பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பானர்ஜியார் கூறியுள்ளது வீணாயின், இந்தியா அமைதியற்றச் செயலுக்கு நீவிர் ஏதேனும் காரணங் கூறப்போமோவென்பாராயின் கூறுவோமென்போம்.

அவைகள் யாதென்பீரேல், பிரிட்டிஷ் துரைத்தனம் இந்தியாவைக் கைப்பற்றி அரசாண்டகாலத்தில் கல்வியின் விருத்தியை மிக்கக்கவனியாது அவரவர்கள் அந்தஸ்துகளையும், யோக்கியதைகளையும், விவேகப் பெருந்தண்மெயுங் கண்டு உத்தியோகங்கொடுத்துக்கொண்டு வந்ததினால் நீதிவழுவாது குடிகளும், அரசும் அன்புபொருந்தி அமைதியுற்று வாழ்ந்துவந்தார்கள்.

அத்தகைய செயல்கள் நீங்கி பி.ஏ., எம்.ஏ., முதலிய கெளரதாட்டம் பெற்றவர்களுக்குத்தான் அந்தஸ்தான உத்தியோகங்கள் கொடுக்கப்படுமென்று ஓர் நிபந்தனை ஏற்பட்டடதின் பேரில் அந்நிபந்தனையை மலையிலக்காகக் கொண்டவர்கள் இரவும் பகலும் உருபோட்டு பி.ஏ., எம்.ஏ., முதலியப் பட்டங்களைப் பெற்று வேலையற்ற வாசித்தக் கூட்டங்கள் பெருகிவிட்டது.

அவ்வகையாகப் பெருகி உள்ளவர்களில் சில கூட்டத்தோருக்கு வேறு வேலைகள் தெரியாத விஷயத்தினாலும், கவர்ன்மென்டு வேலைகள் கிடைக்காத விஷயத்தினாலும் கல்வியற்றக் குடிகளைத் தூண்டிவிட்டு கடக்க நின்று பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழரைப்போலிருப்பவர்களே அமைதியற்ற செயலுக்கு முதற்காரணர்களாவர்.

இந்தியா அமைதியில்லாச் செயலுக்கு இரண்டாவது காரணம் யாதென்பீரேல்:-

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைத்த காலத்தில் பெருத்த ராஜகீய உத்தியோகங்கள் யாவும் மிலிட்டேரி துரைமக்களே ஆண்டுவந்தார்கள்.

தற்காலம் அத்தகைய மிலிட்டேரி துரை மக்கள் பெயர்களுமற்று இராணுவவீரர்களையும் குறைத்து இராணுவவீரர்கள் வீடுகடோரும் பறக்குங் கொடிகளும் மறைந்து விட்டபடியால் பிரிட்டிஷ் துரைத்தனத்தை அரசர்களென்னும் சம்மார கர்த்தர்களாக எண்ணாது “அண்டைவீட்டுக்கார அப்பாசாமி” தானென் றெண்ணிக்கொள்ளும் பழமொழிபோல் அமைதியற்ற செயல்களை ஆனந்தமாகச் செய்துவருகின்றார்கள்.

நமது கருணைக்கடலாம் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் பெரிய (பாஸ்) எம்.ஏ, சின்ன (பாஸ்) பி.ஏ, என்னுஞ் சட்டதிட்டங்களைக் கட்டோடொழித்து அவரவர்கள் அந்தஸ்திற்கும், விவேகத்திற்கும் தக்கவாறு அந்தந்த டிபார்ட்மென்ட் பரிட்சைகளை வைத்து உத்தியோகங்களைக் கொடுப்பதுமன்றி அந்தந்த டிஸ்டிரிக்ட்களில் இராணுவங்களையும் நிலைக்கச் செய்வார்களாயின் இந்துதேசக்குடிகள் யாவரும் அன்றே அமைதியடைவதுடன் சகலகுடிகளும் சுகமுற்று வாழ்வார்கள்.

- 3:11: ஆகஸ்டு 25, 1909 -


73. சட்ட நிரூபண சங்கத்தார் நியமனம்

தற்காலம் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் செய்திருக்கும் சட்ட நிரூபண ஆலோசனை சங்கத்திற்காக அங்கங்களை நியமிப்பான் வேண்டி, ஒவ்வொரங்கங்களையும் குடிகளின் சம்மதத்தின்பேரிலும் நியமிப்பதா அன்றேல் கவர்ன்மெண்டாரே தெரிந்தெடுத்து நியமித்து விடுவதாவென்னும் இருகருத்தையும் ஆலோசிப்போம்.

குடிகளே ஒவ்வொரங்கங்களைத் தெரிந்தெடுத்து சட்டசபைக்கு அதுப்புவதே நியாயமென்பாராயின் தற்கால முநிசிபாலிட்டியில் நிறைவேறிவரும் அங்கங்களின் நியமிப்பை ஆராய்வோமாக.

முநிசபில் பிரசிடெண்டும், மற்றவங்கங்களும் சேர்ந்து அந்த டிவிஷனிலுள்ள இரண்டு மூன்று பெயர்களைத் தெரிந்துதெடுத்து இவர்களுக்குள் யாரை டிவிஷன் கமிஷனராக நியமிக்கலாமென்று குடிகளிடம் ஒப்படைக்கின்றார்கள்.

குடிகளுக்கு விளக்கிக் கேட்டிருக்கும் சம்மதம் நூற்றிற்கு ஒருவருக்குத் தெரிந்திருக்குமோ தெரியாதோ விளங்கவில்லை, ஈதன்றி ஒவ்வோர்