பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 9


அவதியுள்ளக் குடிகளுக்கு அமைதியில்லாமற்போம்.
ஆற்றலில்லா அரசர்களுக்குப் போற்றலில்லாமற்போம்.

- 1:24; நவம்பர் 27, 1907 -

குதிரையானது கொள்ளென்றால் வாயைத் திறப்பதுங் கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளுவதுபோல் அரசாங்கம் வேண்டுமா என்றால் ஆம் ஆமென்றும், ஆளுகை செய்வாயா என்றால் உக்-ஊ என்பதுபோல் ஆசை வெட்கமறியாது என்னும் பழமொழிக்கிணங்க அரசாங்கம் வேண்டுமென்றால் அதற்கமைந்தகுணம் நமது தென்னிந்தியாவில் எச்சாதியாருக்குண்டு.

அதாவது அரசனாக வேண்டியவனுக்குத் தன் குடிபிறப்பின்வாயலாய் இயல்பில் இருக்கவேண்டிய குணங்கள் எவையெனில்:-

எத்தகைய சுத்தவீரனைக்காணிலும் அஞ்சாமெய், அளிக்கும் ஈகை என்னும் தன்மகுணமே மிகுத்தமெய், ஆய்ந்து தெளியும் விவேக மிகுத்தமெய், ஊக்கமுடைத்தமெய் ஆகிய நான்கு குணங்கள் அமைந்த தேகியாயிருத்தல் வேண்டும்.

பூமியை ஆளுகை செய்வதில் விழிப்புடையவனாகவும் துணிவில் ஆண்மெய் உடையவனாகவும் இருத்தல் வேண்டும்.

தான் அறநெறியில் நிற்கவேண்டியதன்றி தனது குடிகளையும் அறநெறியில் நடாத்தி வீரத்தில் நின்று மானத்தைக் காப்பாற்றல் வேண்டும்.

தேச விருத்திச்செய்து நல்லவழியில் பொருளை சம்பாதித்து அவற்றை பிறர் கைக்கொள்ளாமற் காத்து அறம், பொருள், இன்பத்திற் செலவு செய்ய வேண்டும்.

குடிகளுடைய பார்வைக்கு அடக்கமுடையவனாகவும் அன்பனாகவுஞ் சாந்தமும் அமைதியுமுற்ற வாக்கை உடையவனாகவும் இருத்தல் வேண்டும்.

இனிமெயான வார்த்தைகளால் குடிகளுக்கீய்ந்து ரக்ஷித்தல் வேண்டும்.

குடிகளுக்கு இறையென்னும் புசிப்புக்கும் அவனே ஆதரை உடையவனாகவும் கார்த்தலுக்கும் அவனே ஆதரையுடையவனாகவும் இரக்ஷித்தலுக்கும் அவனே ஆதரையுடையவனாகவும் இருத்தல் வேண்டும்.

குடிகளால் தூர்த்தனென்றும் வஞ்சகன் என்றும் மிடியன் என்றும் கொடியன் என்றும் சொல்லத் தன் செவியால் கேட்டபோதிலும் அஃது தன்னிடத்தில் இல்லா குணங்களாதலின் அவர்கள் அறியாமெய்க்கு இரங்கி அறங்கூறல் வேண்டும்.

நீதிகோலாகுஞ் செங்கோலைக் கையிலேந்தி இனிய முகமலர்ச்சியுடன் நின்று தன்னவ ரன்னியர் என்றும் பட்சபாதம் இல்லாமல் அரசிறை நடாத்தி இழிந்த குடிகளை மேலேற்றி இரட்சித்தல் வேண்டும்.

இத்தகைய அறநெறியுள்ளோனை இறைவன் என்று கூறப்படும்.

நமது தென்னிந்தியாவில் இவ்வகை குணங்களைப்பெற்ற மேலோர்கள் யார், யாவரிடஞ் சுயராட்சியங் கொடுக்கலாம், என்பதை முதலாவது சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது. அஃதேனென்பீரேல்,

குப்பைகளையும் கூளங்களையும் ஆளும் முநிசிபல் ஆளுகைக்கு நம்மவர்களில் ஒவ்வொருவரை நியமித்திருப்பதில் நமக்கு எவ்வளவு சுகங்களை அளித்து வருகின்றார்கள். தங்களுக்கு வேண்டிய சுகங்களை எவ்வளவு தேடிக்கொள்ளுகின்றார்கள்.

கருணைதங்கிய ஆங்கிலேயர்களுடன் நம்மவர் கலந்து ஆளுகை நடத்துங்கால் தங்கள் சுயப் பிரயோசனத்தைத் தேடிக்கொள்ளும் அநுபவம் பிரத்தியட்சமாக விளங்க, மக்களை யாளும் ஆளுகையை இவர்கள் பெற்றுக்கொள்ளுவார்களானால் எழிய குடிகளுக்கு படுப்பதற்குப் பாயும், குடிப்பதற்குக்கூழும், நடப்பதற்குரோட்டு மற்றும் நாய்நரிகளுடன் மக்களும் உலாவவேண்டி வரும்.

ஆதலின் நமது தென்னிந்தியக் குடிகள் ஒவ்வொருவரும் அரசாங்கம் என்பதை கிள்ளுக்கீரைப்போல் எண்ணிக் கொள்ளாமல் பெரியாரைத்