பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஏழைக்குடிகள் தங்களுக்கு கிராம உத்தியோகஸ்தர்களால் நேரிட்டுள்ளக் குறைகளை கலைக்ட்டருக்கு எழுதுவார்களாயின் அவர்களதை நேரில் வந்து கண்டறிந்து விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல் கலைக்ட்டர் தாசிலைக் கேட்கவும், தாசில், முநிஷிப்பு, கணக்கனைக் கேட்கவுமாக ஏற்படுகிற விஷயத்தில் கிராம உத்தியோகஸ்தர்கள் தங்கள் தங்கள்மீது யாதொரு குறைவையுங் காட்டிக் கொள்ளாது முறையிட்டக் குடிகளின்பேரிலேயே குற்றத்தைச் சாட்டி கலைக்ட்டருக்குத் தெரிவித்துவிடுவதுடன் தங்கள் குறைகளைக் கலைக்டருக்கு வெளியிட்டக் குடிகளை எவ்விதத்தும் பாழ்படுத்தி கிராமத்தைவிட்டு ஓட்டிவிடுகின்றார்கள்.

'முந்தி நாம் எழுதியுள்ளக் குறைகளையே கலைக்ட்டர் நேரில்வந்து விசாரியாமல் கிராமவுத்தியோகஸ்தரிடங் காட்டிவிட்டார்', இனியேதேனும் எழுதினாலும் அப்படியாகவே நேருமென்று பயந்து பேசாமல் ஊரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார்கள்.

ஆதலின் பூமிகளின் விருத்தியையும் விவசாயவிருத்தியையும் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் கவனிப்பதாயின் ஏழைக்குடிகளின் குறைகளை நேரில் வந்து விசாரித்து குறைகளை நீக்கிவிடுவார்களாயின் கிராமவுத்தி யோகஸ்தர்கள் சற்று பயந்து குடிகளை ஆதரிப்பார்கள். குடிகளும் கவலையின்றி தங்கள் வேலையில் சுறுசுறுப்பாயிருப்பார்கள். பூமிகளும் விருத்தியடையும்.

இத்தகைய கருணை நிறைந்த ராஜரீகத்திலும், மதுராந்தகத்தைச் சார்ந்த ஓரத்தூர் முதலிய கிராமங்களுள் சாதித்தலைவர்கள் வாசங்செய்யும் வீதிகளில் போஸ்ட் பில்லர்களை வைத்துக்கொண்டு சகலவகுப்போரும் நேரில்வந்து தங்கள் கடிதங்களைப் போடுவதற்கு விடாமல் யாவனேனும் ஓர் சாதித்தலைவன் வசங்கொடுத்துப்போடவேண்டுமென்று வைத்திருக்கின்றார்கள். நேரில் ஏழைக்குடிகள் பில்லர் பாக்சில் போட்டுவிடுவார்களாயின் கலைக்ட்ருக்குக் கடிதம் யெழுதினார்களோ வேறு யாருக்காவது கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கதியை எழுதியிருப்பார்களோ என்று தெரிந்துக்கொள்ளக் கூடாமற் போய்விடும். ஆதலின் சாதித்தலைவர்கள் வீடுகளினருகே போஸ்ட் பில்லரை வைத்துக்கொண்டு ஏழையெளியோர் கடிதங்ளை தங்களையே நேரிற் போடவிடாமல் தாங்களவற்றை பார்வையிட்டுப் போடும்படியாகவும் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவைகள் யாவையுங் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் கண்ணோக்கம் வைத்து நேரில் கண்டு விசாரித்து ஆதரிப்பார்களென வேண்டுகிறோம்.

- 3:29: டிசம்பர் 29, 1909 -


102. கவுன்சல் ஓட்டுகள்

சென்னை ராஜதானியில் ஐயர், முதலி, ராவ், செட்டி , நாயுடு, பிள்ளை , நாயகர், ரெட்டி எனும் வகுப்பாருள் ஒவ்வொரு வகுப்பினருள்ளும் நன்குவாசித்தவர்களும் பட்டாதாரர்களும், பெருந்தொகையான வரி செலுத்துகிறவர்களும் இருக்கின்றபடியால் அந்தந்த வகுப்பாருள் விவேகமிகுத்த பெரியோர்களைக்கண்டெடுத்து கவுன்சல் மெம்பரிற் சேர்ப்பது சகல வகுப்பாருக்கும் சுகத்தை விளைவிப்பதுமன்றி அந்தந்த வகுப்பார்களுக்கு நேரிட்டுள்ள குறைகளையும் அகற்றி வாழ்வதற்கு ஆதாரமென்றுங் கூறியிருந்தோம்.

அவற்றைக் கண்ணுற்ற சுயப்பிரயோசன சோம்பேறிகள் அத்தகைய வகுப்பைப் பிரித்து ஒட்டுக் கொடுக்கப்படாதென்றும், சில மூடர்கள் அவ்வகையான அபிப்பிராயங் கொடுக்கின்றார்கள். அவர்கள் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு ஒவ்வொரு வகுப்பென பிரிக்கலாகாதென்றுங் கூறுகின்றார்கள்.

இவ்வகை பிரிக்கலாகாதென்று கூறுவோர் பிரிக்கத்தக்க தொடர் மொழிகளாகும் ஐயர், முதலி, செட்டி, நாயுடு, நாயகர் என்னும் ஈற்றிலுள்ள சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு முத்துசாமி, இராமசாமி, கோவிந்தன்,