பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஆட்சியார் கருணை புரிவார்களாயின் ஏழைக்குடிகள் யாவரும் ஈடேற்றம் பெறுவார்களென்பது சத்தியம் சத்தியமே.

சட்டச் சபையில் பெருந்தொகையான மெம்பர்களைச் சேர்த்தும் இவ்வேழைக்குடிகளின் கஷ்டங்களை ஒருவரேனும் எடுத்துப்பேசியது கிடையாது. காரணம் சாதிபேதமுள்ளோர்கள் மத்தியில் சாதிபேதமில்லார்கள் நாசமடையவேண்டுமென்பதே, அவர்களெண்ணமும் செயலுமாதலால் ஏழைமக்களின்மீது இதக்கமென்பதே வைக்கமாட்டார்கள். ஆடுகள் நனைகிறதென்று புலிகள் புறண்டழுவதுபோல் சில பெரியசாதிகளென்போர் கூட்டங்கூடி தாழ்ந்த சாதியோர்களை உயர்த்தப் போகின்றார்களே அஃது கருணையல்லையோ என்பாராயின் அஃது மறக்கருணையிலுஞ் சேராது அறக்கருணையிலுஞ் சேராது. காலமெல்லாம் தாழ்ந்த சாதியோரை உயர்த்தப்போகின்றோமென்று தங்களை உயர்ந்த சாதிகளெனப் படாடம்ப மடித்துக்கொள்ளுவதற்கும், அவர்களது மதத்தையும், அவர்களது செயலையும் தழுவியுள்ள ஏழைக்குடிகளை இவர்கள் தாழ்ந்த வகுப்பாரென சொல்லிக் கொண்டே தாழ்த்துவதற்கேயாம்.

ஏழைமக்களை சீர்திருத்துவோர் ஆங்கிலேய துரைமக்களும், சாதிபேதமற்றப் பெரியோர்களுமேயாவர். ஆதலின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் ஏழைமக்களின் இடுக்கங்களை நீக்கி ஆதரிக்கும் சட்ட சபை மெம்பர் ஒருவரை நியமிக்க வேண்டுகிறோம்.

- 5:41; மார்ச் 20, 1912 -


248. சென்னை முநிசபில் பிரசிடென்டவர்களும் கமிஷனரவர்களும் ஏழைக்குடிகளின் இடுக்கங்களை நோக்கல் வேண்டும்

சென்னை முநிசபில் எல்லைக்குட்பட்டுள்ளக் குடிகள் யாவருக்கும் சுகாதாரத்தை அளித்துக் காக்குங் கூட்டத்தோருக்கு கார்ப்பரேஷன் கமிட்டியார் என்றும், முநிசபில் சங்கத்தோரென்றும் பெயர் பெற்றக் கூட்டத்தோரைக் குடிகளே நியமித்துக்கொள்ளுவதாகும். அவ்வகை நியமித்துக்கொள்ளினும் அவர்களும் இராஜாங்கத்தோரைச் சேர்ந்தவர்களே யாவர். இத்தகையக் கூட்டத்தோரை குடிகள் யாவரும் ஒன்றுகூடி தங்கள் தங்கள் சுகாதாரத்திற்காக ஏற்படுத்திக் கொண்டார்களன்றி தங்களைத் தீரா சஞ்சலத்தில் உள்ளாக்கிக் கொள்ளுவதற்கன்று. சுகாதாரமாவது யாதெனில், வீதிகளின் சுகம், நீர்சுகம், தீபசுகம், பற்பல தொத்துரோகங்கள் அணுகா சுகம், துட்டர்களை அடக்கிக் காக்குஞ் சுகம், கள்ளர்கள் பயமில்லாமல் வாழ்க்கை சுகங்களாகிய பேரானந்தத்தை அளித்துவரும் சிறந்த கூட்டத்தோருக்கே சுகாதாரக் கூட்டத்தோரென வழங்கிவருகின்றார்கள்.

அவ்வகை வழங்கிவருங் கூட்டத்தோருள் ஒரு பிரசிடென்டும், ஒரு வைஸ் பிரசிடென்டும், அந்தந்த டிவிஷன்களிலுள்ளக் குறைகளை எடுத்துப்பேசி சுகச்சீரளிப்பதற்கு ஒவ்வோர் கமிஷனர்களும் சேரும் தொகைகளை பத்திரப்படுத்திவைப்பதற்கும் ஒரு ரெவினியூ ஆபீசருடமிருந்து காரியாதிகளை நடத்தி வருகின்றார்கள். இவர்கள் யாவரையும் குடிகளுக்கு சுகாதாரம் அளித்துக்காக்கும் தாய்தந்தையர்களுக்கு ஒப்பானவர்களென்றே கூறத்தகும். குடிகளின் சுகத்தைக் கருதியே ஏற்பட்டக் கூட்டத்தோர்களாதலின் குடிகளின் தாய் தந்தையர்களுக்கு ஒப்பானவர்களாகும். இத்தகைய சிறந்த கூட்டத்தோர் தாங்கள் நடாத்திவரும் சுகாதாரச் செயல்களுக்கென்று குடிகளிடம் வசூல் செய்யும் வரித்தொகைகளை மட்டிலும் பெரிய உத்தியோகஸ்தர்கள் அந்தந்த வீடுகடோரும் நேரில்வந்து அவரவர்கள் இவ்வளவு தொகை செலுத்தலாமென்னுங் காருண்யத்தொகையை மதிப்பிட்டுப் பின்னர் வசூல் செய்து காரியாதிகளை நடத்துவதாயின் தாய் தந்தையர்கள் பிள்ளைகளை சீர்திருத்தி ஆதரிப்பதற்கு ஒப்பதாகும்.

அங்ஙனம் பெரிய உத்தியோகஸ்தர்களே நேரில் வந்து பார்வையிட்டு வரிகளை நியமிக்காது மற்றுமுள்ள உத்தியோகஸ்தர்களை அநுப்பி வரிகளை