பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 193


ஏழை சிறுவர்களின் கலாசாலை விருத்திபெற்றுவருங்கால் பிள்ளைகளின் துற்பாக்கியம் கர்னல் ஆல்காட் துரை இறந்துவிட்டார். அதன்பின் கலாசாலைவிருத்தி ஏதேனும் மாறிப்போமென்றெண்ணிய பண்டிதரவர்கள் தியாசபி சங்கத்திற்குத் தலைவராகத் தோன்றியுள்ள கனந்தங்கிய ஆனிபீசென்டம்மையவர்களுக்கு ஓர் விண்ணப்பமெழுதி நேரிற்போய் கண்டு கலாசாலைகளை கர்னலவர்கள் ஆதரித்து வந்தது போல் தாங்களும் ஆதரிப்பதுடன் கைத்தொழிற்சாலையும் ஒன்றை வகுத்து சிறுவர்களை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

பண்டிதர் கேட்டுக்கொண்ட விண்ணப்பத்தின்படி பிரசிடென்ட் ஆனிபீசென்டம்மனால் கலாசாலைகள் நிறைவேறிவருகின்றது.

கனந்தங்கிய ஆனிபீசென்டம்மை அவர்களுக்கு பண்டிதரவர்கள் விண்ணப்பங்கொடுக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல் கர்னல் இறந்தவுடன் அவரது கலாசாலைகளை முநிசிபாலிட்டியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்னும் வதந்தி வெளிவந்தபடியால் அம்மனுக்கு விண்ணப்பமளிக்கவும், நேரில் கண்டு பேசவும் நேரிட்டு ஆனிபீசன்டம்மனுடைய ஆதரவில் நிலைக்கப்பெற்றிருக்கின்றது.

இத்தியாதி சிறுவர்களின் கல்வி விருத்தியும் திராவிடசங்கத்தோர் முயற்சியேயாம்.

- 3:25; டிசம்பர் 1, 1909 -


80. தென்னிந்திய விவசாயக்கேடு

விவசாயமென்பது பூமியை உழுது பண்படுத்தி பயிர்செய்து சீவிப்பதேயாம்.

இத்தகைய மேழியாம் விவசாயஞ் செய்வோன் நஞ்சை, புஞ்சை என்னும், இருவகை பூமிகளுள் நஞ்சை பூமிகளை எக்காலத்து உழுது பண்படுத்த வேண்டும் என்றும், புஞ்சை பூமிகளை எக்காலத்து உழுது பயிர்செய்ய வேண்டியதென்றும் அநுபவவாயலாலும் கேழ்வியாலுமுயன்று செய்வதில் உழவுமாடுகள் எத்தனைக்குழி, எத்தனைக்காணி உழக்கூடியதென்றும், உழுது பண்படுத்துவோனாகும் பண்ணையாள் எத்தனை ஏக்கர், எத்தனைக்காணி திருத்துவானென்றும் ஆராய்ந்து உழவின் ஆளுக்கும், உழவின் மாட்டிற்கும் தக்க போஷிப்பைக் கொடுத்து விவசாயத்தை நோக்குவானாயின் பூமியும் பண்பட்டு தானியமும் விருத்தியடைந்து குடித்தனக்காரனும் சுகமுற்று குடிகளும் பசியற்று சுகசீவிகளாக வாழ்வதுடன் அரசாங்கமும் கவலையற்று ஆனந்திக்கும்.

இதுவே விவசாய வேளாளத் தொழிலென்னப்படும். பூமியின் பலனை அடைய வேண்டியவன் தனது உள்ளத்தை அன்பென்னும் நீரைப்பாய்த்து உழுது பண்படுத்தி ஈகையென்னும் விதையை விதைத்து அதன் பலனாம் நற்குணத்தை உழவுமாடுகளின் மீதும், பண்ணையாட்களின்மீதும் ஏழைக் குடிகளின் மீதும் அருளுவனேல் வேளாண்மெ ஓங்கி வேளாளன் என்னும் சிறப்புமடைவான்.

வேளாளனென்னும் பூமிதிருத்தி உண்போன் ஞானிகளாம் அந்தணர்களுக்கும், சம்மாரக் கர்த்தர்களாம் அரசர்களுக்கும், செட்டுச் செய்வோர்களாம் வாணிபர்களுக்கும் உபகாரியாதவின் அவனது உபகாரகுணமும், அன்பின் செயலுமே கொண்டு வானமும் பெய்து பூமியுங் குளிர்ந்து தானியமும் விருத்தி பெருமென்பது இயல்பாம். இத்தகைய அனுபவங்கொண்டே பூமியை உழுதுண்போனை வேளாளனென்று வகுத்திருக்கின்றார்கள்.

அன்பாங் குணமும், ஈகையாம் செயலுமற்று அவன் சின்னசாதி, நான் பெரியசாதி என்று கூறும் வேஷமிட்டுக்கொண்டு தங்களுக்குள்ள சாதிகர்வத்தால் பூமியை உழுது பண்படுத்தும் வேளாளர்களாம் எழியக்குடிகளை தாழ்ந்த சாதி, பறையர்களென்று வகுத்து, மிருகங்களிலும்