பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிடையாது. தாங்கள் புசிக்குமுந்தி அவர்களில்லங்களில் ஏனையோர் செல்லவும் போகாது.

இத்தியாதிசுசாதி யபிமானிகள் ஓர் காட்டில் விழுந்து கிடக்கும் பிள்ளையை இன்னசாதி, யினியசாதியென்றறியாது எடுத்து வளர்த்ததும் காரணமின்றி கபிலரென்னும் பெயர்கொடுத்தும் நான்காவது பொய்.

தென்திசைப்புலையன் வடதிசைக்கேகி
பழுதறவோதி பார்ப்பானாவான்
வடதிசைப்பார்ப்பான் தென்திசைக்கேகி
நடையதுகோணி புலையனாவான்

இத்தகையாகப் பிறப்பில் சாதியில்லையென்று கூறியவர் பாணர்வீட்டில் ஓளவை வளர்ந்தாள், பறையர் வீட்டில் ஓளவை வளர்ந்தாள், பறையர் வீட்டில் வள்ளுவர் வளர்ந்தார், அந்தணர் வீட்டில் கபிலர் வளர்ந்தாரென்றும் சாதிகளை நிலைநிற்கக் கூறியது ஐந்தாவது பொய்.

காரணம் - தொழிலால் சாதிகள் ஏற்பட்டுள்ளதென்பதை வற்புருத்திக் கூறியிருப்பாராயின், அவனவன் தொழிலுக்குஞ் செய்கைக்குத் தக்கவாறு அந்தணர் வீட்டிலேயே பறையன், பாணனிருக்கமாட்டானா, பறையன் வீட்டிலேயே பாணன் பார்ப்பானிருக்கமாட்டானா. இவைகள் யாவையும் நோக்காமல்,

பறையர் வீட்டில் வள்ளுவர் வளர்ந்தாரென்றும், அந்தணர் வீட்டில் கபிலர் வளர்ந்தாரென்றும் பிறப்பினிடத்திலேயே சாதியுண்டென்பதை நிலைநிறுத்தி கபிலர் காலத்திலேயே இவ்வேஷ பிராமணர்களிருந்தார்களென்றும் சாதிகளிருந்ததென்றுங் கதா வஸ்திபாரமிட்டுக் கொண்டார்கள்.

இக்கபிலரகவ லென்னுங் கட்டுக்கதையானது பிறப்பிலேயே சாதிகளுமுண்டு. பூர்வத்திலேயே இவ்வேஷபிராமணர்களும் உண்டென்று சமயோசிதமாக தங்களை சிறப்பித்துக் கொள்ளுவதற்கேயாம்.

பூர்வ பௌத்த தர்மத்தைச் சார்ந்த கபிலரே இவ்வகவலை இயற்றியுள்ளாரென்னும் பொய்யை அடியிற் குறித்துள்ள செய்யுட்களால் அறிந்துக் கொள்ளலாம்.

பூர்வ பௌத்த தர்ம்ம கர்ம்மகுருக்களாக விளங்கிய வள்ளுவர்களையே வேஷ பிராமணர்கள் முதற் பறையராக வகுத்துள்ளதை ராட்ளர் டிக்ஷநெரியில் பதிந்துள்ளதும் அன்றி வள்ளுவர்களையே பறையர்களென்று கூறி பலவகையிடுக்கங்களினாற் பாழ்படுத்தி வருகின்றார்களென்றும்,

எங்கள் பரம்பரை மகத்துவம் இப்போது உங்களுக்கு விளங்காது இன்னுஞ் சில நாளையில் அஃது விளங்குமென்றும் திருவள்ளுவு சாம்பனார் தானியற்றியுள்ள ஞானவெட்டியில் கூறியிருக்கின்றார்.

ஞானவெட்டி

விட்டகுறை வருமளவும் உபதேசங்காண்
மெய்யுடலுந்தளர்ந்து புவிமேலு நோக்கி
தட்டழிந்து விழும்போது வோதிவைத்த
சாத்திரத்தை க்ஷணப்போது மறியப்போமோ
எட்டிரண்டுமறியாதார் குருக்களாமோ
யென்னையினி பறையனென்று தள்ளப்போமோமட்டமரும்
பூங்குழல்வா லாம்பிகைப்பெண்
வங்கிஷத்திலுதித்த சாம்பவனும் தானே.

ஆதியில்லை அந்தமில்லை ரூபமுல்லை-காலம்
அண்டரண்ட பேரண்டமும் பிண்டமுமில்லை
சாதியில்லை நாதியில்லை ஆண் பெண்ணிலாக்- காலந்
நாணுவாய் நாதவிந்து வூணுதலாக்
ஒதியதோர் வேதமில்லை மறையோரில்லை-சாதி
வொன்றுமில்லை யன்றுமின்று மொன்றதாச்சு - இந்த
சேதிவரலாரறிய சிவநாட்செல்லும் - செகம்
ஜெநநமெடுத்த நிலை ஏதுவதுகாண்.

இவ்வகையாய் வள்ளுவர்களையே பறையர்களென்று பாழ்படுத்தியது பரக்க விளங்குங்கால் பறையர் வீட்டில் வள்ளுவர் வளர்ந்தாரென்று கபிலர் அகவல்