பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 463

சந்ததியோரையுஞ் சீரழியச்செய்து தேசத்தையும் பாழடையச்செய்தே வருகின்றார்கள்.

இதுகாருங் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் வந்து இத்தேசத்தைக் கைப்பற்றி வேண சீர்திருத்தங்களைச் செய்யாதிருப்பார்களாயின் இத்தேசத்தோருக்குள்ள சாதிபேதமென்னுங் கொடு நாற்றத்தாலும், சமயபேத மென்னும் படுமோசத்தாலும் தேசமும் தேசமக்களும் பாழடைந்திருப்பார்களென்பது சத்தியமேயாம். ஏதோ பூர்வ புத்ததன்ம புண்ணியவசத்தால் பிரிட்டிஷ் ராஜாங்கந்தோன்றி சகலமக்களையும் மநுக்களாக நேசித்துத் தங்களைப்போல் மற்றய மநுக்களையும் சுகச்சீர்பெறச்செய்து வருகின்றார்கள். அவர்களது நற்குணத்தையும் நற்செயலையும் அனுசரித்து இத்தேசத்தோர் விவேகம் பெருகி மதுக்களை மநுக்களாக நேசிப்பார்களென்று நம்புகிறோம். வித்தியா கர்வம், தனகர்வம், சாதிகர்வம், மதகர்வம், பெருகும் வரையில் தேசமும் தேசமக்களும் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் பொறார்களென்பது திண்ணம்.

- 6:44; ஏப்ரல் 9, 1913 -


288. படிப்பால் பலசுகம் உண்டு எனினும் படிப்பால் பலவித்தையும் விவசாயமும் பாழடைகின்றதே

பற்பல தேசங்களிலும் அவரவர்கள் பாஷைக்குரிய படிப்பைப் படித்த ஒவ்வோர் மனுமக்களும் அப்படிப்பினது விருத்தியைக்கொண்டே தங்கள் அறிவை வளர்த்து வித்தியாவிருத்தியிலும் விவசாயவிருத்தியிலுந் தாங்கள் வாழுந் தேசங்களை சிறப்புறச்செய்வதுமன்றி தேசமக்களும் சுகச்சீர் பெற்று வாழ்கின்றார்கள்.

அதன் ஏதுக்களோ என்னில் இரும்புவேலைசெய்யும் ஓர் மனிதனுடைய புதல்வன் தனது சுயபாஷையைச் செவ்வனே படித்துக்கொள்ளுவானாயின் தான்பழகியுள்ள இரும்பு வேலையிலேயே தனது அறிவை வளர்த்து நூதனமாய்க் கருவிகளையும் நூதனமான இருப்பின் இயந்திரங்களையுங்கண்டு செய்து அதனால் தான் இலட்சாதிபதியாக சுகித்து வாழ்வதுடன் அத்தொழிலைத் தொடுத்துக் கற்றவர்களும் சுகமடைந்து அக்கருவிகளிலும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை வாங்கி வியாபாரஞ்செய்யும் வாணிபர்களும் செல்வந்தர்களாக விளங்குகின்றார்கள். அவ்விருப்பின் இயந்திரங்களைக் கொண்டு நடத்தும் இருப்புப்பாதை ரதங்களிலும் நீராவிக் கப்பல்களிலும் கோடாகோடி மக்களின் போக்குவருத்துக்கும் உதவியாயிருக்கின்றது.

இவ்வகையாக மரவேலைச் செய்வோர்களின் புத்திரர்களும், கண்ணாடிவேலை செய்வோர்களின் புத்திரர்களும், நெசிவுவேலைச் செய்வோர்களின் புத்திரர்களும், வருணவேலை செய்வோர்களின் புத்திரர்களும், சித்திரவேலை செய்வோர்களின் புத்திரர்களும், விவசாயச் தொழிற் செய்வோர்களின் புத்திரர்களும் மற்றவர்களும் தங்கள் சுயபாஷையைப் படித்துக்கொண்டு தங்களது கண்ணையுங் கருத்தையும் வித்தியா விருத்தியிலும் விவசாயவிருத்தியிலும் செலுத்தி மேலும் மேலும் அவற்றை விருத்திச்செய்து தேசத்தைச் சிறப்படையச் செய்வதுடன் தேசமக்களையும் சுகச்சீர் பெறச் செய்துவருவதை நமது காட்சியினாலும் அனுபவத்தினாலுமே கண்டறியலாம். மற்றும் இத்தேசமக்களின் ஒற்றுமெயாலும் அன்பின் மிகுதியினாலும் கருணா நோக்கத்தாலும் தாங்கள் கற்ற வித்தியாவிருத்தி வழிகளை தங்கள் மட்டில் அடக்கிக்கொள்ளாது ஏனைய மக்களுக்கு ஊட்டிவருவதுடன் அதனதன் நுட்பாநுட்பங்களை புத்தக ரூபமாகவும் அச்சிட்டுப் பலரும் வாசித்து விருத்தி பெறவும் செய்துவருகின்றார்கள்.

இத்தென்னிந்தியாவிலோ வென்னில் நாங்கள் பிரம்மா முகத்திற் பிறந்தவர்கள் இப்போது மநுஷிவயிற்றிற் பிறக்கின்றோம், பசுவின் வயிற்றிற் பிறந்தவர்கள் இப்போது மநுஷிவயிற்றிற் பிறக்கின்றோம் கழுதைவயிற்றிற் பிறந்தவர்கள்