பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 221

ராஜாங்கத்தோர் இவர்களின் குணாகுணங்களை நன்காராய்ந்து ஏழைகளை ஈடேற்றுவார்களென்று நம்புகிறோம்.

- 3:30; சனவரி 5, 1910 -


104. புதிய கவுன்சல் நியமனம்

சென்னை ராஜதானியில் தற்காலம் ஆரம்பித்திருக்கும் ஆலோசினை சங்கத்தில் மகமதியருக்குள்ளும், இந்துக்களுக்குள்ளும் அங்கங்களை நியமித்ததுமன்றி யூரேஷியருக்குள் ஒருவரையும் சுதேசக் கிறிஸ்தவர்களுக்குள் ஒருவரையும் நியமித்துள்ளது கண்டு மிக்க ஆனந்தித்தோம். இத்தகைய நியமனங்களால் அந்தந்த வகுப்பார்களின் குறைகளை அவரவர்களின் பிரதிநிதிகளின்பால் தெரிவித்து ஆலோசனை சங்கத்திற் பேசவும் தங்களுக்கு நேரிட்டுள்ள குறைகளை நீக்கிக் கொள்ளவும். தக்கவழிகளுண்டாயின. இவ்வகை நியமனம் பிரிட்டிஷ் ஆட்சி இவ்விடம் நிலைத்தபோதே ஆரம்பித்திருப்பார்களாயின் சகலவகுப்பாரும் நற்சுகம் பெற்று ஆனந்தத்தில் இருப்பார்கள்.

அங்ஙனமின்றி இத்தேசத்தோர் இட்டிருக்கும் பெரியசாதி, சின்னசாதியென்னும் வேஷத்திற்குத் தக்க இடங்கொடுத்துவிட்டதின் பேரில் பெரியசாதிகளெனப் பெயர்வைத்துக் கொண்டுள்ளவர்களே வேண்டிய சுகங்களை அநுபவித்துக் கொண்டு மற்றவர்கள் யாவரையும் தலை எடுக்கவிடாமல் ஆண்டுவந்ததுமன்றி அரசையும் அநுபவிக்கவேண்டுமென்னும் ஆனந்தத்திலிருந்தார்கள்.

இத்தகைய ராட்சியபாரத்தை விரும்பினோர் ஆங்கிலேயர்களைப்போல் சாதிபேதமற்றவர்களும், சமயபேத மற்றவர்களும் தன்னவ ரன்னியரென்னும் பட்சபாதமற்றவர்களும் அவன் சின்னசாதி, நான் பெரியசாதியென்னும் பொறாமெயற்றவர்களுமாய் இருப்பார்களாயின் கருணை தங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் சுயராட்சியமளித்து சகலரையுஞ் சுகமடையச்செய்வார்கள்.

அங்ஙனமின்றி தங்கள் சாதிவரம்புக்குள் சம்மந்தப்பட்ட அனந்தம் பெயர்களுக்குத் தக்க சுகங்கொடாது அகற்றியதுமன்றி ஆரியர்களுக்கு எதிரிடையான சாதிபேதமற்ற திராவிடர்களாம் ஆறுகோடி மக்களை அல்லலடையச் செய்து முன்னேறி சுகமடையும் படியான வழிகளையும் அடைத்து பெரிய சாதிகள் குற்றஞ்செய்தால் சத்திரத்தில் உட்காரவைப்பதும், சின்ன சாதிகள் குற்றஞ்செய்தால் தொழுவில் மாட்டி வெய்யலில் காயவைப்பதுமாகிய அநீதிகளை வகுத்துவைத்துக் கொண்டவர்களாதலின் இவர்கள்பால் சுயராட்சியத்தையளிப்பதாயின் ஆறுகோடி திராவிடர்களை அடியோடு பாழக்கிவிட்டு அவர்களுக்கு அடங்கியுள்ள சாதியோர்களையும் நிலைகுலையச் செய்துவிடுவார்கள் என்றுணர்ந்த கருணை தங்கிய ராஜாங்கத்தோர் சகல வகுப்போரும் தங்கடங்கட் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி குறைகளை அகற்றி முன்னேறி சுகம் பெரும் வழியாகிய நியமனத்தை செய்துவிட்டார்கள்.

இவ்வகையாய் கருணை மிகுத்த நியமனத்தில் ஆரியர்களுக்கு எதிரிடையானவர்களும், சாதிபேதமற்ற திராவிடர்களுமான ஆறுகோடி மக்களின் கஷ்டநஷ்டங்களையும் சாதிபேதம் வைத்துள்ளார் செய்துவரும் இடுக்கங்களையும் தங்கள் வீடு வாசல்களில் சாதியாசாராம் செய்துவரும் வழக்கம்போல் இராஜாங்க உத்தியோகசாலைகளில் செய்துவரும் அக்கிரமங்களையும் இராஜாங்கசங்கத்தில் எடுத்தோதி அவர்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்காய் சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள்ளோர் பிரதிநிதியை கருணைதங்கிய கவர்னரவர்கள் நியமித்து ஏழைகளின் இடுக்கங்களை நீக்கி ஆதரிப்பாரென்று நம்புகிறோம்.

அவரது நன்னோக்கத்திற்கு உபபலனாக (டிபிரஸ் கிளாசை) முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்னும் நல்லெண்ணமுடையவர்களாய் வெளி