பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பாலி : பிம்மதேயதேபிம்மண.
சமஸ்கிருதம் : பிரம்ம சம்பத்தே பிராமண.
தமிழ் :

திரிக்குறள்

அந்தணரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மெய் பூண்டொழுகலால்.

நல்லாப்பிள்ளை பாரதம்

நீதியும் நெறியும் வாய்மெயு முலகில் / நிறுத்தினோன் வேதியனன்றி
வேதியனேனு மிழுக்குறி னவனை / விளங்கு சூத்திர னெனவேத
மாதவர் புகன்றா றாதலாலுடல / மாய்ந்த பின் பாவதோர் பொருளோ
கோதிலாவிந்தப் பிறவியில் வேதக் / குரவநீயல்லையோகுரியாய்.

சமண நிலை கடந்து அறஹத்துக்களால் உபநயனமென்னும் ஞானக்கண் பெற்று உள்விழி பார்வை மிகுதியால் உண்மெய் உணர்ந்து புறமெய் அகற்றி தானே தானே தத்துவ சுயம்பிரகாச பரிநிருவாண சுகமடைவானாயின் அவனையே இருபிறப்பாளனென்று கூறப்படும். அதாவது தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும் பரிநிருவாண பிறப்பொன்றுமேயாம். இத்தகைய உபநயனமென்னும் ஞானவிழி பெற்று ஞானசாதன மிகுதியால் இருபிறப்பாளனாகும் பரிநிருவாணத்திற்கு உரியவனெவனோ அவனே யதார்த்த பிராமணனாவான்.

ஞானபோதம்

ஊனக்கண் அன்றென் றுளக்கண் அளித்தபின்
ஞானவநுபவ முரையென் றுரைத்தது.

கைவல்யம்

அசத்தி லெம்மட்டுண் டம்மட்டும் - பராமுக மாகினாய்
நிசத்தி உள்விழி பார்வை - யிப்படி நிறந்தர பழக்கத்தால்
வசத்தி லுன்மன நின்று - சின்மாத்திர வடிவமாகிடில் மைந்தா
கசத்த தேகத்தி விருக்கினும் - ஆனந்தக்கடல் வடிவாவாயே.

பட்டினத்தார்

நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே
மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக்கிடக்குது யெழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
ஆற்றிற் கிடந்துத் துறைதெரியாம வலைகின்றயே.

அங்ஙனமின்றி பெண்டு பிள்ளைக் கூட்டத்தினின்று பொருளாசை மிகுதி கொண்டு தன்னவர்களை ஏற்றியும் அன்னியர்களைத் தூற்றியும் சீவகாருண்ணிய மற்று தன்னையொற்ற மக்களைக் கொல்லாமல் கொன்று பத்துக்குடிகள் நாசமடைந்த போதிலும் தன் குடி சுகமடைந்தால் போதும் என்னும் பொறாமெயே ஒருருவாகக் கொண்டுள்ளார்கள் தங்களை பிராமணரென்று சொல்லித்திரிவது வேஷபிராமணமேயாகும்.

பெளத்த தன்மத்தோரால் பிரமமென்னும் சாந்தம் நிறைந்தவர்களுக்கு பிராமணர் என்றும் புஜபல க்ஷாத்திரியமுடையவர்களுக்கு க்ஷத்திரியரென்றும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறுகிறவர்களுக்கு வைசியர் என்றும் கையையுங் காலையும் ஓர் சூஸ்திரமாகக் கொண்டு பல சூஸ்திரங்களைச் செய்து பூமிகளின் விருத்திகளையும் கைத்தொழில் விருத்திகளையுஞ் செய்வோர்களுக்கு சூத்திரரென்றும் அவரவர்கள் தொழில்களுக்கும் விவேக விருத்திக்கும் வல்லபத்திற்கும் தக்கப் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள்.

அத்தொழிற்பெயர்கள் யாவையும் வேஷபிராமணர்கள் சாதிப் பெயர்களாக மாற்றி மதுப்பிரஜாபதி நான்கு வருணாசிரமங் கூறியுள்ளார் என்னும் மநுஸ்மிருதியில் ஒவ்வொரு சாதியோனும் அவனவன் பெயர்களிற்றில் இன்னின்ன வருணத்தானென்று அறிந்து கொள்வதற்கு தொடர்மொழிகள் வகுத்திருக்கின்றார்கள். அதாவது:-

மநுஸ்மிருதி

சாதக கர்மாதி சம்ஸ்காரம் நுக-ஙஉ ம் வசனங்களில் ஒரு பிராமணன்