பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 183


இத்தியாதி குறுக்குப்பூச்சு, நெடுக்குப் பூச்சு, வேதாந்தவேஷ முதியோர்களையும் இந்துக்களென்றால் ஒப்புக்கொள்ளாது உன்சாதியென்ன சமாத்தென்னையென்று கேட்கும்படியானக் கூட்டத்தார் தங்கள் மதத்திற்கும், சாதிக்கும் சம்மதப்படாத மகமதியர்களையும் இந்துக்களென்று கூறி வெளிவந்தது விந்தையேயாம்.

சகல சாதியோரையும், மதத்தோரையும் இந்துக்களென்றே பாவிக்க வேண்டுமென்னும் நல்லெண்ணம் இவர்களுக்கு இருக்குமாயின் சகலசாதி, சகல மதம், சகலபாஷைக்குடிகளில் விவேகமிகுத்த ஒவ்வொருவரும் ஆலோசினை சங்கத்தில் உட்கார்ந்து குடிகளுக்கு நேரிட்டுவருங் கஷ்ட நஷ்டங்களை அகற்றி ஆதரிக்கலாமென்று கூறலாகாதோ.

இந்தியாவில் சகலசாதி, சகலமதம், சகலபாஷையோர் இருக்கின்றபடியால் சகலசாதியோர்களிலும் ஒவ்வோர் அங்கங்களை நியமித்து ஆலோசினைச் செய்வதால் சகலரும் சுகமடைவார்களா அன்றேல் இந்தியர்களென்று கூறி ஒரே சாதியோரை ஆலோசினை சங்கத்தில் சேர்ப்பதால் சகலசாதியோரும் சுகமடைவார்களா.

பிச்சைக் கொடுப்பதில் தங்கள் சாதியோரைமட்டிலும் பார்த்துப் பிச்சைக் கொடுப்போர் வசம் இராஜாங்கப்பார்வையையுங் கிஞ்சித்து விட்டுவிடுவார்களாயின் யாருக்கு சுகமளித்து யாரைப் பாழாக்கிவிடுவார்களென்பதற்கு சாட்சியம் வேண்டுமோ.

வேண்டுவதில்லை. ஆதலின், கருணைதங்கிய இராஜாங்கத்தார் தாங்கள் ஏற்படுத்தும் ஆலோசினை சங்கத்தில் சகல சாதியோர்களையும் சேர்த்து அவரவர்கள் குறைகளைத் தேறவிசாரித்து தேச சீர்திருத்தஞ் செய்வதே சிறப்பாகும். அச்சிறப்பே பிரிட்டிஷ் ராட்சியபாரத்தை நிலைக்கச் செய்யும். அந்நிலையே சகல குடிகளுக்கும் இராஜவிசுவாசத்தைப் பரவச்செய்து சுகமளிக்குமென்பதாம்.

- 3:14; செப்டம்பர் 15, 1909 -


78. நன்பிராமன் கூட்டத்தோரென்றால் யாவர்

தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்களாகும்.

சைவம், வைணவம், வேதாந்தமென்னும், சமயங்களையும் அப்பிராமணரென்போர்களே ஏற்படுத்தி அச்சமயத்தை எவரெவர் தழுவிநிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களேயாவர்.

இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையுந் தழுவிக் கொண்டே (நன்பிராமன்ஸ்) என்று சங்கங்கூடியிருக்கின்றனரா அன்றேல் சாதியாசாரங்களையும் சமயவாசாரங்களையும் ஒழித்து (நன்பிராமன்ஸ்) (NonBrahmin) என்ற சங்கங்கூடியிருக்கின்றனரா விளங்கவில்லை.

அங்ஙனம் சாதியாசாரங்களையும், சமயவாசாரங்களையும் ஒழித்துள்ளக் கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம்பெயர் கார்த்திருக்கின்றார்கள்.

பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு (நன்பிராமன்ஸ்) எனக் கூறுவது வீணேயாகும்.

காரணம், சாதியாசாரக் கிரியைகளிலும் பிராமணர்களென்போர் வரவேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலின் இவ்விரண்டிற்குஞ் சம்பந்தப்பட்டவர்கள் யாவரும் நன்பிராமன் ஆகார்கள்.

உள் சீர்திருத்தமென்றும், இராஜகீய சீர்திருத்தமென்றும் இருவகுப்புண்டு. அவற்றுள் சாதிசமய சம்மந்தங்கள் யாவும் உட்சீர்திருத்தங்களென்றும், மற்றவை