பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148 / அயோத்திதாசர் சிந்தனைகள்


சீவகசிந்தாமணி

ஆசையார்வ மோடையபின்றியே / யோசைபோ யுலகுண்ணதோற்றபி
னேகபெண்ணாழித் நிந்திரர்களாய் / தூயஞானமாய்த் துறக்கமெய்தினார்.

திரிக்குறள்

அந்தணரென்போரறவோர் மற்றெவ்வுயிக்குஞ்
செந்தண்மெய்ப் பூண்டொழுகலால்.

புத்தவியாரங்களில் இத்தகைய சுத்த இதயமுண்டாய் சாந்தமாந்தண்மெய் நிறைந்தவர்களையே அரசர்கள் முதல்வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்களும் வணங்கி அவர்களுக்கு வேணவுதவி புரிந்து வருவது இயல்பாயிருந்தது.

அந்தணர்களுக்குள்ள வித்தகைய சிறப்பையும், சுகத்தையும், மணிவண்ணனென்றும், சீவகனென்றும் வழங்கிவந்த பௌத்தவரசர்களின் காலத்தில் இந்தியாவிற் குடியேறியிருந்த மிலேச்சர்களாம் ஆரியர்களிருந்து சகடபாஷையிற் சிலத்தைக் கற்று தங்கள் பெண் சாதி பிள்ளைகளுடன் சுகத்திலிருந்துக்கொண்டே அந்தணர்களென்றும் வேஷமிட்டுக் கொண்டு கல்வியற்ற சிற்றரசர்களையும், பெருங்குடிகளையும் தங்கள் வயமாக்கி பயந்து பிச்சை இரந்தும் பயத்துடன் உயிர்வதை செய்து மாமிஷங்களைச் சுட்டுத்தின்றவர்கள் தங்கள் வாய் மொழியேற்ற கூட்டத்தார் மிகுத்தவுடன் அதிகாரப்பிச்சையிரந்து தின்னவும், அதிகாரயாகமென்னும் ஆடுமாடுகளைச் சுட்டுத்தின்னவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.

கொலையும் புலையுமில்லாதிருந்த நாட்டில் உயிருடன் ஆடுமாடுகளை நெருப்பிலிட்டு உயிர்வதை செய்து தின்னும் படும்பாவிகளைக் கண்டபௌத்தர்கள் மனஞ்சகியாறாய் வேஷப்பிராமணர்களை அடித்துத் துறத்தியும் அவர்கள் போதனைக்கு இசையாமலுமிருந்தார்கள்.

விவேகமிகுந்த பௌத்தர்கள் வேஷபிராமணர்கள் போதனைக்குட்படாமல் அன்னியப்பட்டிருந்தபடியால் அவர்களை பராயர்களென்றும் அந்தரங்கக் கூற்றை சகலருக்கும் பறைந்துக்கொண்டு வந்தபடியால், பௌத்தர்களை பறையர்களென்றும், பராயர்களென்றுங் கூறிக்கொண்டே வந்து தங்கள் கட்சியோர் பிலத்தவுடன் பறையர்களென்றும், தாழ்ந்த சாதிகளென்றுங் கூறி அப்பெயரைப் பரவச் செய்யவும், பலப்படுத்தவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.

இம்மிலேச்சர்களாம் ஆரியர்கள் தோன்றி வேஷ பிராமணர்களான காலமும் விவேகமிகுத்த பௌத்தர்கள் பறையர்களென்று தாழ்த்தப்பட்ட காலமும், மணிவண்ணன் அரசாட்சிக்கும், சீவகன் ஆட்சிக்கும் உட்பட்ட காலமாதலின் ஆயிர வருடங்களுக்கு உட்பட்டதென்றே வரையறுத்துக் கூறத்தகும்.

ஈதன்றி கிறீஸ்து பிறப்பதற்கு முன்பு 543-வருடம் மகத நாட்டைச் சார்ந்த இராஜ கிரகமென்னும் பட்டணத்தில் அஜாத சத்துருவென்னும் அரசனால் ஞான விசாரணை சங்கங் கூட்டப்பட்டது.

இரண்டாவது கி.மு 413-வருடம் வைசாலி என்னும் நகரத்தில் பெளத்தர்கள் யாவருஞ் சேர்ந்து விசாரிணை சங்கங் கூட்டப்பட்டது.

மூன்றாவது கி.மு. 255-வருடம் பாடலிபுரத்தில் அசோக அரசனால் விசாரிணை சங்கங் கூடப்பட்டது.

நான்காவது கீறீஸ்துவுக்கு பின்பு 78- வருடம் ஜலந்தராவில் கானிஷ்காவென்னும் அரசனால் விசாரியை சங்கங் கூட்டப்பட்டது.

இந்த கானிஷ்காவென்னும் அரசனின் காலமோ 800-வருடமென்று வரையறுத்திருக்கின்றது. இத்தியாதி விசாரிணை சங்கங்களில் இந்த வேஷ பிராமண சங்கத்தோரிருந்தார்களென்றாயினும், வேஷ பிராமணர்கள் வேதங்களை வாசிக்கப்பட்டதென்றாயினும், வேஷ பிராமணர்கள் வேதங்களை சாதிக்கப்பட்ட தென்றாயினும், சரித்திரக்காரர்களால் விளங்கியது கிடையாது.

அங்ஙனமிருக்கின் புத்தபிரான் காலத்திலேயே பிராமணர்கள் வந்து பகவனுடன் தரிசித்து பௌத்தர்களாகி விட்டார்களென வரைந்திருப்பது பொய்யாமோ என்பாருமுண்டு.