பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540/அயோத்திதாசர் சிந்தனைகள்

சுட்டுத்தின்பதற்கு ஆயிரம் பசுக்களை தானஞ்செய்ய வேண்டும் என்றும்,

தனக்கு சத்துருவாக யார் தோன்றுகிறார்களோ அவர்கள் யாவரையும் அழிப்பதற்கு குசப்புல்லுக்கு மந்திரஞ் சொல்லப்பட்டிருக்கிறது,

இஃது அன்னியர்களையும் அன்னிய சீவப்பிராணிகளையும் இம்சை செய்யலாமென்னுஞ் கொலைபாதக சீர்கேட்டின் மூன்றாம் படியேயாம்.

யசுர்வேதம் 111 - வசனம்.

சோமபானஞ் சுராபானம் என்னும் மயக்க வஸ்துக்களை உண்டுசெய்யும் பாகங்களையும் அதை உட்கொள்ளும் பாகங்களையும் கூறுகின்றது. இஃது மனிதன் சுயபுத்தியிலிருக்கும் காலத்திலேயே அனந்த கேட்டுக்குள்ளாகி அவத்தைப் படுகின்றான். அவ்வகை அவத்தையுள்ளோன் தன்னை மயக்கத்தக்க மதுபானங்களை அருந்தி இன்னும் மயங்குங்கோள் என்னும் சீர் கேட்டின் நான்காம் படியேயாம்.

யசுர்வேதம் 72 - வசனம். இதர மனிதர்களும் இருக்குவேதம் 5 - வது வசனம் விரகங்கர் என்னும் அரசனுடைய ஐந்து பிள்ளைகளும் வேதத்தின் கிரந்தகர்த்தர்களாய் இருந்ததாய் குறிப்பிட்டிருக்கின்றது.

அதே யசுர்வேதம் 112 0- வது வசனத்தில் இவ்வேதம் எழுதியவர்களில் நர மநுஷியராகிய கிரந்தகர்த்தாக்கள் இல்லை என்று கூறியிருக்கின்றது. இஃது கண்ணைக் கேட்டால் மூக்கைக் காட்டுவதும், காதைக் கேட்டால் வாயைக் காட்டுவதுமாகி சகலமுந் தேகந்தானே என்பது போல சமயத்திற்குத் தக்க மாறுகோட்களால் வேறுபட பேசற்கு பொய்யாம் சீர்கேட்டிற்கு ஐந்தாம் படியேயாம்.

- 2:8: ஆகஸ்டு 5, 1908 -

இத்தகைய விபச்சாரம், கொலை, களவு முதலிய பஞ்சபாதகங்களை தினேதினே செய்யினும் பாதகமில்லையாகும். வேதத்தின் நீதிபோதத்தை விசாரித்தோம். இனி இவ்வேதம் யாவரால் எக்காலத்தில் எவ்விடத்தில் தோன்றியது என்பதையும் விசாரிப்போமாக.

இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் இந்நான்கு வேதத்தை சங்கராச்சாரியேனும் பூர்த்தியாக வைத்திருந்து இன்ன கண்காட்சி சபையில் சேர்த்திருந்தார் என்னும் ஓர் சரித்திராதாரங் கிடையாது.

மாதவாச்சாரியேனும் இவ்வேதங்கள் முழுவதும் வைத்திருந்து இன்ன மடத்தில் கிடைத்தது என்றேனும் ஓர் சரித்திராதாரமும் கிடையாது.

இந்நான்கு வேதமும் இன்னின்ன வம்மிஷ வரிசையோரால் இன்னின்ன மடங்களில் இருந்துள்ளதாகுஞ் செப்பேடுகளேனுஞ் சிலாசாசனங்களேனும் ஏதொன்றும் கிடையாது.

மற்றும் எவ்வகையால் யாவரால் எப்பாஷையில் வெளிவந்தது என்பீரேல், பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இத்தேசத்தில் வந்து குடியேறிய சிலகாலங்களுக்குப் பின் சகலசாதியோருக்கும் தாங்களே பெரியசாதிகள் என்று சொல்லித்திரியும் சில வேஷபிராமணர்களை சில ஐரோப்பியர்கள் தருவித்து உங்களுக்கு வேதமுண்டா அவற்றைப் பார்க்கவேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள்.

அதினால் தற்காலமுள்ள வேதத்தில் அரைபாகத்தை அக்கினியைத் தெய்வமாகத் தொழும் பாரீசுசாதியோருள் ஒருவராகிய தாராஷ்கோ என்பவர் பாரீசுபாஷையில் கொண்டுவந்து கொடுத்திருக்கின்றார்.

இப்பாரீசு சாதியாரால் பாரீசுபாஷையில் தற்காலமுள்ள வேதத்தின் பாதிபாகம் முதலாவது வெளிவந்து கல்கத்தா கண்காட்சி சபையில் வைக்கப்பட்டது.

இவ்வேதங்களிலுள்ளப் பெரும்பாகங்களையும் பாரீசுசாதியார் வேதமாகும் ஜின்டவிஸ்பா என்னும் நூலிலுள்ளவைகளையும் ஒத்திட்டுப் பார்ப்போமாயின் இருவர் அக்கினியின் தொழுகைகளும் மந்திரங்களும் பிராமணங்களும் பொருந்தக் காணலாம்.

பாரீசுசாதியார் தாராஷ்கோ என்பவரால் வந்த பாதி வேதக்கதைகளுடன் பௌத்ததருமச் சரித்திரங்களில் சிலதையும் நீதி நெறி ஒழுக்கங்களில் சிலதையும்