பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அங்ஙனமின்றி சுதேசி சுதேசியென தம்பட்டம் அடித்துக்கொண்டு சுயப்பிரயோசனங் கருதோம். அதாவது தற்காலம் சென்னையில் நிறைவேறிவரும் கோவில் வழக்குகளில் வாதிகளும், சுதேசிகளாயிருக்கின்றார்கள். பிரதிவாதிகளும் சுதேசிகளாய் இருக்கின்றார்கள். வாதிகளின் லாயர்களும் சுதேசிகளாய் இருக்கின்றார்கள். பிரதிவாதிகளின் லாயர்களும் சுதேசிகளாயிருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சுதேசக்கோவில் சொத்தை அழியவிடாது சீர்திருத்தக்கூடாதோ அல்லது தாங்களே ஒருவர் முதன்மெயாயிருந்து நியாயவாயலானத் தீர்ப்பளிக்கலாகாதோ.

இல்லை அதன் காரணமோ சுயப்பிரயோசனத்தைக் கருதுவோர் கதேசிகளென்று ஏற்பட்டுள்ளபடியால் சுதேசிகளுக்கு சுதேசிகளே நம்பிக்கையற்று பரதேசிகளை அடுத்து நியாயங்கேட்கின்றார்கள்.

பரதேசிகளோ தன்சாதி புறசாதி என்னும் சாதியற்றவர்களும், தன்மதம் புறமதமென்னும் மதமற்றவர்களுமாதலின் சகலருக்கும் பொதுவாய் நியாயங்கூறி சீர்படுத்திவருகின்றார்கள்.

ஆதலின் சுதேசிகளுக்கு சுதேசிகளே நம்பாமல் பரதேசிகளிடம் முறையிட்டு தங்கள் நியாயங்களைப் பெற்று வருகின்றார்கள்.

சுதேசமென்றாலென்னை, சுதேசிகளென்றால் யாவர், சுதேசக் கிருத்தியமென்றால் யாது, சுதேசிய பலன்களென்றால் யாவையென்று உணராதோர் யாவரும் தமிழன் பத்திரிகை சுதேசிகளுக்காக பேசுகிறதில்லை என்பது வீண் வாக்கியங்களேயாகும்.

பல அரசர்களிடம் சண்டையிட்டு தங்கள் உதிரங்களைச்சிந்தி கைப்பற்றி ஆண்டுவருகிறவர்களுக்கு இத்தேசம் சுதேசமா அன்றேல் அவர்களிடம் ஊழியஞ்செய்பவர்களுக்கும், அவர்களது ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கும் இத்தேசம் சுதேசமா என்பதை உசாவி உணர்வார்களாயின் தமிழன் பத்திரிகையிற் கூறிவரும் திருத்தங்கள் யாவும் சுதேச சீர்திருத்தங்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும்.

- 3:10; ஆகஸ்டு 18, 1909 -


72. சுரேந்திரநாத் பானர்ஜியார் கூறிய இந்தியா அமைதியில்லா காரணங்களும் அதன் மறுப்பும்

நமது கனந்தங்கிய பாபு சுரேந்திரநாத் பானர்ஜியாரவர்கள் இந்தியாவில் நேரிட்டுவரும் அமைதியுறா செயல்களுக்குக் காரணம் ஆறுவகையாகத் தெரிவித்திருக்கின்றார்.

அவிவேகிகளால் செய்யப்பட்டு வரும் அமைதியுறாச் செயல்களுக்கு அறிவுள்ளவர்களைக் காரணங் காட்டுவது ஆதாரமின்மெயேயாம்.

அதாவது இந்திய வாசிகளில் இராஜகீய சட்டதிட்டங்களும் பிரிட்டிஷ் ஆட்சியின் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமற்ற நிலையும், பெரியசாதி சின்னசாதியென்னும் பேதமற்ற அன்பையுங்கண்டு களிப்பவர்கள் நூற்றுக்கு ஒருவர் உளரோ, இலரோ என்பது சந்தேகமேயாம்.

எவ்வகையி லென்பீரேல், இந்தியருக்குள் ஆங்கில பாஷையைத் தெளிவற வாசித்து அவர்களது குணாகுணங்களை நன்குணரக்கூடியவர்கள் நூற்றிற்கு ஒருவரைத் தெரிந்தெடுப்பது கஷ்டமாம்.

ஆதலின் குடிகளின் அபிப்பிராயங்களை கவர்ன்மெண்டார் அடியோடு அவமதிப்பதினால் அமைதியில்லாமற் போயதென்று கூறுவது ஆதாரமற்ற வாக்கென்று கூறினோம்.

ஈதன்றி பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு டிஸ்டிரிக்ட்டில் ஒரு ஐரோப்பிய கலைக்ட்டரிருப்பாராயின் மற்றயப் பியூன் முதற்கொண்டு ஆபீசு உத்தியோகஸ்தர்கள் யாவரும் இந்தியக் குடிகளாயிருக்க எக்குடிகளை கவர்ன்மெண்டார் அவமதித்து வருகிறார்களென்பது விளங்கவில்லை.

அவற்றினும் இந்தியரில் ஒருவனை கொலை குற்றத்திற்குத் தூக்க வேண்டுமாயினும் நான்கு இந்தியக் குடிகளின் அபிப்பிராயங்களைக் கேட்டே