுள்ள மநுகுலத்தோர் ஜனத்தொகையில் அரையரிக்கால் பாகம் பௌத்தர்களே நிறைந்திருக்கின்றார்கள்.

இத்தகைய பெருந்தொகையார் எத்தேச யாத்திரைகள் செய்தபோதினும் அத்தேசவாசிகளிடம் சாதிபேதமின்றியும், சமய பேதமின்றியும், உணவு பேதமின்றியும் உலாவிவருவார்கள்.

நாளதுவரையிலும் அத்தகைய பேதங்களின்றியே உலாவியும் வருகின்றார்கள். பூர்வம் புத்ததன்மத்தை அனுசரித்து தற்காலம், பறையர்கள் என்று அழைக்கப் பெற்றவர்களும் மேற்கூறியுள்ள பெளத்தர்களைப்போன்றே சாதிபேதம், உணவுபேதமின்றி சகல தேசயாத்திரைகளும் களங்கமின்றி சுற்றிவரும் சாதிபேதமற்ற செயலைக் கொண்டு இவர்களை பௌத்த மார்க்கத்தோரென்னும்

ஏழாவது ஆதாரமாகும்.

சாதிபேத, உணவுபேதமற்றச் செயல்களுடன் தீபேத், பர்ம்மா முதலிய பௌத்தர்களுக்குள்ள அன்பின் ஆதரிப்புகள் யாதெனில், அவர்களைக் காணவேண்டி தங்கள் பந்துக்களாயினும், நேயர்களாயினும், அன்னியர்களாயினும் வீட்டிற்கு வந்துவிடுவார்களாயின், அவர்களுக்கு வேண்டிய புசிப்பு, தாகசாந்தி, தாம்பூலம் முதலியவைகளை அளித்து திருப்த்தி செய்துவிட்டு அவர்களுடன் வார்த்தையாடுவது வழக்கமாயிருக்கின்றது.

அதுபோலவே தற்காலம் பறையர்கள் என்று அழைக்கப்பெற்ற பூர்வ பௌத்தர்களும் வேஷப் பிராமணர்களால் பலவகை இடுக்கமுற்று நசிந்திருந்தபோதினும் புத்ததன்ம அன்பின் குணம் மாறாது தங்கள் பந்துக்களேனும், நேயர்களேனும், அன்னியர்களேனும் வீட்டிற்கு வந்துவிடுவார்களாயின் தங்களால் கூடிய உணவு, தாகசாந்தி முதலியவைகளை அளித்து ஆதரித்துவரும் தன்மப்பிரிய குணச் செயலாலும் இக்குலத்தோர் பூர்வ புத்தமார்க்கத்தோரென்னும்

எட்டாவது ஆதாரமாகும்.

பர்ம்மா, தீபேத், சிலோன் முதலிய தேசங்களில் வாசஞ்செய்யும் பௌத்தர்கள் யாவரும் அவுடத விஷயங்களிலும், வியாதி விஷயங்களிலும், கணிதாதியாம் சோதிட விஷயங்களிலும் ஆராய்ச்சியுடையவர்களாய் தேசக் குடிகளுக்கு உபகாரிகளாக விளங்குகின்றார்கள்.

அதுபோலவே பறையர்கள் என்று அழைக்கப்பெற்ற பூர்வபௌத்தர்கள் வைத்திய விஷயங்களிலும், சோதிட விஷயங்களிலும், வித்துவ விஷயங்களிலும் அநுபவமுடையவர்களாய் பூர்வத்தில் நடத்திவந்தது போலவே தற்காலமுந் தக்க விவேகமுடன் நடத்திவரும் கணித அனுபவத்தைக் கொண்டும் வைத்திய அநுபவத்தைக் கொண்டும் வித்துவ அநுபவத்தைக் கொண்டும் இவர்கள் பூர்வ பௌத்தர்களே என்பதின்

ஒன்பதாவது ஆதாரமாகும்.

புத்ததன்மத்தைத் தழுவிய சமணமுனிவர்களால் வரைந்து வைத்திருந்த கணித நூற்கள், வைத்திய நூற்கள், நீதி நூற்கள், ஞான நூற்கள் யாவையும் பெரும்பாலும் இக்குலத்தோர் கையிருப்பில் வைத்திருந்து தற்காலம் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கும் விவேக சுதந்தரத்தாலும் இவர்கள் பூர்வ பௌத்தர்களே என்னும் பத்தாவது ஆதாரமாகும்.

இத்தேசத்துள் நூதனமாகக் குடியேறியுள்ள வேஷ பிராமணர்களால் பறையர்களென்றும், பஞ்சமரென்றும், வலங்கையரென்றும் அழைக்கப்பெற்ற கூட்டத்தோர் பூர்வ பௌத்தர்கள் என்பதை

முதலாவது இவர்கள் வழங்கிவரும் பெயர்களினாலும்,