பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 337


ஆதலின் ஜெயில் கைதிகளின் சுகங்களையும், அசுகங்களையும் ஆராய்ந்து சீர்திருத்துவதற்கு முன்பு அந்தந்த கிராமங்களில் எந்தெந்தத் தொழிலற்ற சோம்பேறிகளிருக்கின்றார்களென்று கண்டறிந்து அந்தந்தக் கிராமவாசிகளைக் கொண்டே பண்ணைத் தொழிலுக்கும், கைத்தொழிற்சாலைக்கும் அனுப்பி அவர்களின் சோம்பலும், சூதும் அகலச்செய்து ஜாக்கிரதையிலும் சுறுசுறுப்பிலுங் கொண்டுவரச்செய்வார்களாயின் ஜெயில் கைதிகள் குறைந்து வித்தியாவிருத்திகள் பெருகுவதற்கு ஆட்சேபமில்லை.

இத்தகைய விஷயங்களில் அந்தந்த கிராமத்தோர்களைக் கொண்டே உள்ள சோம்பேறிகளை இராஜாங்கத்தார் கண்டுபிடித்து கைத்தொழிற் சாலையில் சேர்க்கவேண்டியது அவர்களது பொறுப்பாகும். கைத்தொழிற் சாலையில் சேர்ந்தவர்களை கிராமக்கூட்டத்து கனவான்களின் பொருளுதவியால் கைத்தொழில்களை விருத்தி செய்யவேண்டியது வித்தியார்த்திகளின் பொறுப்பாகும்.

ஈதன்றி நீதியின் சுகங்களையும், நெறியின் சுகங்களையும், ஒழுக்கச் சுகங்களையும், இராஜவிசுவாச சுகங்களையும் அவர்களுக்கு விளக்க வேண்டுமேயன்றி மற்றும் மதசம்மந்தவிஷயங்கள் யாதையும் அவர்களுக்குப் போதிக்கலாகாது.

காரணமோவென்னில் அவரவர்களின் மதசம்மத தெய்வங்களே திருடியும் தின்றும் அடிபட்டுள்ளபடியால் தாங்கள் அன்னியனுடையப் பொருளைத் திருடுவதினாலும் தின்பதினாலும் என்ன சங்கையென இருமாந்து செய்வார்கள். தங்கள் தேவதைகளே பொய்யைச்சொல்லி வஞ்சித்திருப்பதினால் தாங்கள் பொய்யைச்சொல்லுவதினால் யாது கேடுண்டாமென்பார்கள். தங்கள் தேவதைகளே விபசாரத்திற்குட்பட்டுள்ளபடியால் தாங்கள் செய்யும் விபசாரத்தால் யாதுகேடுண்டாமென்று அகங்கரிப்பர். தங்கள் தேவதைகளே கொழுத்த மாமிஷத்தைக் கூடிப் புசிக்கும் பிரீதியிலும் அன்னியர் பொருளை அபகரிக்கப் போதிக்கும் பிரீதியிலும் முள்ளபடியால் தாங்கள் புசிப்பதிலும், தாங்களபகரிப்பதிலும் யாது கேடுண்டாமென்று ஆர்ப்பரிப்பர், சிறைச்சாலைகளிலேனும் மதசம்மத விஷயங்களை மறந்தும் போதிக்காமலிருக்கக் கூறியுள்ளோம்.

சோம்பேறிகள் பெருகுவதற்கும் சிறைச்சாலைகள் நிறம்புவதற்கும் மதசம்மதக்கட்டுக்கதை சதா நம்பிக்கை சோம்பலே காரணமாயிருத்தலால் மற்றுஞ் சிறைச் சாலைகளி லவற்றைப் போதிப்பது முற்றும் சோம்பலடையச் செய்துவிடும். ஆதலின் ஒவ்வோர் கிராமவாசிகளும் தங்கள் தங்கள் கிராமங்களில் யாதொரு தொழிலுமின்றி வீணர்களாய்த் திரிவோருக்கு கைத்தொழிற்சாலைகளமைத்து கற்பிப்பதுடன் நீதியின்வழிகளையும் நெறியின் வழிகளையும் ஒழுக்கவழிகளையுந் தெள்ளறப் போதித்து கருணைதங்கிய ராஜவிசுவாசத்திலும் நிலைக்கச் செய்விப்பார்களென்று நம்புகிறோம்.

- 4:46; ஏப்ரல் 25, 1911 -


203. திண்டிவனம் தாலுக்காவைச் சார்ந்த பாஞ்சாலம் சாத்தனூர் மேல்பாக்கம்

இம்மூன்று கிராமங்களிலும் வசிக்கும் ஏழைக்குடிகள் யாவருங் ககூடி அவ்விடங்காலியாய் வெறுமனே கிடக்கும் பூமியை தாங்கள் உழுது பயிர்செய்யுமாறு கேட்டும் அவற்றை இன்னும் பெறாதவர்களாய் இருக்கின்றார்கள்.

ஏழைக்குடிகள் நாளுக்குநாள் பெருகிவிட்டபடியால் இப்போதவர்கள் குடியிருக்கும் வீடுகள் போதாது மாடுகள் கட்டியிருக்கும் தொழுவங்களில் வசித்து வருகின்றார்கள். வீடு கட்டிக் கொள்வதற்கு இடங்களைக் கேட்டும் அதையும் அவர்களுக்குக் கொடுத்து உதவியதைக் காணோம்.

ஏரிநீர் வற்றிவருங்காலங்களில் சிலவிடங்களிலெல்லாம் பயிர்களை விளைவித்து தாங்களும் சீவிப்பதுடன் இராஜாங்கத்தோருக்கும் வரி செலுத்தி