பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்./557

உலாவுகின்றார்கள். இவர்களையே சீவன்முத்தர்கள் என்றும், சீவகர்கள் என்றும் கூறப்படும்.

சிலப்பதிகாரம்

தண்ணலம் பெருந்தவத் தாசீவகர்முன் / புண்ணியதானம் புரிந்தறங்கொள்ளவும்.

கீடாதிகளாம் புழுக்களானது ஓர் இலையால் தன்னைமூடி திரண்டுருண்டு சிலகால் தொங்கலாடி வெடித்து இறகுகளுண்டாகி பறந்து போவது போல் புத்த சங்கத்தைச் சேர்ந்த அறஹத்துக்களாகும் அந்தணர்கள் தாங்கள் இரு பிறப்படைய ஓர் திங்களிருக்குங்கால் சங்கத்தோர்களுக்கும், அத்தேசவரசனுக்குந் தெரிவித்து தங்கள் வியாரத்துக்கருகில் ஓர்கல் அறைக்கட்டி அதற்குத்தக்க சதுரரைக்கல் மூடியொன்று செய்வித்து கல்லறையில் சாம்பலையும், கற்பூரத்தையும் கொட்டி அமாவாசையிலேனும் பெளர்ணமியிலேனும் அறறத்துவானவர் அதில் உட்கார்ந்து சதுரக்கல்லால் மூடிவிடச் செய்து ஆதிக்குச்சமமாய் சுயம்பிரகாசமாக வெளிதோன்றி இருபிறப்பாளனாவர், இதுவே சம ஆதி, சாமாதி என்று கூறப்படும். புத்தராம் ஆதிக்குச் சமமான நிலையாம்.

இத்தகையச் சமாதியடைந்தவர் அரசனேயாயினும் அன்றேல் அரசவங்கத்துள் சேர்ந்த ஒருவராகவேனும் இருந்திருப்பாராயின் அவரது தன்மகன்மக்கிரியைகளுக்கு உரியவர்கள் யாவரும் பதினைந்தாநாள் மாலை வாகனமின்றி நடந்துவந்து கல்லறையணுகி அறஹத்தோ, அறஹத்தோ எனும் சப்தம் இட்டு அறையின்மேல் மூடியுள்ள கல்லை எடுப்பார்கள். அக்கால் அவருடைய சிரசின் உச்சிவெடித்து பீடங்கலையாமலுஞ் சிரங்கவிழாமலும் இருக்குமாயின் சகலரும் அறத்தோ எனும் பெருங்கூச்சலிட்டு ஆனந்தம் கொண்டாடி கற்பூரத்தாற் குழியை மூடி முன்சதுரக்கல்லால் அடைத்து பீடிகையை கட்டிவிட்டு கன்மத்தின் ஆதியாய தன்மகன்மமாகும் ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானம் முதலியவை செய்வதுமன்றி வருடந்தோரும் அவர்பெயரால் அத்திதியன்று தன்மகன்ம அன்னதானஞ் செய்துவருவார்கள்.

இவ்வகையாய் இல்லத்தைவிட்டு சமாதி அறைவறையிலும் வாகனமின்றி நடந்துசெல்லுவதை நடப்பென்றும், அறையின்மீது மூடியுள்ளக் கல்லை எடுப்பதை கல்லெடுப்பென்றும் வழங்கப்படும்.

இத்தகையக் கல்லெடுப்பு சோதனையால் சிரசின் உச்சி வெடிக்காமல் முடிசாய்ந்து துஞ்சிகிடக்குமாயின் மைந்தனும் மக்களும் தங்கள் தந்தை சமாதி என்னும் மரணத்தை ஜெயித்த ஆனந்தத்திற்கு வராமல் இறந்தார் என்னும் இழிவுக்கு வந்தோம் என்று துக்கித்து கல்லறையை மூடிவிட்டு இல்லஞ்சேர்ந்து தங்கள் முடிகளைக் கழட்டி எறிந்துவிட்டு நமது தந்தை ஞானவீரனாகும் ஆண்பிள்ளையாகாமல் விழலாய்ச் சங்கஞ்சார்ந்த வீண்பிள்ளை ஆயினரென்று தங்கடங்கள் மீசைகளையுஞ் சிறைத்துவிட்டு துக்கத்திலிருப்பார்கள்.

ஞானவானாகாமல் யீனவான் ஆனாரென்னும் துக்கத்தை ஆற்றுதற்கு தங்கள் குடும்பத்தோர் யாவரும் வந்துசேர்ந்து உங்கள் தந்தை மரணத்தை ஜெயிக்காமல் பிறவி துக்கத்திற்கு ஆளாயினர் என்னும் கவலையால் முடியைக் கழட்டி எறிந்துவிட்டும், மீசையை சிறைத்துவிட்டும் இருப்பது சரியல்ல.

பதினாறாவது நாள் நாங்கள் யாவரும் கூடி உன் தந்தை தறித்த முடியை மறுபடியும் தறிக்கின்றோம் நீவிரதைத் தறித்துக் கொண்டு இராட்சியந்தாங்கி உன்மைந்தனுக்கு முடிசூட்டிவிட்டு புத்தசங்கஞ்சார்ந்து சமணநிலைக்கடந்து அறஹத்துவாகி மரணத்தை ஜெயித்து மகாபரிநிருவாணம் அடைவாயாக வென்று ஆசீரளித்துப் போவார்கள். இதுவே மரணமடைந்த இழிவுக்காய் மீசைசிறைத்து முடியை கழற்றியெறிந்து நீராடி இழிவுக்குப் போனோம் என்னும் கல்லெடுப்பு எனப்படும்.

இல்லறத்தோர்க்குள்ளும், துறவறத்தோர்க்குள்ளும் உண்டாகும் செயல்களில் இறந்தார் என்னும் இழிவையும், துறந்தார் என்னும் மகிழ்வையும் கொண்டாடி சகலருக்கும் ஞான உற்சாகத்தை உண்டாக்கிக் கொண்டு வந்தார்கள்.

அத்தகைய தன்மகன்ம உற்சாகங்களானது அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என்பதற்கு இணங்க புத்தமார்க்க அரசர்கள் எவ்வகையில்