பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இவர்களிடமும் ஆயுதங்களைக் கொடுத்துவைத்து பாதுகார்க்கச் செய்திருக்கின்றார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களும் சாதித்தலைவர்களால் பலவகைத் துன்பங்களை அநுபவித்துவந்து ஆங்கிலேய துரைமக்கள் வந்து இத்தேசத்திற்கு குடியேறியது முதல் அவர்களது கருணையால் சாதித்தலைவர்களின் துன்பங்கள் சிலது நீங்கி சுகமடைந்தவர்களாதலின் ஆங்கிலேய துரைமக்களைத் தங்கள் தாய் தந்தையர்கள் போல் கருதி அவர்கள் செய்த நன்றியை மறவாது அம்மியூட்டினியில் பாதுகார்த்தார்கள்.

அம்மியூட்டினியிலிருந்து துரைமக்கள், யாவருக்கும் இது தெரிந்த விஷயமாதலின் இராஜவிசுவாசமும், நன்றியும் உள்ளவர்களென்றறிந்த அந்த ஜெனரல் இவர்களையே ஒன்று கூட்டி இராயல் ஆர்ஸ் ஆர்ட்டிலேரி சேர்க்கும்படி ஆரம்பித்தார்.

அக்காலத்திலிருந்து படைத்தலைவராகும் லார்ட் ராபர்ட் துரையவர்களாலோ, மற்றவர்களாலோ அப்பட்டாளம் சேர்க்காமல் தவிற்கப்பட்டுவிட்டது.

சாதிபேதமற்ற திராவிடர்களின் ஆர்ட்டில்லேரி தற்காலம் இருந்திருக்குமாயின் எவ்வளவோ விருத்தி அடைந்திருப்பதுமன்றி பிரிட்டிஷ் ராஜாங்கத்திற்கும் பேராதரவாயிருக்கும்.

ஆங்கிலேய துரைமக்கள் சாதிபேதமற்ற திராவிடர்களைத் தங்கள் அரியமக்களைப்போல் அன்பு பாராட்டி ஆதரித்து வந்தார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களோ ஆங்கிலேய துரைமக்களைத் தங்கள் தாய்தந்தையர்கள் போலும் சகோதரர்கள் போலும் பாதுகாத்துவந்தார்கள்.

இத்தகையோர் அன்பையும் ஒற்றுமெயையும் நாளுக்கு நாள் உணர்ந்து வந்த சாதித்தலைவர்கள் ஆங்கிலேய துரைமக்களை அணுகி சாதிபேதமற்ற திராவிடர்கள் மீதுள்ள அன்பைக் கெடுக்கத்தக்கப் போதனைகளைச் செய்துக்கொண்டு வருகின்றார்கள்.

தற்காலம் வந்துள்ள துரைமக்களோ சாதிபேதமற்ற திராவிடர்கள் அன்பையும் இராஜவிசுவாசத்தையும் உணராது சாதித்தலைவர்கள் வார்த்தைகளை நம்பிக்கொண்டு அவர்களுக்குள்ள இராஜவிசுவாசத்தையும் அன்பையும் வெறுப்படைய செய்துவருகின்றார்கள்.

இத்தியாதி மித்திரபேதங்களையும் சாதித்தலைவர்களே சமயோசிதமாக துரைமக்களிடம் பேசி ஏழை உத்தியோகஸ்தர்கள் மீதுள்ள அன்பைக் கெடுத்துவிட்டு தாங்கள் ஏதோ உதவிபுரிவதுபோல் கூட்டங்கள் கூடி படாடம்பங்கள் காட்டி வருகின்றார்கள்.

சாதிபேதமற்ற திராவிட பேதைமக்கள் சாதித்தலைவர்களின் கூட்டத்தோர் ஏதோ உதவி புரிந்துவிடுகின்றார்களென்றெண்ணிக் கொண்டு துரைமக்களை விரோதித்துக் கொள்ளுவார்களாயின் தங்கள் சுதேசியமென்னுங் கூட்டத்தோருடன் சேர்த்துக்கொள்ளுவதற்காக “பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழனைப்போல்” மித்திரபேதஞ் செய்துவருகின்றார்கள்.

இத்தகைய மித்திரபேதச் சத்துருக்களின் வார்த்தைகளையும், செயல்களையும் கருணை தங்கிய துரைமக்களும் லேடிகளும் நம்பிக் கொண்டு சாதிபேதமற்ற திராவிடர்களாம் ஏழை குடிகளுக்குள்ள அன்பையும் இராஜ விசுவாசத்தையும் மாற்றாமலிருக்க வேண்டுகிறோம்.

பூர்வம் இத்தேசத்திற் குடியேறியதுரை மக்கள் யாவரும் இவ்வெழிய கூட்டத்தோரைத் தங்கள் பிள்ளைகள் போலவே ஆதரித்துவந்தார்கள். அந்த நன்றி மறவாமலே இவ்வேழைக்குடிகள் நாளது வரையிலும் துரைமக்களையும், லேடிகளையுந் தங்கள் தாய்தந்தையர்களைபோல் கருதி இரவும் பகலும் கட்டிக் கார்த்து உழைத்து வருகின்றார்கள்.

இவ்வகையாய் துரைமக்களை நெருங்கிவாசஞ் செய்யும் சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள் தக்கதேகிகளைக் கண்டெடுத்து இராயல் ஆர்ட்ஸ் ஆர்டில்லரி ஒன்றைச் சேர்த்து உறுதி செய்வதுடன் ஒவ்வோர் துரைமக்கள்