பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358 /அயோத்திதாசர் சிந்தனைகள்


சு. பரதேசியாரே, ஐரோப்பியராலேயே இச்சுதேசிகள் சுகமடைகின்றார்கள். சுதேசிகளாலேயே சுதேசிகள் சுகமடைகிறதில்லை என்று கூறலாமோ.

ப. சுதேசியாரே, தற்காலம் சுதேசம் சிறப்படைந்து வருவதற்கும், சுதேசிகள் சுகவாழ்க்கைப் பெற்று சீரடைவதற்கும், ஐரோப்பியர்களது கருணையும் செயலுமேயன்றி வேறொருவரது செயலும் இல்லை என்று துணிந்து கூறலாமே.

சு. பரதேசியாரே, சுதேசிகளுக்கு சுதேசிகளால் யாதொரு சுகமுமில்லையென்று எவ்வாறு கண்டறியலாம். ஐரோப்பியர்களால் சுதேசிகளுக்கு சுகமுண்டென்று எவ்வகையால் கண்டறியலாம்.

ப. சுதேசியாரே, அவரவர்கள் சுகத்திற்கு அவர்கள் முயற்சிகளே காரணமாயிருக்கின்றபடியால் சுதேசிகளின் முயற்சி எத்தகையது, ஐரோப்பியர்களது முயற்சி எத்தகையதென்று உணறுமிடத்து விளங்கும். அதாவது, பெளத்த தன்மம் இந்தியதேச முழுவதும் நிறைந்திருந்த காலத்தில் அவர்களால் கண்டுபிடித்து உலகோபகாரமாக எழுதிவைத்த நுாற்களும், செய்துகாட்டிய வித்தைகளுமே நாளதுவரையில் நிகழ்ந்துவருகின்றதன்றி தற்காலமுள்ள சுதேசிகளால் உலகோபகார நூற்களேனும், உலகோபகாரக் கைத்தொழில்களேனும், தேச சீர்திருத்தங்களேனும் செய்ததே கிடையாது. அதற்குப் பகரமாக பௌத்தர்களால் வரைந்துவைத்துள்ள இலக்கிய நூற்களுக்குமேல் வேறு நூல்கள் எழுதியது கிடையாது. அவர்கள் எழுதிவைத்துள்ள இலக்கண நூற்களுக்குமேல் வேறு நூற்கள் எழுதியது கிடையாது. அவர்கள் எழுதியுள்ள வைத்திய நூற்களுக்குமேல் வெவ்வேறு நூற்கள் எழுதியது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்துசெய்த சம்மாங்குடை, பிரம்புகுடை முதலிய குடைகளுக்குமேல் வேறு குடைகளுஞ் செய்தது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த நீர் பாய்ச்சும் ஏற்றங்களுக்கு மேலாய் நீர்பாய்ச்சுங் கருவிகளை இவர்கள் கண்டுபிடித்ததுங் கிடையாது. அவர்கள் கண்டு பிடித்திருந்த பருத்தியின் நெசவுகளுக்கும் பட்டினது நெசவுகளுக்கும் மேலாய நெசவுகளை இவர்கள் கண்டுபிடித்ததும் கிடையாது. அவர்கள் கண்டுபிடித்து செய்துவந்த கட்டங்களுக்கு மேலாய விருத்தி இவர்கள் செய்தது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த ஓடதிகளுக்கு மேலாய ஓடதிகளை இவர்கள் கண்டுபிடித்தது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த லோகங்களுக்கு மேலாய லோகங்களை இவர்கள் கண்டுபிடித்தது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த இரத்தினங்களுக்கு மேல் இவர்கள் கண்டுபிடித்த இரத்தினங்கள் கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த சித்துக்களுக்குமேல் இவர்கள் கண்டடைந்த சித்துக்கள் கிடையாது. அவர்கள் கண்டடைந்த ஞானசுகத்திற்குமேல் இவர்கள் கண்டடைந்த ஞானசுகம் கிடையாது.

காரணமோவென்னில் பௌத்தர்கள் யாவரும் தங்கடங்கள் முயற்சியால் கல்வியின் விருத்தியும், கைத்தொழில் விருத்தியும் பெறும்படியானச் செயல்களிலிலேயே முன்னேறியவர்களாதலின் சகல விருத்தியிலும் சிறப்புற்று உலகெங்கும் பிரகாசித்துவந்தார்கள். தற்கால சுதேசிகளோ கல்வி விருத்திகளையும், கைத்தொழில் விருத்திகளையும் சாதி வித்தியாசத்தால் பாழ்படுத்தி சாமி கொடுப்பார் சாமி கொடுப்பாரென்னும் பொய்ப்பிராந்தியாம் சோம்பலேறி நின்று விட்டபடியால் சகல விஷயக்கேடுகளுக்கும் ஆதாரமாகிவிட்டது.

இத்தகையக் கேடுண்ணும் நிலையில் இதுவரையிலும் இருக்குமாயின் தேசமும் இருளடைந்து மக்களும் பாழடைந்து சீர்குலைந்திருப்பார்கள். இவ்வகைக் கேடுண்டுவருங்கால் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்துடன் கருணைகொண்டு சகலசாதியோரையும் சகோதரர்களென பாவிக்கும் ஐரோப்பியர்கள் வந்து தோன்றி தேசத்தையும், தேசமக்களையும் சீர்திருத்தி சிறப்படையச் செய்துவருகின்றார்கள்.

- 5:1; சூன் 14, 1911 -