பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மேலேறி இருகண்களின் மத்திய நாசிமுனையைத்தாவி சிரசின் உச்சியைக் கடந்து பிடரிவழியில் இறங்கி வலது முதுகின்புறம் இழிந்து கொப்புழென்னும் உந்தியில் கலந்து நிற்கும்.

அந்நாடிக்கு குண்டலி என்றும் அதன் குழலுக்கு பிரம்மரந்தினம் என்றும் கூறப்படும்.

குண்டலி என்னும் பெயர் வாய்த்தக் காரணம் யாதென்பீரேல், குழவி கருப்பையில் அடங்கியிருக்குங்கால் உள்மார்பிற்கும், முதுகிற்கும் ஓடிக் கொண்டிருந்த மூச்சானது கருப்பையைவிட்டுக் குழவி வெளிவந்து விழுந்தவுடன் வாய்திறந்து கா - கூ என்று கூச்சலிடுங்கால் நாசியுந் திறந்து உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்த மூச்சு உள்ளுக்கும் வெளிக்கும் ஓடும்படி ஆரம்பித்துக்கொள்ளுகின்றது. அவ்வாரம்பத்தால் முன்பு உள்ளுக்கு ஓடும் வழி கொடுத்திருந்த நாடியானது குளிர்ச்சியால் மண்டலமிட்டு சுருண்ட பாம்புபோல் உந்தியினிடமாக வளைந்து அவ்வழியை அடைத்துவிடுகின்றது. கருப்பையில் நீண்டோடிக் கொண்டிருந்த நாடி குழவி வெளிவந்து விழுந்தவுடன் சுருண்டு அவ்வழி அடைந்தபடியால் அதற்கு குண்டலி நாடி என்று பெயரிட்டார்கள்.

அக்குழலுக்கு பிரம்மரந்தினமென்னும் பெயர் வந்த காரணம் யாதென்பீரேல், அக்குழலின் வழியே மூச்சை மறுபடியும் உள்ளுக்குத் திருப்பிக் கொண்டவனுக்கு மாளாப்பிறவி துக்கமற்று நிருவாணசுகம் உண்டாகிறபடியால் அதின் நற்செயலுக்காய் அக்குழலுக்கு பிரம்மரந்தினம் என்னும் பெயரை அளித்துள்ளார்கள்.

அப்பிரம்மரந்தினக் குழலுள்ள நாடி இடது மார்பிற்கும், வலது முதுகிற்கும் சுற்றி நிற்கின்றபடியால் அப்புலனைத் தெரிந்துக் கொள்ளும் உபநயனமாம் உள்விழி கண்டசாதனனென்று உலகோரறிந்து வேண்வுதவி புரிந்து வருவதற்காக மதாணி பூணுநூலென்னும் முப்புரி நூலை இடது மார்பிற்கும், வலது முதுகிற்குமாக அணைத்துக் கொள்ளும்படிச் செய்து அவனை இல்லறவாசிகளுக்குக் காண்பித்து இந்நூல் அணைந்த அடையாளம் பெற்றவன் ஐம்புலனடக்குந் தென்புலத்தானாதலின் நீங்கள் யாவரும் அவனுக்கு வேண்டிய உதவிபுரிந்து கடைத்தேறச் செய்ய வேண்டும்.

உங்கள் உதவியால் அவ்வொருவன் கடைத்தேறுவானாயின் உயர்ந்தோனால் உலகமும் கடைத்தேறும். ஆதலின் மதாணிப்பூநூல் மார்பிலணைந்துள்ள ஒவ்வொரு ஞானசாதகர்களுக்கும் புத்தசாங்க வியாரங்களுக்குச் சென்று இல்வாழ் மக்கள் வேண உதவி புரிந்து வந்தார்கள்.

மண்டலமிட்ட குண்டலநாடி அறிந்தோனென்று மக்கள் அறிந்து கொள்ளுமாறு மதாணி பூணூல் மார்பில் அணையும் ஓர் அடையாளம் இட்டுள்ளார்கள்.

இப்பூணுநூல் அடையாளம் ஞானசாதகர்க்கு புத்தபிரான் காலத்திலேயே அளித்துள்ளதாகும்.

பின்கலை நிகண்டு

காப்புக்கு முன்னெடுக்குங் / கடவுடான் மாலேயாகும்
பூப்புனை மலரின் செவ்வி / புனைபவ னாதவானும்
காப்பவ னாதலானுங் / கதிர்முடி கடகத்தோளில்
வாய்ப்பதா மதாணி பூணூல் / வரிசையிற் புனைதலானும்.

மணிமேகலை

புரிநூன் மார் பிற்றிரி புறவார்சடை
மரவுரியாடையன் விருட்சிகனென்போன்.

இத்தகையப் பூணுநூலுக்கு ஆதாரமாகும் குண்டலி என்றும், பிரம்மரந்தினம் என்றும் வழங்கும் நாடியின் மகத்துவத்தை அடியில் குறித்துள்ள பாடலால் காணலாம்.

சிவவாக்கியர்

உருதரித்த நாடிதன்னி லோடுகின்றவாயுவை
கருத்தினாலிருத்தியேகபாலமேற்றவல்லிரேல்