பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பாடியுள்ளாரென்பது கற்பனாகதை என்றே கூறத்தகும்.

இத்தகையப் பொய்க்கதா பிறட்டுகளைக்கொண்டே புத்தர்காலத்திலும் வேஷபிராமணர்கள் இருந்துள்ளார்கள் என்னுங் கட்டுக்கதை புறட்டுகளை திட்டமாக அறிந்துக் கொள்ளுவதுடன் அந்தணனென்னும் நிலை வாய்த்தவனுக்கு பிள்ளை வளர்க்கவேண்டுமென்னும் பாச பந்தமுண்டோவென்பதை கபிலரே அறியாமற் பாடிவிட்டாரோ, கற்பனா கதையாம் விவேகக் குறைவோ அவற்றைக் கற்றவர்களே அறிந்துக் கொள்ள வேண்டியதாகும்.

- 2:47: மே 5, 1909 -

புத்தபிரான் காலத்திற்கு முன்பே வேஷபிராமணர்களும் வேஷபிராமணர்கள் வேதங்களும் வேஷபிராமணர் வேதாந்தங்களும் ஒற்றுமெய்க் கேட்டிற்கு ஆதாரமாகும் சாதி பேதங்களும் இருந்ததென்று கூறித்தங்களைச் சிறப்பித்துக் கொள்ளுவதற்கு இத்தியாதி கட்டுக்கதைகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வேஷபிராமணர்கள் இத்தேசக் குடிகளல்ல வென்பதையும் இத்தேசக் குடிகளுக்கு இவர்கள் யதார்த்த குருக்களல்ல என்பதையும் அடியிற்குறித்துள்ள செயலால் அறிந்து கொள்ளலாம்.

அதாவது பெளத்தர்களுக்குள்ளும் மகமதியருக்குள்ளும், கிறிஸ்தவர்களுக்குள்ளும் உள்ள அவரவர்களைச் சார்ந்த குருக்களுக்கு ஏதேனும் சுகா சுகங்கள் நேரிடுமாயின் அந்தந்த கூட்ட மார்க்கத்தார் சென்று அவரவர் குருக்களுக்கு வேண்டிய உதவிபுரிந்து சுகவாக செயல்களுக்கும் கூடவே கலந்திருந்து சகல காரியாதிகளையும் நடத்திவிட்டு அவரவர்கள் இல்லம் சேர்வது வழக்கமாகும்.

இவ்வேஷ பிராமணர்களாம் பொய்க்குருக்களின் சுபா அசுபங்களுக்கு அவர்கள் மதத்தைச் சேர்ந்த கூட்டத்தார் தங்கள் குருக்களுக்குண்டாகும் சுப அசுப காரியங்களாச்சுதேயென்றுஞ் செல்லவும் மாட்டார்கள்.

தங்களைச் சேர்ந்த மாணாக்கர்களாச்சுதே அவர்களெல்லோரும் நமது சுப அசுபகாரியங்களிலிருக்க வேண்டும் என்று அவர்களும் அழைக்க மாட்டார்கள்.

யதார்த்தபிராமணர்களுக்குரிய அறுவகைத் தொழிலில் ஏற்றல், ஈதல் என்னும் இருவகைத் தொழிலாம். தங்கள் மார்க்கத்தைச் சார்ந்த சகல குடிகளிடத்தும் தானமேற்றலும், உள்ளமிகுதி வஸ்துக்களை இல்லாத சகல ஏழைகளுக்கும் பேதமில்லாமல் தன்மம் யீதலும் ஆகியத் தொழிலினுள் வேஷபிராமணர்கள் தொழிலோவெனில், தங்கடங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களிடத்திலும் ஏனையோரிடத்திலும் தானமேற்றுக் கொள்ளுவார்கள்.

தாங்கள் ஈயும் தன்மத்தை சகலருக்கும் பொதுவாகக் கொடாது தங்கள் சுயசாதிகளுக்கு மட்டிலும் கொடுத்துக் கொள்ளுவார்கள்.

இத்தேசக்குடிகளுக்கும், இவர்கள் தன்மத்திற்கும், மாறுபட்டவர்களாதலின் இத்தேசத்தோருடன் சகலகாரியாதிகளிலும் பொருந்தாமலும், இவர்கள்மீது அன்பு பாராட்டாமலும் தங்கள் சுயசாதிகளின் விருத்தியையே நாடியிருப்பதை இவர்கள் இத்தேசத்தில் குடியேறி குடிகெடுத்த நாள் முதல் நாளதுவரையிலுமுள்ள அநுபவத்தாலும் கண்டுக் கொள்ளலாம்.

இத்தியாதி காரியங்களில் கலவாமலும் சுபா சுபகாரியங்களில் மற்றவர்களை சேரவிடாமலும் இருப்பது, புத்தபிரான் காலத்தில் வேஷபிராமணர்கள் இருந்தார்கள் என்றும் கபிலர் காலத்திலும் வேஷபிராமணர்கள் இருந்தார்கள் என்றும், கட்டுக்கதைகளை ஏற்படுத்திவிட்டிருப்பது போல் சமயோசிதமாக இத்தேசத்தோருடன் கலவாது விலகிநின்றே நாங்கள் பிரம்மா முகத்தினின்று பிறந்த பெரியசாதிகளென்றும், பிராமணர்கள் என்றும் கூறிக்கொண்டே தங்கள் யாசகசீவனத்தை நிறைவேற்றி வந்தார்கள்.

கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜரீகம் வந்து தோன்றி சகல மதங்களையும், சகல சாதிகளையும் சகல சிலாசாசனங்களை விசாரிணை செய்ய ஆரம்பித்ததின் பேரில் தங்கநிறமான முட்டையிலிருந்து பிறந்த கதைகளையும், பிரம்மா