பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்/561


மணிமேகலை

கடவுள் பீடிகை தொழுதனளேத்தி

சீவகசிந்தாமணி

காதிக்கண்ணறிந்து வென்ற / வுலகுணர் கடவுள் காலத்
தாதிக்கண் மரங்கள் போன்ற / வஞ்சொலீ ரிதனினுங்கள்
காதலிற் காணலுற்ற / விடமெலாங் காண்மினென்றா
திக்கணின்ற செங்கோ / னிலவுவீற்றிருந்த பூமான்.

இவைகளுக்கு முதலாதரவாகத் திருவள்ளுவ நாயனார் தானியற்றியுள்ள திரிக்குறள் பாயிரத்தில் கடவுள் வாழ்த்தென்று கூறி அப்பத்து பாடலிலும் புத்தபிரானையே சிந்தித்திருக்கின்றார்.

மக்களுள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறிகளை அவித்து காமனை வென்றார்கள் என்னும் பெண்ணிச்சையை ஒழித்தவர்களை ஐந்திரரென்றும், இந்திரரென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

சீவகசிந்தாமணி

ஆசையார்வ மோடைய மின்றியே / யோசைபோ யுலகுண்ண நோற்றபி
னேசுபெண்ணொழித் திந்திரர்களாய் / தூயஞானமாய்த் துறக்கமெய்தினார்.

மக்களுள் ஆதியாய் இந்திரியங்களை வென்ற வரும், ஐந்தவித்த வல்லபத்தால் ஆதி இந்திரரென்னும் பெயர்பெற்று அவர் ஞானவருள் பெற்ற தேவர்களால் வானவர் கோமானாகக் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரானேயாம்.

திரிக்குறள்

ஐந்தவித்தானாற்றவகல்வி சும்புளார்க்கோமான் / இந்திரனே சாலுங்கரி.

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோடாரம்ப / முந்தி துறந்தான் முநி

மணிமேகலை

இந்திரரெனப்படு மிறைவகம்மிறைவன் / றந்தநூற் பிடகத் தாயாமுன்முதலா,

சீவகசிந்தாமணி

ஏத்தரிய பல்குணங்கட் கெல்லைவரம்பாகி / நீத்தவரு விந்திரவை நின்று தொழுதிமரர்
நாத்தழும்ப வேத்திதவ நங்கைவர் நண்னித் / தோத்திரங்களோதிதுகண்மாசு துணிக்கின்றார்.

சூளாமணி

மந்திர மாந்தர் மொழிதலும் வாணிடை / யந்தரம்வாழு மமரர் வழிபடுந்
தந்திரஞான்ற தவத்திற் சுரசனா / மிந்திர னன்னாற் கெடுத்துரைக்கின்றான்.

மநுக்களுள் காம, வெகுளி, மயக்கங்களாம் முக்குற்றங்களையும் அகற்றி அன்பை பெருக்கி இறவாநிலையாகும் நிருவாணத்தை அடைகின்றார்களோ அவர்களையே சிவனென்றும், மக்கள் கதியிற் சிறந்து தேவகதியாம் சிவகதி அடைந்தோரென்றுங் கூறியுள்ளார்கள்.

திருமூலநாயனார் - திரிமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலார் / அன்பே சிவமாவதி யாருமறிகிலார்
அன்பே சிவமாவதி யாருமறிந்தபின் / அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே.

சிவயோகசாரம்

தானோவசத்தல்ல வென்றறிந்தாற் றாரணியி
லேனோபிழைத்திடுவானேழைதான் - றானே
யிறவாவதுணீகா ணிற்கவருளின்
மறவாதிரு சிவமாவை.

சீவகசிந்தாமணி

வலம்புரிந்துடம்புநீங்கா தகுந்தவ முயன்மின் யாருஞ்
சிவம்புரி நெறியைச்சேர செப்புமிப் பொருளுங்கேண்மிண்

காசிக்கலம்பகம்

வல்லாண்டகண்டத் தெம்மாதிப் பிரானவி முத்தத்திலே
சில்லாண்டிருந்து சிவமாய் செலுஞ் சில செந்துக்களே.

இத்தகைய அன்பின் மிகுதியால் ஆதிசிவனென்றும் சகலருக்கும்