பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /539


பிரம்மா முகத்தில் பிறந்தபடியால் பிராமணரென்று சொல்ல ஆதாரமிருந்தபோதினும் தற்கால பிறப்பு மாறுபட்டுள்ளதுமன்றி பிராமணத்தில் பிறந்த வழியே தெரியாததினால் மநுசாஸ்திரத்தின்படி யாதார்த்த பிராமணன் இல்லை என்றே விளங்குகின்றது.

தொழிற்பெயர் செயற் பெயர் யாவையுஞ் சாதிகளாக ஏற்படுத்தி அதற்கு ஆதரவாக மநுசாஸ்திரம் என்பதை நூதனமாக ஏற்படுத்தி வகுத்துள்ளக் கட்டளைபடிக்கு செயலுந் தொழிலும் பொருந்தாமல் அகன்றுள்ளது கொண்டு அவ்வாதரவாலும் எதார்த்த பிராமணரில்லை.

விவேக மிகுதியாலும் ஞானமகத்துவத்தினாலும் புத்தபிரானை “ஆதிகாலத் தந்தண” என்று காவியங்களில் கூறியுள்ளவாறு விவேகமிகுதியும், அன்பின் மிகுதியும், சாந்த மிகுதியும் திரிகால உணர்ச்சிமிகுதியும் உற்று சருவ சீவர்களையுந் தன்னுயிர்போல் கார்த்து அறஹத்துக்கள் என்றும், பிராமணர்கள் என்றும், அந்தணர்கள் என்றும் பெயர் பெற்ற மகாஞானிகளாகும் மேன்மக்கள் ஒருவரேனும் இவ்விந்துதேசத்தில் இல்லை என்பது திண்ணம் திண்ணமேயாம்.

இவ்விடம் யதார்த்தபிராமணரையும் வேஷப்பிராமணரையும் விசாரித்துணரும் காரணம் யாதென்பீரேல் சகல சாதியோரிலும் தங்களை உயர்ந்தசாதி பிராமணர்கள் என்று ஏற்படுத்திக் கொண்டு இத்தேசப் பூர்வக் குடிகளுந் திராவிட பௌத்தர்களுமாகியத் தமிழர்களை சகல சாதியோரிலுந் தாழ்ந்தசாதிப் பறையர்கள் என்று கூறி பலவகைத் துன்பங்களைச் செய்து பதிகுலைத்ததுமன்றி இவ்விடம் நூதனமாகக் குடியேறுகிறவர்களுக்கும் போதித்து அவர்களால் இழிவடையச் செய்கிறபடியால் வேஷப்பிராமணர் எவ்வகையால் உயர்ந்தசாதிகளாயினர் என்றும் திராவிட பெளத்தாள் எவ்வகையால் தாழ்ந்த சாதி பறையர்களாயின ரென்றும் விளக்குவதற்கேயாம்.

தங்களுக்குத் தாங்களே பிராமணரென்று சொல்லித் திரிவோர்களை விசாரித்தோம். இனியவர்களின் வேதோற்பவங்களையும் அதன் பலன்களையும் விசாரிப்போமாக.

நான்கு வேதத்தின் பாயிரத்துள் கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து பிரம்மா முனிவருக்குப் போதித்தாக கூறியிருக்கின்றது.

மநுதருமசாஸ்திரம் முதலத்தியாயம்

23 - வசனம்.

பிரம்மா அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன், இம்மூவர்களிடத்தினின்று வெளிப்படுத்தியதாகக் கூறியிருக்கின்றது. மற்றோரிடத்தில் நாயின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும், கழுதையின் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், தவளையின் வயிற்றிலும், மனிதர்கள் பிறந்து வேதங்களை எழுதியதாக வரைந்திருக்கின்றது. இருக்கு வேத 2-3-4 வது வாக்கியங்கள். வேதங்களை சிலரிஷிகளும், சில அரசர்களும் எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்நான்குவகை வேதோற்பவத்தில் எவை மெய்யென்றும், 67வை பொய் என்றும் ஏற்பது விவேகிகளின் கடனாம். இத்தகைய வேதங்களை வாசிப்பதால் மநுக்கள் சீரடைவார்களா சீர் கெடுவார்களா என்பதை ஆலோசிப்போமாக.

இருக்கு வேதம் 20 - வது வசனம். வசிஷ்டர் வருணன் வீட்டில் தானியம் திருடுவதற்குப் போனதினால் அவ்விடமிருந்த நாய் கடிக்கவரவும் அதைத் தூங்கும்படி மந்திரஞ் செய்திருக்கின்றார். இஃது அன்னியன் பொருளை அஞ்சாமல் திருடலாம் என்னும் சீர்கேட்டின் முதற்படியேயாம்.

இருக்குவேதம் 24 - வசனம்.

இயமனென்பவன் தன் புத்திரி யமுனா என்பவளை கற்பழிக்க எத்தனித்த போது அவள் மதிகூறல். யசுர் வேதம் 95 - வசனம், முதல் மநு தன் புத்திரியை மணந்திருக்கின்றான். இஃது அன்னியர் தாரங்களை ஆனந்தமாக இச்சிக்கலாம் என்னும் சீர்கேட்டின் இரண்டாம்படியேயாம்.

யசுர்வேதம் 117 - வசனம்.

அதர்வணவேதம் 160 - வது வசனம் எக்கியமாகிய நெருப்பில்