பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

548/அயோத்திதாசர் சிந்தனைகள்

துன்பஞ்செய்தலால் உண்டாகும் கெடுதிகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு காலாக்கினி உபநிடதம் என்றும்,

2. அன்னியர்கட்பொருளை அவர்கள் அநுமதியின்றி அபகரித்தலால் உண்டாகும் கெடுதிகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு காத்தியாயன் உபநிடதம் என்றும்,

3. அன்னியரைக் கெடுக்கவேண்டும் என்று தீங்கு நினைத்தால் தனக்குண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு முண்டிர உபநிடதம் என்றும்,

4. அன்னியர் தாரத்தை அபகரித்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு ஆர்ணிக பகுவபஞ்சக உபநிடதம் என்றும்,

5. அன்னிய சீவப்பிராணிகளைக் கொலைச் செய்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பெளண்டரீக உபநிடதம் என்றும்,

6. அன்னியர் மனம் புண்பட வார்த்தைப்பேசுதலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சுரோர்த்தாக்கினிய உபநிடதம் என்றும்,

7. அன்னியர்களை வஞ்சித்துத் துன்பப்படுத்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பாராக உபநிடதம் என்றும்,

8. அன்னியர்கள் அறிவை மதுவூட்டி, மயக்கச் செய்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சுராபாநீய உபநிடதம் என்றும்,

எட்டு கன்மபாக அஷ்டக உட்பொருளை விளக்கியுள்ளார்கள்.

1. அன்னியர்களுக்கு உண்டாகும் துன்பங்களை அகற்றி தண்மெய் அடையச் செய்தலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு நாராயண உபநிடதம் என்றும்,

2. அன்னியருக்கில்லா பொருளீய்ந்து ஆதரித்துத் தன்னைப்போல் சுகம்பெறக்கருதிச் செய்யும் நன்மெயால் உண்டாகும் சுகத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பிரமபிந்து உபநிடதம் என்றும்,

3. அன்னியர்களைத் தன்னைப்போல் நேசித்து ஆதரிக்குஞ் செயலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு தேசோபிந்து உபநிடதம் என்றும்,

4. அன்னியர் தாரங்களைத் தங்கள் தாய் தந்தையர்களைப் போல் கருதி ஆதரிக்கும் நன்மெய் செயலால் உண்டாகும் பயனை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு வாசிராயநீய உபநிடதம் என்றும்,

5. அன்னிய சீவப்பிராணிகளை ஆதரித்து அவைகளுக்கோர் தீங்கு வராமலும் காத்தலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு அங்கிச உபநிடதம் என்றும்,

6. அன்னியர் மனமும், உடலும் பூரிக்கத்தக்க மிருதுவான வார்த்தைப் பேசுதலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு போதாயநீய உபநிடதம் என்றும்,

7. வார்த்தைப் பேசுவதில் அன்னியர்கள் பலனடையக்கூடிய வார்த்தைகளைப் பேசுவதில் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு வார்ச்சியநீய உபநிடதம் என்றும்,

8. அன்னியர்கள் அறிவை வளரச் செய்யும் வாய்மெய்களைப் போதித்து அமுதுண்ணும் பாதையில் ஏறச் செய்தலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சாங்கியாயநீய உபநிடதம் என்றும்,

எட்டு அர்த்தபாகை யஷ்டக உட்பொருளை விளக்கியுள்ளார்கள்.

1. தன்னிடத்து உண்டாகும் கோபத்தை தங்கவிடாமல் அகற்றி சாந்தத்தை - நிறப்பச்செய்தலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரம் உபநிடதம் என்றும்,

2. தன்னிடத்து உண்டாகும் காமத்தை தங்க விடாமல் அகற்றி அன்பைப் பெருகச் செய்தலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு கடம் உபநிடதம் என்றும்,