பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 521

ஆதலின் இப்பொய்யாய் சாதிப்பற்று கட்டோடொழியுமாயின் மதப்பற்றுக்கள் யாவும் அன்றே ஒழிந்துபோம் அக்காலத்தேசமும் தேசமக்களும் சுகச்சீர் பெறுவதுடன் சுயராட்சியமென்னும் எண்ணமும் அக்காலுதிக்கில் கருணை தங்கிய ராஜாங்கத்தார் சற்று கண்ணோக்கிப் பார்ப்பார்கள். அங்ஙனமின்றி சாதியும் இருத்தல் வேண்டும் மதமுமிருத்தல் வேண்டும் சுபராட்சியமும் வேண்டுமென்பராயின் அம்மொழியை பிரிட்டிஷ் ஆட்சியார் செவிகளில் ஏற்கவே மாட்டார்கள். ஆதலின் எத்தேச எப்பாஷைக்காரராயினும் பொதுவாய ராஜாங்கம் விரும்புவோர் மதப்பற்றையும் சாதிப்பற்றையும் ஒழிக்கும் வழிகளை முதலாகக் கூட்டங்கள் கூடி தேடிக் கொள்ள வேண்டியதே அழகாம்.

- 7:44; ஏப்ரல் 8, 1914 -


323. தேசம் எவற்றால் சிறப்படையும் மநுக்கள் எவற்றால் சுகமடைவார்கள்

மனிதன் உலகத்தில் தோன்றி வியவகாரதிசைக்கு வந்தபோது அவன் பூமியையே முதலாவது நோக்கவேண்டியவனாகின்றான் எனென்பரேல் அவன் கண்ணினாற் காணும் சகலவகையான தோற்றங்களுக்கும் காரண பூதமாயுள்ளது பூமியென்றே கண்டறிவான். அவ்வகைக் கண்டறிந்தபோது அவற்றில் தாபர வர்க்கத் தோற்றங்களே தம்மெய்யும் மற்றய சீவராசிகளையும் போஷித்து வளர்க்க கூடியவைகள் என்று உணர்வான். அவ்வகைவுணர்வின் மிகுதியால் பூமியை நன்கு திருத்தி பண்படுத்தி வேண விதைகளை விதைத்து பயிறுகளை ஒங்கச்செய்து தானியங்களை அறுத்துப் போரடித்துப் பண்டிகளில் நிறப்பித் தாமும் தங்கள் குடும்பங்களும் புசித்து வளர்ச்சி பெறுவதுடன் ஏனய மனித கூட்டங்களுக்கும் மற்றும் சீவராசிகளுக்கும் உபகாரியாக விளங்குவான். இவ்வகையாக அங்கங்கு வாசஞ்செய்யும் மக்களுக்குள் உழைப்பாளிகள் யாவரும் முயன்று பூமியின் விருத்தியையே முன்னோக்கி தானிய வர்க்க பலனையும் கனிகள் வர்க்க பலன்களையும் மென்மேலும் பெருகச்செய்யும் வழிவகைகளைத் தேடி தங்கள் கண்ணையுங் கருத்தையும் பூமியின் விருத்தியையே நாடி உழைத்து வருவார்களாயின் தேச சிறப்பிற்கு இதுவே முதற்படியாகும்.

இவ்வகை போஷிப்பிற்கு ஆதாரமாய உணவு பொருட்களை விருத்தி செய்வோர் நீங்கலாக ஏனைய மனிதன் அந்தந்த தொழில்களை சீர்திருத்தி பலனடையச் செய்தற்கு வித்தையை விருத்தி செய்வதே கண்ணுங் கருத்துமாயிருந்து கைத்தொழிலை பெருக்கி வேணக்கருவிகளைக் கண்டுபிடித்து மனிதர்களின் போக்குவருத்தின் வசதிகளுக்கும் தானிய விருத்தியின் வசதிகளுக்கும் சுகாதார வசதிகளுக்கும் உபகாரியாக விளங்குவான். இவ்வகையாக அங்கங்கு வாசஞ்செய்யும் மனித கூட்டங்களில் வித்தியாவிருத்தியை விரும்புவோர் ஒவ்வொருவரும் தங்கள் கண்களையும் கருத்தையும் வித்தியாவிருத்தியில் ஊன்றி மேலும் மேலும் அரிய வித்தைகளைப் பரவச்செய்து சருவ சீவர்களுக்கும் உபகாரிகளும் ஆதரணைக் கர்த்தர்களுமாக விளங்குவார்கள். இதுவே தேச சிறப்பிற்கு இரண்டாம் படியாகும்.

இத்தகைய விவசாய விருத்திக்கும் வித்தியா விருத்திக்கும் விவேக விருத்தியை வளர்த்து மேலும் மேலும் சிறப்பிப்பதற்குக் கல்வியின் விருத்தியே காரணமாதலின் அக்கல்வியின் விருத்தியைக் கலை நூற்களைக் கண்டு படித்து அறிவை விருத்திபெறச் செய்துக்கொள்ளுவதுடன் ஏனைய சிறுவர்களுக்கும் கலை நூற்களையே கற்பித்து விவசாயத்தையும் வித்தையையும் விருத்திபெறச் செய்வான். இதை ஒற்றே ஏனைய மக்களும் அங்கங்குள்ள சிறுவர்களுக்குக் கலை நூற்களையே கற்பித்து அவர்களை நற்சீரிலும் நல்லொழுக்கத்திலும் நிலைபெறச்செய்து அறிவை பெருக்கும் உபாயங்களைத் தேடல் வேண்டும். இதுவே தேச சிறப்பிற்கு மூன்றாம் படியாகும்.

இத்தகையாய மூவகை விருத்திகளையும் ஆராய்ந்துவரும் மனிதன், மனித கூட்டங்களில் தோற்றுந் துக்கங்களை ஆராய்வான். அவற்றுள் பிறப்பினாலாய