பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /547


முதன் மும்மொழியையே முதன்மொழி என்றும் வரையாக் கேள்வி என்றும் வழங்கி, வரிவடிவாம் அட்சரங்கள் ஏற்பட்ட போது அவற்றை ஆதி பீடம் என்றும், ஆதி நூல் என்றும், ஆதி வேதம் என்றும் வழங்கலாயினர்.

முன்கலை திவாகரம்

ஆதிநூ லெழுதாக்கேள்வியாரண மொத்துசாகை
யேதமில் சுருதி தன்னோடிருக்கிவை யேழும் வேதம்
வேதநூற் பொருளினாமம் விதித்திடு ஞானபாகை
ஆதியாங் கருமபாகை அறுத்தபாகையுமாமென்ப.

மெய்தெரி யாரணந்தான் வேதத்தின் ஞானபாகை
மையலுட் பொருளினாம மற்றுப நிடதமென்ப
வைதிக வேதமுற்ற மார்க்கமே பார்க்குங்காலை
பையம லிருக்கினோடு பிடகமே யாதிவேதம்.

பாபஞ் செய்யாதிருங்கோள் என்னும் வேத வாக்கியத்தின் உட்பொருளே கன்மபாகை என்றும், அவையே மெய்யற விசாரமும், நன்மெய்க்கடை பிடியுங்கோள் என்னும் வேதவாக்கியத்தின் உட்பொருளே அறுத்தபாகை என்றும், அவையே மெய்ப்பொருள் நிலையும், இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் வேதவாக்கியத்தின் உட்பொருளே ஞானபாகை என்றும், அவையே மெய்யின்ப சுகமாதலின் வீடுபேறு என்றும் பேரின்ப நிலை என்றும், முத்தி என்றும், நிருவாணம் என்றும் வகுத்தார்கள்.

கன்மபாகை, அறுத்தபாகை, ஞானபாகையாம் வேதத்தின் உட்பொருளை விளக்குவான் வேண்டி, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேத வாக்கியங்களாக வரைந்து அவற்றையே நான்கு வேதவாக்கியங்கள் என்றும் நான் மறை என்றும் வழங்கலாயினர்.

திரிபீடம் என்றும், சதுர்மறை என்றும் பாலிபாஷையிலும் சமஸ்கிருதத்திலும் வழங்கியுள்ள முதனூலுக்கு திராவிடபாஷையில் திருவள்ளுவநாயனார் இயற்றிய வழி நூலாந் திரிக்குறளுக்கு தமிழ் வேதம் என்னும் பெயரையும் அளித்துள்ளார்கள்.

நான்கு பேதவாக்கியங்களும் போலுமேலும் தெளிந்துக் கொள்ளற்கு உட்பொருளாம் உபநிட்சயார்த்தங்களை பேதவாக்கியம் ஒன்றுக்கு எட்டு உபநிட்சயார்த்தங்களாக நான்கு பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உபநிட்சயார்த்தங்களை வகுத்துள்ளார்கள். அவைகளுக்கே பாலிபாஷையில் உபநிடதங்கள் என்றும், உபநிஷத்துக்கள் என்றும், உபநிட்சய அருத்தங்கள் என்றும் வகுக்கப்பெற்றது.

- 2:13; செப்டம்பர் 9, 1908 -

புத்தபிரான் ஓதிய மும்மொழி விளக்கத்தை முதநூல் என்றும், ஆதி நூல் என்றும் வழங்கி வந்தார்கள்.

நன்னூல் விளக்கம்

வினையீனீங்கி விளங்கிய வறிவின் / முனைவன் கண்டது முதநூலாகும்.

ஆதி நூலென்றும் முதநூலென்றும் வழங்கிய திரிபீட வாக்கியங்களையே வேதநூல் என்றும் வழங்கி வந்தார்கள்.

முன்கலை திவாகரம்

ஆதிநூலென்பது - வேதநூற்பெயரே.

இத்தகைய வேதநூலின் உட்பொருள் நுட்பங்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு உபநிடதங்கள் என்று வழங்கலாயினர்.

முன்கலை திவாகரம்

உபநிடதம் வேதத்தினுட்பொருள் நுட்பம்.

வேதவாக்கியம் ஒன்றுக்கு எட்டு உபநிடத உட்பொருள் நுட்பங்களைக் கூறி நான்குவகை பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உபநிடத உட்பொருள் நுட்பங்களைக் கூறியுள்ளார்கள்.

அதாவது:-

1. அன்னியப் பிராணிகளின் மீது கோபங் கொண்டு அவைகளைத்